இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்

ஹிந்துக்களுக்கென்று ஒரு தேசம் கூட பூவுலகில் இல்லை என்று கல்கி இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.. அவரது உரைகளைக் கேட்கிற கல்கிக்கு ‘அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று’ என்று எழுதுகிறார். யார் அவர்? பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, ஹிந்து மகாசபைத் தலைவர் .. அவருடன் ’கல்கி’ இரண்டு விடயங்களில் முழுமையாக உடன்படுகிறார்: ஒன்று, ஹிந்து சமூகத்தின் ஜனத்தொகை விகிதம் குறையாமலிருக்குமாறு ஹிந்துக்கள் பிறமதம் புகுவதைத் தடுப்பதற்கு ஏற்பாடு செய்தல். மற்றொன்று ஹிந்துக்களின் தேகவலிமையை வளர்த்து, ஆயுதப்பயிற்சி அளித்தல்…. இது அன்று வெகுஜன பத்திரிகையில் எழுதப்பட்டது. இன்று..

View More இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்

யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்

1942 இல் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் இந்த குழந்தைகளை சைபீரியாவிலிருந்தும் வெளியேற்றினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த அனாதை. குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துவிட்டனர். இதை அறிந்தார் ராஜா. தன்னுடைய சமஸ்தானத்தில் தனது செலவில் இந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தார். இந்த அரசர் எப்படிப்பட்டவர்? தீவிரமான, உண்மையான இந்துத்துவர். எனவே சோமநாத் ஆலய புனரமைப்பில் அவர் முதன்மை பொறுப்பில் இருந்தார்…

View More யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்

சோமநாத் சுயகௌரவத் திருவிழா – அஞ்சாமையின் திருப்பயணம்

தொடர்ச்சியாக பெஷாவர் முதல் மதுரா வரை இந்துக்களின் செல்வத்தை சூறையாடுவது, அவர்களின் புனித பிம்பங்களை அழிப்பது, கோவில்களை இடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த ஒரு நாசகார சக்தியின் பயங்கரவாதத்திற்கு எதிராக, நெஞ்சுரத்துடன் நின்று, நம்மை மூழ்கடித்துவிடாமல் நெருப்பு வட்டமொன்றை இட்டு வைத்து நாமெழுந்த ஆயிரமாவது வருடத்தை, குஜராத் சோமநாதர் கோவிலில் ஒரு பிரமாண்ட விழாவாக நடத்தி முடித்துள்ளனர். பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இதில் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்.அங்கே அவர் ஆற்றிய உரை ..

View More சோமநாத் சுயகௌரவத் திருவிழா – அஞ்சாமையின் திருப்பயணம்

அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை வைபவம் நம் காலத்தில் நாம் கண்களால் காண நிகழ்ந்த ராம பட்டாபிஷேகம்… ராம் லாலா என்ற குழந்தை ராமர் வழிபாடு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப் படவில்லை, அதற்கு குறைந்தபட்சம் 500 ஆண்டு பாரம்பரியம் உண்டு… தமிழ்நாட்டில் ராமாயணத்தை எரித்த இந்து விரோத அரசியல் கயவர் கூட்டத்தின் அதர்ம கொள்கைகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவை தான் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள். இவற்றை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்?…

View More அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..

View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்

இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம்… எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள்…

View More வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்

அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசு

தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு (85) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர்.. மாவட்ட ஆட்சியரோ “கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த தமிழ்ப்புத்தாண்டு குறித்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார்..

View More அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசு

சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

வீர சாவர்க்கர் மிகக் கொடுமையான வருடங்களுக்கு மத்தியில் எழுதிய மனுவில், தமக்கு விடுதலையே கிடைக்காது போகலாம் என்கிற சூழலில், என்னைத்தவிர பிறரை விடுவித்துவிடு என கேட்கிறாரே இந்த மனத்திண்மை சவுக்கு சங்கருக்கு உண்டா? அல்லது வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என வாய் கூசாமல் பேசும் புல்லர் கும்பலில் எவனுக்கும் உண்டா?.. தனக்கு அடிப்படை வரலாறே தெரியாமல் இருப்பதை சவுக்கு சங்கர் வெளிக்காட்டுகிறாரா? அல்லது புத்தகம் படித்தால் கூட (அல்லது படித்ததாக பொய் சொன்னால் கூட) அதுவும் அவருக்கு புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே நேர்மையில்லாமல் பொய் சொல்வதை வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டாரா?…

View More சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…

View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

பாரதியாரும் காசியும்

பாரதி கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கையழகை அனுபவிப்பதிலும், நண்டர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும் காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும்… பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான். காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின…

View More பாரதியாரும் காசியும்