ஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை

ஏதோ ஹைதராபாத் நகரில் நடந்த முதல் குண்டு வெடிப்பு சம்பவம் இது கிடையாது.
2002-ல் நவம்பர் மாதம் 21ந் தேதி தில்சுக் நகர் சாயிபாபா கோவில் அருகில் குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இரண்டாவது 2005-ல் அக்டேபார் மாதம் 1ந் தேதி ஹைதராபாத் காவல் துறையின் அதிரடிப் படை அலுவலகம் அருகே குண்டு வெடித்து இருவர் பலியானர்கள்.
மூன்றாவதாக 2007-ல் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி இரண்டு இடங்களில் மோசமான வகையில் குண்டு வெடித்தது. ஒன்று லும்பினி பார்க்கில் வெடித்தது. இரண்டாவது கோகுல்சாட் என்ற உணவு விடுதியில் வெடித்ததில் 32 பேர்கள் பலியானார்கள்.
தற்போது தில்சுக் நகரில் நடந்துள்ள தாக்குதல் நான்காவது தாக்குதலாகும்.
2012-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஒருவரிடம் சோதனை செய்த போது 4மில்லியன் கள்ள நோட்டு கிடைத்தது. இது மிகப் பெரிய தொகையாகும். இவனிடம் நடத்திய விசாரனையில் இது போல் பல முறை நான் கடத்தி வந்ததாகவும், இஸ்லாமியர்களுக்காக இது நடத்தியதாகவும் தெரிவித்த பின்னும், இவனைப் பற்றிய உண்மை செய்திகளை அரசு வெளியிடவில்லை என்பதும், இது சம்பந்தமாக யாரையும் கைது செய்யக்கூட இல்லை என்பது ஆந்திர அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. இவ்வாறு கொண்டு வருகின்ற பணம் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை அரசு தெரிந்தும், தெரியாமல் செயல்படுகிறது.
ஆந்திர காவல் துறையினர் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்த பின்னர் கூட முறையான விசாரணையை நடத்தியிருந்தால் கூட 2013 பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

View More ஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை

ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்

2004ல் ஆட்சியில் அமர்ந்த தினத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் மேல்…

View More ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்

பாகிஸ்தானை நம்பக் கூடாது

இந்திய எல்லைக் காவல் படையினரைத் தாக்கி இரண்டு ஜவான்களைக் கொன்றதுடன், இருவரின் தலையையும் வெட்டி, உடலை சின்னாபின்னப் படுத்திய சம்பவம் இந்தியர்களின் மனதில் சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தனது அயோக்கிய தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது….. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கும் வகையில் 1,751 கி.மீ தூரம் வரை வேலி அமைத்து முழு கண்காணிப்பு செய்ய வேண்டும்… இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மதராஸக்களும் பயங்கரவாதத்திற்கு ஊக்கம் கொடுப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பும், ஊடுருவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்றன….

View More பாகிஸ்தானை நம்பக் கூடாது

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19

2004 வரை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் அரசியல்வாதிகள் மீதும், அரசாங்க நிறுவனங்கள் மீது மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அதற்குப் பிறகு, இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதும், இந்துப் பண்டிகைகளின் போதும் தாக்குதல் நடத்தி, உள்ளுர் மக்களிடம் அதிக அச்சத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டங்களை மாற்றினர், வாரணாசி குண்டு வெடிப்பு இதன்படி நடந்த ஐந்தாவது சம்பவமாகும்… அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்ட இ-மெயிலில் பயங்கரவாதிகள் தங்களை கஜினி முகமது, கோரி முகமது, ஔரங்கசீப் ஆகிய படையெடுப்பாளர்களின், ஆக்கிரமிப்பாளர்களின், கொடுங்கோலர்களின் வாரிசுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்…

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்… உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்….

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

ஏழை இஸ்லாமியர்கள், எல்லாம் அல்லாவைச் சேர்ந்தது என அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்… மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் அரசுக் கல்லூரிகளில், அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுப் படித்தவர்கள். இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன… ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

View More பயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளைச் சார்ந்த முக்கிய இஸ்லாமிய தலைவர்களின் நோக்கம் வேறுமாதிரியாக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தொடர்ந்து செயல்படுத்துவதின் நோக்கம் மெல்ல வெளியே கசிய தொடங்கியது.

View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!

1990ம் ஆண்டு வரை போடோ பழங்குடியினர் பெரும்பான்மை ஆக இருந்தார்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது… அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகும் ஊடுருவல் காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்… பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது…

View More அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்

பயங்கர வாத இயக்கத்திற்கு கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம் என்ற கட்டுரையில் உள்ள கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து, ஆதாரங்கள் கோரி மனித நேய மக்கள் கட்சியின் சட்ட ஆலோசகர் கடிதம் எழுதியிருந்தார். அந்த ஆதாரங்களை கட்டுரையாசிரியர் இங்கு தொகுத்தளிக்கிறார்… அல்-உம்மா இயக்கத்திலிருந்து பிரிந்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர், மனிதநேய மக்கள் கட்சி என்பது த.மு,மு.கவின் அரசியல் பிரிவு.. திரு. ஜவாஹிருல்லா சிமியிலும் பொறுப்பில் இருந்தார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திலும் பொறுப்பில் இருந்தார்… அவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட சம்பவமும் செய்தி ஊடகங்களில் பதிவு செய்யப் பட்ட ஆதாரபூர்வமான தகவல்..

View More தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்

காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

… எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது….

View More காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை