இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7

பெண்கள் என்று இங்கு சொல்லப் பட்டிருந்தாலும் இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆணோ, பெண்ணோ எவருக்குமே கஷ்டமான, துக்கமான வாழ்க்கை என்றால் அது ஒத்துக்கொள்வதில்லை. தனக்கு அறிமுகமாயிருந்த வசதிகள் எதுவும் தன் வசமின்றி கைவிட்டுப் போவதை எவருமே விரும்புவதில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், கூட உள்ள துணையைக் கைவிடவும் பெரும்பாலோர் தயங்குவதில்லை. பணம் பத்தையும் செய்வதால், எவருக்கும் ஏழ்மை நிலை பிடிப்பதில்லை. தானே விரும்பி இராமருடன் காட்டுக்குச் செல்வதால், சீதைக்கு இந்த அறிவுரை தேவையே இல்லை. ஆனாலும் பொதுவாக மக்களுக்குச் சரியான சந்தர்ப்பத்தில் இது போன்ற செய்திகளைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதால், வால்மீகி இடத்திற்குப் பொருத்தமான இதை எழுதியிருக்கிறார்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6

புருஷர்களில் உத்தமரே, ஒரு மனைவி தன் கணவனின் விதிப்படி தானும் நடக்கவேண்டும். ஆதலால், தாங்கள் காட்டுக்குப் போகவேண்டும் என்ற உத்திரவு இருந்தால் அது எனக்கும் இடப்பட்ட உத்திரவே… நல்ல யானைகளை எல்லாம் தானமாகக் கொடுத்துவிட்டவனுக்கு, யானையைத் தூணில் கட்ட உதவும் அதன் இடுப்புக் கயிறை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எப்படி இருக்கும்?… தர்மத்தின் பாதையிலிருந்து சிறிதும் தவறாது சென்று, மேலும் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும் ஒருவனை தண்டிப்பது மிகவும் அதர்மமானது…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6

பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது… மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்… இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.

View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]

ஒரு தேசம், இரு உரைகள்

அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்… ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக…’

View More ஒரு தேசம், இரு உரைகள்

மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்

எப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்…இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன… எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்…

View More மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்