வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்

முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கவர்னர் எல்லிஸ் காலத்திலும் கூட ம்யிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் அடைந்து போன நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது.. திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்திய கருணாநிதி, அண்ணாதுரை, மறைமலை அடிகள் முதலான அனைவரையும் துாக்கி எறிந்து, 300 ஆண்டு வழக்கத்தையும் துச்சமென மதித்து, தை மாதம் இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படும் என்றும், இதுவே தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் எனவும், 2008ல் அறிவித்தார்… கருணாநிதியின் தை மாதம் ஆண்டு பிறப்பு என்ற கலாசாரத் திரிபை நீக்கி, பழையபடி சித்திரையே, தமிழ் ஆண்டு பிறப்பு என ஜெயலலிதா அறிவித்தார். திருவள்ளுவர் தினத்தையும் மாற்றுகிறேன் என்று சொன்னார். அதைச்செய்ய முடியாமல் அவர் மறைந்தது பெரும் குறையே…

View More வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்

அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5

டிரம்ப்புக்கு ஆதரவாக டெட் குரூசும், எதிராக அரிசோனா செனட்டர் கிரிஸ்டன் சினெமாவும் பேசினர்.
அச்சமயம், டிரம்புக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்திலிருந்த பலநூற்றுக்கணக்கான போக்கிரிகள், சட்டப் பேரவைக்குக் காவலாக நின்றிருந்த காவலர்களை அடித்துநொறுக்கிக்கொண்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தனர்.  கதவை மூடமுயன்ற காவலர்களுல் ஒருவரான ப்ரையன் சிக்னிக் என்ற காவலரைத் தலையில் அடித்து கதவுக்கு இடுக்கில் நசுக்கிப் படுகாயப் படுத்தினர்.  சிக்னிக், நாட்டுக்காக போர்புரிந்து திரும்பிய இராணுவ வீரர்.  கடைசியில் தாய்நாட்டின் எதிரிகளுடன் போராடிப் படுகாயத்தினால் மறுநாள் வீரமரணமடைந்தார்.

View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5

தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி

ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..

View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி

அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3

ஒரொரு மாநிலத்துக்கும் அங்கே இருக்கற மாநிலச் செயலர்தான் (Secretary of State) வாக்குச் சீட்டுகளை எண்ணி, பட்டியலிட்டு, முடிவுகளுக்குச் சான்றளிக்கவேண்டும். ஒவ்வொரு கவுன்ட்டியிலேயும் – அதுதாங்க, இந்தியா மாவட்டம் மாதிரி — ஒரு பதிவாளர் இருப்பார். வாக்குகளைச் சேகரித்து, அதை எண்ணி, பட்டியல்போட்டு, அதுக்குச் சான்றளித்து, மாநிலச் செயலருக்கு அனுப்பவேண்டியது அவர் பொறுப்பு. ஒரு மாநிலத்திலே (டெக்ஸாஸ்) 254 கவுன்ட்டிகள், வாஷிங்டன் டி.சி.லே ஒரே ஒரு கவுன்ட்டிதான்.

View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3

அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2

டெமாகிரடிக் பார்ட்டி, குடியரசுக் கட்சியைவிட (ரிபப்ளிகன் பார்ட்டி) நிறையச் செலவு செஞ்சிருக்காங்க.[iii] மொத்தம் $14 பில்லியன் (லட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர் – ஒருகோடியே, எழுலட்சம் கோடி ரூபாய்) செலவு. உடனே இத்தனை பணமான்னு வாயைப் பிளக்காதீங்க, கூட்டிக் கழிச்சுப்பார்த்தார், அமெரிக்காவுலே ஓட்டுப்போட்ட ஒருத்தொருத்தருக்கும் சுமாரா $88.61தான் (ரூ.6378.20தான்!) செலவு பண்ணியிருக்காங்க. இந்தப்பணத்திலே நாலுபேரு உள்ள ஒரு குடும்பம் சுமாரான ஓட்டலுக்குப் போயிச் சாப்பிட்டா ஒருவேளை சாப்பிடலாம். அங்கே அம்மா உணவகம்மாதிரி இங்கே இருக்கற மக்டானல்ஸ்ல சாப்பிட்டா ரெண்டுவேளை — அவ்வளவுதான்!

View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2

அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்!

அமெரிக்காவில் அப்படியல்ல. நாடு முழுவதற்கும் ஒரு தேர்தல் கமிஷன் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் அங்கு நடக்கும் தேர்தலுக்குப் பொறுப்பேற்கிறது.
அரிசோனாவிலே, நோயாளிங்க மட்டுமில்லாம, உல்லாசமா புகைக்கிறவங்களும் கஞ்சா வாங்க அனுமதிக்கலாமான்னு கேட்டு ஒரு பிரேரேபணை — அரசியல்வாதிங்க கருத்துச்சொல்லாம நழுவிட்டாங்க. வேணும்னாலும் தப்பு, வேணாம்னாலும் தப்பு. ஆக, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு விட்டுட்டாங்க. அனுமதி கிடைச்சாலும், கிடைக்காட்டாலும் அரசியல்வாதிங்க மாட்டிக்கமாட்டாங்க.

View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்!

தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….

View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை

மங்கலம் என்ற பெயரை பாகிஸ்தான், சிரியா, அரேபியா என்று மாற்றி விடுவார்களோ என்ற அளவு இஸ்லாமியர்களின் கும்பல், மக்கள் தொகை திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் பெருகி வந்தது. அங்குள்ள இந்து பெண்களைக் குறிவைத்து லவ் ஜிஹாத், ஹை டெசிபலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அலறுவது, தேர் திருவிழா, சுவாமி புறப்பாடு இவைகளை அராஜகமாக தடுப்பது. மீறி வந்தால் சூழ்ந்து கொண்டு தாக்குவது, பெண் பக்தர்களை பாலியல் ரீதியாக துன்பப்படுத்துவது , கோவிலில் செய்யும் பூஜைகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என்று டார்ச்சர் செய்வது, வாரம் ஒரு முறை கூலிக்கு மாரடிக்கும் திக, திமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆட்களை கொண்டு நம் கடவுள்களை பச்சை பச்சையாக ஆபாசமாக வர்ணிப்பது, ஆபாச பேச்சு என்று அராஜகம் செய்து கொண்டிருந்தார்கள்… இதை பொறுக்க மாட்டாத இந்துக்கள் தாமதமாகவேணும் விழித்துக்கொண்டு, இந்து ஒற்றுமை மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடிவு செய்தார்கள். அதை திட்டமிட்டு செயல்படுத்தினார்கள். அந்த மாபெரும் குடியுரிமை சட்டத் திருத்த (CAA) ஆதரவுக் கூட்டத்தை அச்சுறுத்த இஸ்லாமியர்கள் மேடையை முற்றுகையிட கூடினார்கள். இந்துக்களின் உறுதியையும், எழுச்சியையும் கருத்தில் கொண்டு அமைதியாக வெறிக்கூச்சலோடு கலைந்து சென்றார்கள்.. அடி உதை, கொலை செய்வதெல்லாம் இஸ்லாமிய வெறியர்களின் பாதை நாம் ஏன் அதை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இனி இந்து தொழில் முனைவோர்களை ஆதரித்து வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, ஹிந்து வியாபாரிகளிடம் மட்டுமே வணிகம் செய்வது என்ற முடிவை எடுத்தனர்…

View More “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை

தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன. தேசம் முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய முழுமையான விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காக, கேள்வி- பதில் வடிவில் தெளிவான விளக்கங்கள் இங்கே…

View More தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது… இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை… பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது…

View More குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு