ம(மா)ரியம்மா – 10

This entry is part 10 of 14 in the series ம(மா)ரியம்மா

அதைக் கேட்டதும் உற்சாக மிகுதியில் துள்ளும் உதவி பாஸ்டர் கேட்கிறார் : யாரு அச்சோ… நயன்தாரா, சமந்தா, அசின், த்ரிஷாவா..?

இங்க என்ன ஐட்டம் சாங்கா எடுக்கப்போறோம்?

அது சரி அவங்கள்லாம் இந்தப் பொட்டல் காட்டுக்கு எப்படி வருவாங்க..? ஊட்டி, கொடைக்கானல், ஃபைஸ்டார் ஹோட்டல்ல மீட்டிங் வெச்சா வருவாங்க. அப்ப இங்க யாரு வரப்போறாங்க..?

இப்ப சும்மாத்தான் இருக்கேன். நான் வர்றேன்னு பிரகாஷ் சொன்னான்.

அவரு சொன்னா யார் அச்சோ ஏத்துக்கப் போறாங்க?

அதான் நானே, நீ எப்ப சோலியா இருந்த? மோதியை எதிர்த்து நாலு ட்வீட் போட்டோமா நாலு காசு தேத்தினோமான்னு இருந்துக்கன்னு சொல்லிட்டேன்.

அதுவும் போக இப்பல்லாம் சினிமாக்காரனுங்களோட சாயம் வெளுக்க ஆரம்பிச்சாச்சு அச்சோ. பாகுபலின்னு ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் அடிச்சானுங்க. அப்பறம் ஆர்.ஆர்.ஆர்.னு மிரட்டினானுங்க. அகண்டா அகோரில்லாம் வேற லெவல்.

தெலுங்கு படங்களை விடு மக்கா. அது பாட்டுக்கு ஒரு ஓரமா கொஞ்ச நாள் எரிஞ்சுட்டு அணைஞ்சு போயிரும். அதோட, ரெட்டியை வெச்சு திருமலைல நாம பதிச்சு வெக்கற கண்ணி வெடிகள், ஆந்திர முழுக்க நடக்கற குருசு நடவு இதெல்லாம் நியூஸ்ல வராம பார்த்துக்க இந்த மாதிரியான நாலைஞ்சு படங்கள் வர்றது நமக்கு நல்லதுதான்.

ஆனா, அந்தப் படங்களைப் பார்த்து மக்கள் மத்தியில வர்ற இந்து உணர்வு நமக்கு எதிராத்தான ஃபாதர் திரும்பும்.

அதெல்லாம் திரும்பாது. அந்தப் படத்துலயே கூட நம்ம கைவேலை உண்டு தெரியுமா..?

அதுல எங்க அச்சோ நம்ம டூல் கிட் இருக்கு? புள்ளையாரு, கிருஷ்ணரு, ராமரு, சிவன்னு வளைச்சு வளைச்சு இந்து ராஜ்ஜியத்தைல்ல அதுல காட்டியிருக்கானுங்க.

அங்க தான் தப்பு பண்ற… நுட்பமா நம்ம ஊசியைச் செருகியிருக்கோம். அந்தப் படத்துல வில்லன் பரமேஸ்வரன் சாட்சியான்னு சொல்லி பதவி ஏத்துப்பான். ஆனா பாகுபலியோ அம்மா மேல சத்தியமான்னு சொல்லித்தான் பதவி ஏத்துப்பான்.

ஆனா வனவாசியா இருந்தப்போ சிவ லிங்கத்தைத் தூக்கிட்டு டேன்ஸ்லாம் ஆடுவாரே.

அம்மாதான் சிவனுக்கு அபிஷேகம் செய்யணும்னு ஆசைப்படுவாங்க. அம்மாவோட ஆசையை நிறைவேத்தத்தான் சிவ லிங்கத்தைத் தூக்கி அருவிக்கு கீழ வைப்பாரு. அப்பக்கூட உன் சிவனோட உச்சி குளிரும்னு தான் சொல்லுவாரு. நம்ம சிவன்னு சொல்லமாட்டாரு. எவன் இந்து கடவுள் கிட்ட இருந்து விலகி அம்மாவே தெய்வம், ஆட்டுக்குட்டியே தெய்வம், சாய் பாபாவே தெய்வம், எம்மதமும் சம்மதம்னு சொல்லிட்டு நிக்கறானோ அவனை நம்ம பக்கம் கொண்டு வர்றது ரொம்ப ஈஸி. அந்தக் கதை நடந்ததா சொல்ற காலகட்டத்துல ஒண்ணு வெற்றி வேல் வீர வேல்னு கோஷம் போட்டிருப்பானுங்க. ஹரஹர மஹாதேவ்னு கோஷம் போட்டிருப்பானுங்க… ஜெய் ஸ்ரீராம்னு கோஷம் போட்ருப்பானுங்க. ஓம் காளி ஜெய் காளின்னு முழங்கியிருப்பானுங்க. ஆனா பாகுபலில என்ன சொன்னானுங்க பார்த்தியா..?

ஜெய் மகிழ்மதி…!

ஆமாம். அந்தக் கண்றாவி கோஷத்துக்கு என்னடே அர்த்தம்?

அது தேசப்பற்று அச்சோ.

என்ன தேசப்பற்றுடே? சோழர்கள் ஜெய் தஞ்சாவூர்ன்னா கோஷம் போட்டானுவ. பாண்டியன் ஜெய் மதுரைன்னா கோஷம் போட்டானுவ. ஒரு இந்துவுக்கு அவன் கும்பிடற சாமி தானடே எல்லாம்.

அப்போ நேஷன் ஃபர்ஸ்டும் நம்ம வேலைதானா?

பின்ன..? தளபதி கட்டப்பாவை அடிமைன்னு காட்டியிருந்தானுங்க. முஸ்லிம் தளபதியை அடிமைகளை விடுதலை செய்யறவனா காட்டியிருப்பானுங்க.

ஆர்.ஆர்.ஆர்ல வனவாசிக்கு அடைக்கலம் தர்றது ஒரு முஸ்லிம்னு காட்டினானுங்க. அவருமே குல்லா போட்டுக்கிட்டுத்தான் படத்துல நிறைய சீன்ல வருவாரு அச்சோ.

அது மட்டுமா ஜல், ஜமீன் ஜங்கல் (நீர், நிலம், காடு) இதைக் காப்பாத்த நடந்த போராகத்தான் அதையும் காட்ட வெச்சிருப்போம். பிரிட்டிஷ் காலகட்டக் கதையில ஒரு பாதிரியைக்கூட காட்டவிடாம செஞ்சிருக்கோம் பாரு; அங்க நாம நிக்கறோம். அடுத்ததா திப்பு சுல்தான் படம் மட்டுமில்ல… ஔரங்கஜீப்பை ஹீரோவா வெச்சுக்கூட படம் எடுக்கவைக்க முடியும். கவலையே படவேண்டாம். இந்த உலகத்துல நடக்கற எல்லாமே நாம நடத்தி வைக்கறதாத்தான் இருக்கும். நம்மை மீறி எதுனாச்சும் நடந்தா அதை நம்ம பக்கம் கொண்டுவரவும் நம்மால முடியும். ‘

இப்ப காஷ்மீர் ஃபைல்ஸ்னு ஒரு படத்துல இஸ்லாமியத் தீவிரவாதத்தை அப்படியே காட்டிட்டானுங்களே.

அதான் பிளானே. இந்துக்களை ஒரு பக்கம் இந்திரன் சந்திரன்னு கொம்பு சீவி விடணும். ஐய்யோ முஸ்லீமை விரட்டியடிக்கப்போறானுங்கன்னு அந்தப் பக்கமும் கிளப்பிவிடணும். ரெண்டு பேரும் கெடந்து முட்டிக்கிட்டு சாகணும். நாம வந்து அன்பா இருங்க… அமைதியா இருங்கன்னு நற்செய்தி சொல்லி நாட்டையே முழுங்கிடணும்.

ஆனா அவனுங்க கேரளால ட்ரான்ஸ் மாதிரியான படங்களை எடுத்து நம்மளை எதிர்க்க ஆரம்பிச்சுட்டானுங்களே. அது தமிழ்ல வேற வரப்போகுது.

இதெல்லாம் சும்மா கொசுக்கடி மாதிரி. நம்ம க்ரூப்லயும் நிறைய நடுநிலைகள் உண்டு பார்த்துக்கோ. ஐரோப்பா அமெரிக்காலல்லாம் நம்மை அண்டர்வேர் கூட இல்லாம நடுத்தெருல ஓடவிட்டு அடிப்பானுங்க. நாம அதையெல்லாம் கண்டுக்காம இங்க இயேசுவே மீட்பர்னு இறங்கி அடிக்கணும். 200 வருஷமா அடிமைப்படுத்தின பிரிட்டிஷாருக்கே எடுபிடிகளா எக்கச்சக்க உருப்படிகளை உருவாக்கி வெச்சிருக்கோம். உலகத்துல சர்ச் செஞ்சதெல்லாம் இங்க எவனுக்கும் தெரியாது. வெளிநாட்டுல இருந்து நமக்கு ஆதரவு கிடைக்கறவரை இங்க நாமதான் கிங். கிங் மேக்கரும் நாமதான்.

இப்பத்தான் வெளிநாட்டுல இருந்து வர்ற பணத்தை முடக்கிட்டானுங்களே அச்சோ. முந்தி மாதிரி நாம எதையும் செய்யவே முடியாதே.

யார் சொன்னா? அதுவும்போக நமக்கு வெளிநாட்டுப் பணம் எதுக்கு? ஒவ்வொரு இந்து அரசும் சிறுபான்மைக்குன்னு அள்ளி அள்ளிக் கொடுக்குது. கொடுக்கவெச்சிருக்கோம். மதச் சார்பின்மைன்னா என்ன அர்த்தம் தெரியுமுல்ல…. இந்து மதச் சார்பின்மை. அப்பறம் தலித்துக்குன்னு கொடுக்கற அம்புட்டையும் நம்ம தலித் கிறிஸ்டியனுக்கு கிடைக்க எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்கோம். நலிவடைந்தவர்களுக்கு, இளைஞர்களுக்கு, ஜல் சக்தி, ஆத்ம நிர்பர்னு என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதிகாரவர்க்கத்துல இருக்கற நொட்டாங்கைகள், திராவிட அல்லக்கைகள் எல்லாம் எல்லாத்தையும் நம்மளுக்குத்தான் தருவானுங்க. இது மட்டுமா… இந்து கோவில் சொத்து முழுசும் அப்படியே நாமதான் சுருட்டிக்கிட்டிருக்கோம். இது ஈ.வெ.ரா மண்ணு இல்லைன்னு ஒவ்வொரு கோவில் திருவிழா கூட்டத்தையும் காட்டி கெக்கெ பிக்கேன்னு சிரிப்பானுங்க… இவனுங்க கோவிலுக்குக் கொண்டு கொட்ற பணமெல்லாம் நேரா நம்ம பாக்கெட்டுக்குத்தான் வருது. அது தெரியாது இந்த ஈர வெங்காயங்களுக்கு. கிறிஸ்தவரா இருந்து தர்றது தசம பாகம். இந்துவா இருந்து தர்றது பச்சாஸ் பாகம். பீஸ் தீஸ் சாலிஸ்லாம் இல்லை. கோவில்கள் மூலமா இந்துக்கள் நமக்குத் தர்றது ஃபிப்டிக்கு மேல மக்கா. வெளிநாட்டுல இருந்து வர்ற பணத்தைவிட இது பல மடங்கு இருக்கும்.

அப்பறமும் ஏன் நம்ம ஆளுங்க குய்யோ முய்யோன்னு கத்துறானுங்க.

அதெல்லாம் சும்மா ஆக்டிங். அவனுங்க என்னமோ நம்மளைக் கட்டம் கட்டி மட்டம் தட்டி வெச்சிட்டதா ஒரு பொய்யான நம்பிக்கையை அவனுங்களுக்குத் தந்துட்டுவர்றோம். இப்ப பத்து வருஷமா அவனுங்க எது செஞ்சாலும் எதிர்க்க ஆரம்பிச்சிட்டோம்ல. அடி பலம்னு அவனுங்க மெதப்புல இருக்கானுங்க. இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுவெச்சிருக்கோம். மத்தபடி நம்ம கால்ல இருக்கற மசுரைக்கூட அவனுங்களால பிடுங்கமுடியாது. இவ்வளவு ஏன் தமிழ் நாட்டுல இன்னிக்கு சினிமால இருக்கறவனுங்கள்ள விஜய், விக்ரம், விஷால், சித்தார்த், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, அஜீத், சீமான், ரஞ்சித், நெல்சன், அட்லி, கமல், ரஜினின்னு அத்தனை பேருமே நம்ம ஆளுங்கதான். எவனுக்காவது எந்த சந்தேகமாவது இதுவரை வந்திருக்கா..?

ரஜினியுமா..?

ஏன். என்ன சந்தேகம். திமுகவுக்கு ஆதரவுன்னா நமக்கு ஆதரவுன்னு தான அர்த்தம்.

ஆனா அவரும் படங்கள்ல இந்துவா தான வர்றாரு? அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பான்னு பக்திப் பழமாத்தான இருந்தாரு. இப்ப ஒரு டி.விசீரியல்ல நடிச்சாரே. அது கூட ஒரே இந்து மயம் தான.

அங்கதான் தப்பு பண்ற நீ. கபாலி, காலா, பேட்டைல என்ன பண்ணினாரு பார்த்தல்ல. இவ்வளவு ஏன் அவர் பாபான்னு கும்பிடறது வேற யாருமில்லை. இயேசுவைத்தான். அவர் வீட்ல இயேசு படம் மாட்டியிருப்பாரு பாத்திருக்கியா?

அது ராகவேந்திரர், ரமணர்ன்னு ஏகப்பட்ட படங்கள் இருக்கும். ஆன்மிகத்துல ரொம்பவே ஆர்வம் அதிகம்.

அவரோட ஆன்மிகம் நமக்குத் தேவையே இல்லை. அவரோட அரசியல்தான் நமக்கு வேணும். அது நம்ம பக்கம் தான் இருக்கு.

மோதியையும் அமீத்ஷாவையும் கிருஷ்ணர் அர்ஜுனர்னு புகழ்றாரு.

இப்ப இளையராஜா விவகாரத்துல என்ன பேசினாரு?

அது வந்து… அவரு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்கறதில்லையே.

இளையராஜா சொன்னது சரின்னு சொல்லத்தான் தில்லு இல்லை. இளையராஜாவுக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டுன்னு சொல்லக்கூட முடியாதா என்ன?

அவரு எந்தப் பக்கமும் சாயாத பாபவா இருக்காரு.

நன்மைக்கு ஆதரவா இல்லைன்னா தீமைக்கு ஆதரவுன்னுதான் அர்த்தம். அவங்க பக்கம் இல்லைன்னா நம்ம பக்கம்னுதான் அர்த்தம்.

சரி… இப்ப என்ன பிளான் வெச்சிருக்கீங்க. அவரா நாளைக்கு நம்ம சார்புல விவாதத்துல கலந்துக்கப் போறாரு.

நினைச்சா அவரையும் வரவைக்கமுடியும். ஆனா இப்போதைக்கு அவரோட ஆசியோட அவரோட அன்புத் தம்பி வந்து பேசப்போறாரு.

Series Navigation<< ம(மா)ரியம்மா – 9ம(மா)ரியம்மா – 12 >>ம(மா)ரியம்மா – 11 >>

5 Replies to “ ம(மா)ரியம்மா – 10”

  1. சிலருக்கு எங்க எதப்பேசனும்னு தெரியாது, படிச்சவன், படிக்காதவன் வித்தியாசம்லாம் இதுல கிடையாது –

    அவங்கவங்க வளர்ந்தவிதம் முக்கியமான காரணம்-

    கல்யாணவீட்ல போய் மாப்ளைகிட்ட “நாளைக்கே நீ ஆக்ஸிடென்ட்ல செத்துட்டா, இந்தப்பிள்ளை அனாத ஆயிடும்ல, அதுக்காக ஒரு பாலிஸி போடுன்னு” ஒரு டெத் ஒரு LIC ஏஜன்ட் பேசுனா எப்படியிருக்கும்?, சிரிக்காதீங்க நிஜமாவே இப்படிப்பட்ட ஆட்கள்லாம் இருக்காங்க, அவங்களுக்கு அவங்களோட தொழில் மட்டும்தான் முக்கியம் அதுல வர்ற பணம் முக்கியம் –

    நண்பர் ஒருத்தர்க்கு கொஞ்சம் லேட்டாக் குழந்தை பிறந்தது, பாக்கவந்த உறவினர் ஒருத்தர் “சிஷேரியனா?” ஆமா, கொழந்தைய நல்லா பாத்துக்கப்பா, ஒரு பொண்னுக்கு ரெண்டு வாட்டிதான் சிஷேரியன் பண்ணமுடியும், இப்ப இந்தக் குழந்தை ஒருவேளை இறந்திடிச்சின்னு வெச்சுக்கோ, அடுத்து ஒருவாட்டிதான் சிஷேரியன் பண்ண முடியும், அதுவும் இறந்திடிச்சின்னா அப்பறம் குழந்தையே இல்லாமப்போய்டும், புரியுதா?”- நீங்க நம்பமாட்டீங்க நிஜமாவே இப்படிப் பேசற ஆட்கள் இருக்காங்க,_

    எழவுவீட்ல போய் சிரிக்கறது, கல்யானவீட்ல ஒப்பாரி வெக்கறது, இதெல்லாம் தப்புன்னு கூட அவங்களுக்குத் தெரியாது, ஏன்னா வளர்ப்பு அப்படி –

    எனக்குத் தெரிஞ்சு ராகுலும், ஸ்டாலினும் இதே கேட்டகிரிதான்_

    நிஜமாவே ராகுல் நிறைய துக்கவீடுகள்ல சிரிச்சிகிட்டிருக்கற வீடியோல்லாம் நாம பாத்திருக்கும், அதுதான் அவரோட இயல்பு, ஒரு பிரதமர் வேட்பாளர் சீனாக்காரியோட சரக்கடிப்பாரு, சீனத்தூதர்கள ரகசியமா சந்திப்பாரு, ஐரோப்பிய யூனியன் பேச்சை இந்தியா கேட்கறதில்லைனு ஆவேஷப்படுவாரு, இந்தியா சீக்கிரம் அழிஞ்சிடும்னு சாபம்விடுவாரு, வெளிநாட்ல போய் இந்தியாவுல பாதுகாப்பு இல்லைனுவாரு, ஒரு அஞ்சறிவு இருக்கற விலங்கு கூட இப்படி நடந்துக்காது, காரணம் வளர்ப்பு மட்டும்தான்,-

    அதேமாதிரிதான் நம்ம ஸ்டாலினும், சம்பந்தமேயில்லாம முஸ்லிம் கல்யாண வீட்ல போய், இந்து திருமணம் பத்தி பேசுவாரு, கிறிஸ்துமஸ் அன்னிக்கி கிருஷ்ணரப் பத்தி பேசுவாரு, எழவு வீட்ல போய் எடப்பாடி பதவி விலகனும்னு பேசுவாரு, பூப்போடச் சொன்னா தட்டோட தூக்கிவீசுவாரு, இதுக்கெல்லாம் காரணம் வளர்ப்பு, அடுத்து அவ்வளவுதான் இவங்க அறிவு-

    நேத்து நலத்திட்டங்கள அற்பணிக்க, துவக்கிவைக்க வந்த பிரதமர் முன்னாடி ஸ்டாலின் பேசுனத நான் இப்படித்தான் எடுத்துக்கிட்டேன்-

    குடும்பத்தோட சவுதிக்குப்போயி கண்டவன் கால்ல விழுந்து 6000 கோடிக்கு மளிகைக்கடை வரப்போவுதுன்னு புளங்காகிதம் அடைஞ்ச முதல்வர், 31,000 கோடி திட்டங்கள் தர்ற பிரதமர்கிட்ட எப்படி நடந்துக்கனும், அந்த மேடைல எப்படிப்பேசனும்?, எதைப் பேசனும்னு கூடத்தெரியல்லன்னா என்ன சொல்ல? –

    அந்த 11 திட்டங்களப்பத்திக் கூட பேசவேண்டாம், இவங்க அப்பா காலத்துல ஆரம்பிச்சு ஜெயலலிதாவால நிறுத்திவெச்சு, இப்ப திரும்பவும் ஆரம்பிக்கப்போற துறைமுகம் – மதுராந்தகம் பறக்கும் சாலை பத்தியாவது பேசி ஸ்கோர் பண்ணியிருக்கலாம்-

    அதவிட்டுட்டு ஒன்றிய அரசு, குன்றிய அரசு, திராவிட மாடல்னு பேசி எதைச் சாதிக்கப்போறார் இந்த மனநலம் குன்றிய முதல்வர்னு எனக்குச் சத்தியமாப் புரியல –

    தேசப்பணியில் என்றும் –

  2. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் உலகின் பல பகுதிகளையும் ஆண்ட காலனியாதிக்க நாடுகளில் மிகவும் குரூரமானவர்கள் என்று போர்ச்சுக்கீசியர்களைச் சொல்லலாம். கொடூரர்களான ஸ்பானிஷ் கன்கஸ்டடோர்களை விடவும் பலமடங்கு இரக்கமற்ற தன்மையுடன் நடந்து கொண்டவர்கள் அவர்கள். போர்ச்சுக்கீசியர்கள் மிகப் பெரும் மாலுமிகள் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. ஆனால் மிக மோசமான நிர்வாகிகள். கிறிஸ்தவ மதவெறி பிடித்தாட்டிய கொலைகாரர்கள். கொள்ளைக்காரர்கள். தாங்கள் வென்ற நாடுகளில் வாழ்ந்த மக்களை அவர்கள் நடத்திய விதம் மானுடத்தன்மையற்றது.

    இந்தியர்களும், இலங்கைத் தமிழர்களும் போர்ச்சுக்கீசியர்களிடம் சொல்லவொன்னாத் துன்பம் அடைந்தவர்களில் அடங்குபவர்கள். ஏராளமான ஆலயங்களை இடித்தும், கட்டாய மதமாற்றம் செய்து அவர்கள் நடத்திய வெறியாட்டங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. கோவாவை மையமாக வைத்து இந்தியாவின் பல பகுதிகளையும், இலங்கையின் வட பகுதியையும் தொடர்ந்து தாக்கிக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் விஜய நகரப் பேரரசு கிருஷ்ணதேவராயர் தலைமையில் வலிமையுடன் இருந்த காலம் அது. பாமினி சுல்தான்களை அடக்குவதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த கிருஷ்ணதேவராயர் போர்ச்சுக்கீசியர்களை அடக்க அதிக முயற்சிகள் எதுவும் செய்யவில்லை. மேலும், விஜய நகரப் பேரரசுடன் போர்ச்சுக்கீசியர்கள் குதிரை வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள். எனவே தேவராயர் அவர்களை மன்னித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆனால், கிருஷ்ண தேவராயர் உயிருடன் இருந்த காலத்திலேயே திருப்பதி கோவிலைத் தாக்கிக் கொள்ளையடித்த பின்னும் (1580, தோராயமாக) தேவராயர் போர்ச்சுக்கீசியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். திருப்பதி தேவராயரின் பிரியப்பட்ட ஒரு ஸ்தலம். தன்னுடைய அத்தனை சொத்துக்களையும் திருமலைக்கு அர்ப்பணித்த மகானுபாவர் அவர். அன்று அவர் அந்தக் கோவிலுக்கு எழுதி வைத்த சொத்தின் அளவிற்கு இணையாக இன்றுவரை உலகின் எந்த அரசனும் எழுதி வைக்கவில்லை. அளப்பரிய தங்கமும், வைரமும் அந்தக் கோவிலுக்குக் கொடையாக அளித்திருந்தார். அதுவே போர்ச்சுக்கீசியர்களின் ஆசையைத் தூண்டி, திருப்பதியைக் கொள்ளையடிக்க வைத்தது. திருமலை கொள்ளையடிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில் தேவராயருக்கு வயதாகி இருந்தது. அவரது மருமகனான ராமப்பர் விஜயநகரத்தை ஆளத் துவங்கியிருந்தார். பாமினி சுல்தான்களின் தொல்லை அதிகமாகியிருந்தது. போர்ச்சுக்கீசியர்களை அடக்க ஆளில்லாமல் போனது.

    நாகூரிலிருந்த ஒரு விஷ்ணு ஆலயத்தை போர்ச்சுக்கீசியர்கள் இடித்துவிட்டார்கள் என்று கேள்விப்படும் ராமப்பர் உடனடியாக படைகளைத் திரட்டிக் கொண்டு விரைந்து வந்தார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். கோவிலைச் செப்பனிட்டு முடித்த நேரத்தில், சென்னப்பட்டினத்தின் கடற்கரையிலிருந்த ஒரு சிவ ஆலயத்தை போர்ச்சுக்கீசியர்கள் இடித்துவிட்டார்கள். எனவே உடனடியாக வரும்படி சென்னப்பட்டினத்துச் செல்வந்தர்கள் பலர் ராமப்பருக்குத் தகவல் அனுப்பினார்கள். அரை மனதுடன் சென்னப்பட்டினத்திற்கு வந்த ராமப்பர் இடிந்து கிடந்த சிவ ஆலயத்தைப் பார்வையிடுகிறார் (அந்தக் கோவிலின் மீதுதான் இன்றைய சாந்தோம் சர்ச் கட்டப்பட்டிருக்கிறது). ராமப்பர் வருவதை அறிந்த போர்ச்சுக்கீசியர்கள் கோவிலை இடித்துக் கொள்ளையடித்த செல்வத்துடன் யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் சென்று விட்டார்கள்.

    ராமப்பர் வைணவர். இடிக்கப்பட்டதோ சிவன் கோவில். எனவே அவருக்கு அதில் அதிக ஆர்வமில்லை. இருந்தாலும் தான் போர்ச்சுக்கீசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் ஒரு இலட்சம் பகோடா (அன்றைய பணம்) தரும்படி அவரை அழைத்த செல்வந்தர்களைக் கேட்டிருக்கிறார். பணம் அளிக்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. இதற்கிடையே எல்லைப்புறத்தில் பாமினி சுல்தான்களின் தொல்லை குறித்த செய்தி அவருக்கு வருகிறது. எனவே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ராமப்பர் மீண்டும் விஜயநகரம் சென்று விட்டார் (எ. நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்திய வரலாறு).

    கோவாவிலும், யாழ்ப்பாணத்திலும் போர்ச்சுக்கீசியர்கள் செய்த அட்டூழியங்களுக்குக் கணக்கில்லை. மிக மோசமானதொரு சகாப்தம் அது. பெரும்பாலான இந்தியர்களுக்கு அது குறித்த அறிவு எதுவும் இல்லை. இருந்தாலும் செய்யப்போவதுதான் என்ன?

    போர்ச்சுக்கீசிய காலனியாக 1970-கள் வரை இருந்த ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் அவர்கள் நடத்திய அட்டூழியங்கள் குறித்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கப் படிக்க கண்ணில் ரத்தம் வருகிறது என்றால் மிகையில்லை. இங்கிலாந்திற்கு ஒரு ஆஸ்திரேலியாவைப் போல, போர்ச்சுக்கீசியர்களுக்கு அங்கோலா ஒரு Penal Colony. கொலைகாரர்களையும், கிரிமினல்களையும் அங்கோலாவிற்கு நாடுகடத்தி அவர்களிடம் நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். சகட்டுமேனிக்குக் கொலைகள். கை, கால்களை வெட்டுதல். இன்ன பிற….அதனையும் விட அங்கோலாவிலிருந்துதான் அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். கடற்கரைக்கருகில் அவர்களை அடைத்து வைத்திருந்த நிலவறைகள் இன்றைக்கும் இருக்கின்றன.

    கை, கால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகள் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பு கடற்கரை மணலில் வரிசையாக மண்டியிடச் செய்யப்பட்டு, ஞானஸ்னானம் செய்யப்பட்டுக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். உற்றார், உறவினரை விட்டு கண்காணாத இடத்திற்குச் செல்லும் அடிமைக்கு அது மிக முக்கியம் பாருங்கள்!

    யேசு கிறிஸ்து உயிருடனிருந்தால் இதனைக் குறித்து என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  3. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிக்க போகிறார்களாம் தமிழக முன்களங்கள்.

    எதிர்பார்த்த ஒன்றுதானே இது . அவர்கள் நோக்கம் அண்ணாமலையின் செய்திகளை பேட்டிகளை, அரசுக்கு கொடுக்கும் பதிலடிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை நிறுத்த வேண்டும். அதை சாதித்து விட்டார்கள்.

    ஆனால் அதற்கு அவர்கள் போட்டிருந்த திட்டம் வேறு. அது நிறைவேறவில்லை. அதாவது அண்ணாமலையை எளிதில் சூடாக்கும் வகையில் கேள்விகள் கேட்டு உசுப்பேத்தி கோபத்தில் உதிர்க்கும் மரியாதை குறைவான பேச்சுக்களையோ, இல்லை அடி தடி என்று இறங்கினால் அதையோ மக்களிடம் கொண்டு சேர்த்து அவர் ஒரு பக்குவமற்றவர் என்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்குவது.

    அதாவது விஜயகாந்த்திடம் கோபம் கொள்ளும் வகையில் கேள்விகள் கேட்டு அவர் அடித்ததையும், நாக்கை மடக்கி எச்சரிக்கை செய்ததையும், தலையில் குட்டியதையும் விடாது ஒளி பரப்பி அவர் ஒரு மன நிலை பிறழ்ந்த மனிதர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி எப்படி ஓரம் கட்டினார்களோ அது போன்று.

    ஒரு விஷயத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. முன்பு அந்த இடத்தை பத்திரிகை மட்டுமே பிடித்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது 90 % இடத்தை வேறு சமூக இடங்கள் ஆக்கிரமித்து கொண்டு விட்டது.

    அண்ணாமலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்தினார் என்றால் ஒரு வாரம் வரைக்கும் அதுவே பேசு பொருளாகிவிடுகிறது. இவர் ஒருவரின் கேள்விக்கு ஆளும்கட்சியில் யார் யாரெல்லாமோ பதில் சொல்லி சமாளிக்கிறார்கள். அந்த அளவிற்கு விடியல் அரசிற்கு நெருக்கடி கொடுக்கிறார் அண்ணாமலை.

    இதை தடுக்கதான் ஒரு கட்டத்தில் அண்ணாமலை சமூக ஊடகங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், கட்சியை சரியாக கட்டமைக்கவில்லை என்று சில அரசியல் விமர்சகர்கள் கிளம்பினார்கள் க.

    கட்சியை கட்டமைப்பது மக்களிடம் மாற்றத்தை கொண்டு வரத்தானே. அதை கட்சியை கட்டமைத்து அவர்கள் மூலம் செய்தால் என்ன, அல்லது இது போன்று பத்திரிகை பேட்டிகள் மூலம் ஆளும் கட்சியை சாட்டையால் விளாசி அண்ணாமலையே செய்தால் என்ன?

    அடிமட்ட கட்சி தலைவர்கள் வீடு வீடாக மக்களிடம் சென்று பல நாட்கள் நடையாக நடந்து கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்களை ஒரு மணி நேர பேட்டி மூலம் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து விடுகிறார் அண்ணாமலை.

    அதாவது பிள்ளையார் தாய் தந்தையை சுற்றி வந்து மாம்பழத்தை பெற்று கொண்டதை போல பல நூறு ஆட்களை கூலிக்கு அமர்த்தி பத்து ஆண்டுகளாக கடுமையாக உழைத்து பொய்யாக கட்டமைத்திருக்கும் போலி திராவிட கவர்ச்சியை ஒரு பேட்டி மூலம் சுக்குநூறாக சிதறடித்து விடுகிறார் அண்ணாமலை.

    இதற்கு தனியாக டிவியோ, யூடியூப் சேனலோ, ஒயிட் போர்டோ தேவைப்படவில்லை அவருக்கு. கட்சி பணிகளுக்கு இடையே வாரத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினால் மட்டுமே போதுமானது.

    இதை எப்படி தடுப்பது முடக்குவது என்று கோபாலபுரம் தலையை பிய்த்து கண்டுபிடித்த திட்டம் தான் இது. ஆனால் அதை மிக நேர்த்தியாக நிதானமாக நாகரீகமாக நடந்து தடுத்து விட்டார் அண்ணாமலை.

    அருகில் இருந்தவர்கள் கோபத்தில் பொங்கி எழுந்த போது கூட அடக்கி அமைதிபடுத்தி அவர்கள் திட்டமிட்ட அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சூழ்நிலையை அழகாக எதிர்கொண்டு சுமுகமாக கையாண்டு விட்டார்.

    எனவே இனி என்ன செய்வது என்று தெரியாமல் அவர் கேலியாக சொன்ன விஷயத்தை பிடித்து கொண்டு இனி அண்ணாமலை சந்திப்பை புறக்கணிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

    இனி அவர் சந்திப்பை மட்டுமல்ல அவர் பற்றிய செய்தி எதையுமே தங்கள் பத்திரிகை மற்றும் டிவிக்களில் வராதவாறு பார்த்துக்கொள்வார்கள். வாங்கும் காசுக்கு வேலை செய்ய வேண்டுமல்லவா? அதுதானே கோபாலபுரம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் டாஸ்க்.

    ஆனால் என்ன அடி விழும் முன்பாகவே, அட கையை கூட தூக்கலைங்க, அதுக்கு முன்னேயே அடி விழுந்தது போல கூச்சல் காதை பிளக்கிறது.

    இந்த முன் களங்கள் இல்லாவிட்டால் என்ன, இதுநாள் வரையிலும் அவர்களா பாஜகவை தமிழத்தில் வளர்ந்தது? இல்லையே. இங்குள்ள ஒவ்வொரு தேசியவாதியும் நூறு பத்திரிக்கைகளுக்கு சமம் அல்லவா?

    இது வரை தமிழகத்தில் எப்படி பாஜக வளர்ந்ததோ அதை விட பன்மடங்கு வேகத்துடன் பாஜக வீறு கொண்டு எழும். இது உறுதி ….

    ஜெய் ஹிந்த்….

  4. மோடிஜி யின்
    பேச்சை மொழி பெயர்த்த சுதர்ஸன்! சார் அவர்களின் பேட்டி

    சென்னை விழாவில் பிரதமர் மோடியின் பேச்சை, அவரது பாணியிலேயே, தமிழில் மொழி பெயர்த்து பேசி, பிரதமர் உள்ளிட்ட அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார், *சென்னை வானொலி* நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுதர்ஸன்.

    தினமலர் க்கு
    அவர் அளித்த பேட்டி:

    பிரதமர் மோடி, இந்த நாட்டின் தவ புதல்வர்.

    அவரது நல் எண்ணங்கள், செயல்பாடுகள், உணர்வுகளை தமிழக மக்களிடம் சேர்க்க ஏங்கினேன்.

    அந்த சமயத்தில் தான், என் குரல் ஆளுமையை தெரிந்து, மனதின் குரல்* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை வழங்கினர்;

    அதை கேட்டு, பலரும் பாராட்டினர். ஒவ்வொரு மாதமும், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, தமிழகத்தில் பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது.

    மோடியின் குரலாக, நான் தான் தமிழில் பேசுகிறேன் என தெரிந்து, நாமக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி என, பல ஊர்களில் இருந்தும், எனக்கு பலர் போன் செய்து பாராட்டினர்.

    தற்போது
    மாவட்ட கலெக்டராக இருக்கும், முன்னாள் செய்தித் துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், என்னை 2020ல் தொடர்பு கொண்டார்.

    ‘2020 நவ., 20ல்,
    நல திட்டங்களை துவங்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வருகிறார். அவரது உரையை, நீங்கள் தான் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்’ என்றார். அப்பணியை சிறப்பாகவே செய்தேன். அமித் ஷா உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

    அதை தொடர்ந்து, 2021 பிப்., 14ல், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உரையை மொழி பெயர்த்து பேசினேன்.

    ‘சிறப்பு’ என பாராட்டியவர்கள், அடுத்ததாக அதே மாதம் 25ல், கோவை, ‘கொடிசியா’ அரங்கில் நடந்த மோடி நிகழ்ச்சிக்கும் அழைத்தனர்.

    இப்படித் தான், மோடியின் குரலை, தமிழர்களிடம் உணர்வுகளோடு கொண்டு சென்றிருக்கிறேன்

    இது
    இறைவனின் அருட்கொடை. என் தந்தையுடன் படித்தவர்களுக்கு, இன்றைக்கு, 85 வயதுக்கு மேல் இருக்கும். அவர்கள், மோடியின் குரலாக நான் ஒலிப்பதை கேட்டு, என்னை புகழ்கின்றனர்.

    அந்த பேறு,
    வேறு யாருக்கும் கிடைக்காதது. கடந்த காலங்களில், பிரதமருக்காக மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்தி, அவர்களுக்கு, ‘டம்மி’யாக சிலரை நியமித்திருப்பர். மொழி பெயர்ப்பு சரியில்லாமல் போனால், ‘டம்மி’யை பயன்படுத்துவர்.

    நான், பிரதமரின் பேச்சை மொழி பெயர்த்து பேச துவங்கியது முதல், அந்த ஏற்பாடு இல்லை. மூன்று முறை, பிரதமர் மோடியின் உரையை மொழிபெயர்த்து பேசியுள்ளேன்.

    ஒவ்வொரு முறையும், அவர் என்னை பாராட்டியதோடு, நன்றியும் கூறியுள்ளார். அவரது உரையை மொழி பெயர்த்து, அவரது நடையிலேயே ஏற்ற, இறக்கங்களோடு பேச, எனக்கு வாய்ப்பளித்த அவருக்கு நன்றி கூறி வருகிறேன்.

    எத்தனை முறை மோடியின் பேச்சை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தாலும், அதை இறைவன் கொடுத்த கொடையாக நினைத்து, சிறப்பாக செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். – நன்றி *சுதர்ஸன்*

  5. Sri Saravanan, there never was an historical Jesus Christ. Period. Let’s not give credit to historicity of Jesus. Or for that matter, to his benign character. I will urge all to watch the video by Kalavai Venkat “ what every Hindu should know about Christianity “.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *