அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

ayodhyaஅயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.

இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.

மூவாயிரம் ஆண்டுகள்

பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.

‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.

இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ayodhya-kushan-age-artifactsஇதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.

சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.

இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.

குப்தர் காலம்

ayodhya-comwall

இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.

இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே  காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக  எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.

இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும்,  கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ayodhya-pillar-with-vishnu-imageஇவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.

இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்கமுடிகிறது. இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.  இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.

பாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக்கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.

பாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும்  முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.

பிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.

ayodha-evidence-gallery

பத்தாம் நூற்றாண்டில்

ayodhya-collapse-of-the-structure-11-300x206ஆனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன. இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.

இந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.

Art Gallery 165டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர்.  தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர்.  தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர்.  தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர்.  பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர்.  வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.

நன்றி : விஜயபாரதம் (10-9-2010) இதழ்

74 Replies to “அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி”

  1. விரிவான – அருமையான – பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்துப் பெட்டகத்தைத் தந்து இருக்கிறார் ஆசிரியர். மிக்க நன்றி.

  2. இவ்வளவு தூரம் ஆதாரம் இருக்கும் போது, நீதி மன்றங்கள் மாற்றி தீர்ப்பு சொல்ல முடியாது. மக்களின் மனதில் ஸ்ரீ ராம ஜன்ம பூமி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது பா.ஜ.க. காலப்போக்கில் அப்போதிருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக ரிடையர் ஆகிவிட்டார்களோ என்னவோ.. இப்போது பா.ஜ.க. ஒரு சடங்காகத்தான் இப்பிரச்சனையை கையாளுவதாகத் தோன்றுகிறது. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் எப்படி போகும் என்று பார்க்க வேண்டும்.

  3. பாபரின் முகலாயப் படைத் தளபதி மீர் பாகி என்பான் தலைமையில் தான் ராமனின் ஆலயம் இடிக்கப் பட்டது
    ‘சீதா கி ரசொயி ‘-அதாவது சீதையின் சமையல் அறை என்று காலம் காலமாக வழங்கப்பட்ட இடமும் அதற்குள் அடக்கம்.
    நமக்கு சமீபத்திய நிகழ்வான மசூதி என்று சொல்லப் பட்ட கட்டடம் இடிக்கப் பட்டது மட்டுமே தெரியும்
    ஆனால் ராமனின் ஆலயம் இடிக்கப் பட்டதிலிருந்து தொடர்ந்து ஹிந்துக்கள் அதை மீட்டெடுக்கப் போராடியுள்ளனர் என்பது தெரியாது.
    பல்வேறு கால கட்டங்களில் நடந்த அந்தப் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

  4. பாபர் கட்டிடம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பைப் பறைசாற்றக் கட்டப்பட்ட்து. அங்கு எப்பொழுதுமே தொழுகை நடந்ததுகிடையாது. 1950லிருந்து 1992 வரை 42 ஆண்டுகள் பொறுமை காத்த ஹிந்துக்கள் அரசியல்வாதிகளாலும் நீதிமன்றங்களாலும் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று அறிந்து கொண்டு, தங்கள் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றின் புகழை மீட்க இடையில் வந்த அடிமைச்சின்னத்தை அழித்தனர். அம்மீட்பு நிகழ்ச்சியில் ஒரு உயிர் இழப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

    பாபர் கட்டிடத்தைக் கட்டிய பாபரே அது ராமர் கோவிலை அழித்துக் கட்டப்பட்டது தான் என்று குறித்திருக்கிறார். ஔரங்கசீப்பின் பேத்தியும் அதை ஆவணப்படுத்தியிருக்கிறார்.

    பரபங்கி மாவட்ட காஸட்டியரில் (H.R. Neville in the Barabanki District Gazetteer, Lucknow, 1905, pp 168-169) ஹெச்.ஆர்.நெவில் என்னும் ஆங்கிலேயர் ”ஜன்மஸ்தான் கோவில் பாபரால் அழிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபைசாபாத் மாவட்ட காஸட்டியரில் (Fyzabad District Gazetteer, Lucknow, 1905, pp 172-177) 1528-ஆம் ஆண்டு பாபர் அயோத்தியா வந்து ஒரு வாரம் தங்கியிருந்து கோவிலை அழித்து மசூதியைக் கட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது அகழ்வாராய்ச்சி ஆவணங்கள் ராமர் கோவில் இருந்த்தற்கான ஆதாரங்களைப் பரிபூரணமாக நிரூபித்து விட்டன.

    இதற்குப் பிறகும் நீதிமன்றம் ஹிந்துக்கள் பக்கம் நியாயமாகத் தீர்ப்பு சொல்லாமல் போலி மதச்சார்பின்மை பேசி இழுத்து அடித்தால், அது கோழைத்தனம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட.

  5. பகிர்வுக்கு நன்றி. போராட்டத்தின் பின் உள்ள நியாயம் புரிய இது உதவும்.
    ஆனாலும் ஏற்கனவே புதைக்கப் பட்ட, இடிக்கப்பட்ட இடத்துக்கு இது வரை நாம் கொடுத்த விலை மிக அதிகம். இந்த வரலாறோ அதன் பின்னணியோ அதன் முக்கியத்துமோ தெரியாத புதிய தலைமுறையை மறுபடியும் இதே காரணுதுக்க்காக இழக்க முடியுமா?

    நீதி மன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை இரு தரப்பும் உணர்ச்சிபூர்வமாக அணுகி மேற்கொண்டு எந்த நஷ்டமும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் . இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக போய் ஒரு நல்ல முடிவுக்கு வருவதே சிறந்தது.

  6. ஆசிரியர் குழுவிற்கு,
    கட்டுரையின் தலைப்பை வாசித்தவுடன், நான் ஒரு முடிவிற்கு வந்து
    விட்டேன். சேது சமுத்திர திட்டத்தைப்பற்றின வழக்கில் மத்திய தொல்துறை
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கிற்கு அவசியமே இல்லாமல் “இராமர் ஒரு
    காவியப்பாத்திரம், இராமர் உயிருடன் வாழ்ந்ததாக ஆதாரமே இல்லை”
    என்றெல்லாம் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது.

    இந்த கட்டுரையிலும், இந்த அரசாங்கத்திற்கு ஆமாம் சாமி போடும்
    வல்லுனர்கள் (!!!), அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய பகுதியில் கோயில்
    மட்டுமல்ல, எந்த கட்டமைப்பும் இருக்க வில்லை என்று அறிவித்திருக்கும்.
    அதை சுடச்சுட தமிழ் ஹிந்து வெளியிடுகிறது என்றே நான் அனுமானித்தேன்.

    ஆனால், அதிசயம், இன்னும் சிலர் உண்மையை தைரியமாக கூற
    இந்தியாவில் இருப்பது ஆச்சரியமானது.

    எல்லா தரப்புக்கும் பொது நபர்கள் இந்த குழுவில் இருந்ததால் இந்த
    மட்டிற்கு நம் தலை (தன்மானம்) தப்பியது.

    ஆனால், இது தற்காலிகமானது. உச்ச நீதிமன்றத்தில் ஹிந்துக்களுக்கு
    சாதகமாக தீர்ப்பு வரும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களும்
    காங்கிரஸ் அரசியல்வாதிகளால் (மறைமுகமாக) நியமிக்க படுவதாலும்,
    மதச்சார்பற்ற நிலையை நிலைப்படுத்தவும், தீர்ப்பு எதையும் கொடுக்காமல்
    Escape ஆகி விடுவார்கள் என்று நம்புகிறேன்.

    தப்பிததவறி ஹிந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து விட்டால் அது
    இராமபிரானின் அருளால்தான் இருக்கும்.

  7. தற்பொழுதுதான் ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. அயோத்தியா
    விவகாரத்திற்கான தீர்ப்பு செப்டம்பர் 24ம் தேதி வழங்கப்படும் என்று
    லக்னோ உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.

    (1)3 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்க இருக்கிறது.
    நீதிபதிகளின் பெயர்களை கவனித்தேன். ஒருவர் இஸ்லாமிய பெயரை
    கொண்டவராகவும், இருவர் இந்து பெயர்களை கொண்டவர்களாகவும்
    உள்ளனர்.
    (2)இதற்கு நடுவே இவ்வழக்கில் ஆஜராகிய வக்கீல் இந்த தீர்ப்பு தள்ளிப்
    போடப்பட வேண்டும் என்று கோருகிறார். நாட்டில் சமய சண்டைகள்
    ஏற்பட்டு விடும் என்று அதற்கு சப்பைக்கட்டும் கட்டுகிறார்.

    இவர்கள் பேசுவதை பார்த்தாலே தெரிகிறது. நியாயம் ஹிந்துக்களின்
    பக்கம் இருக்கிறது. அதை தடுக்க முயல ஒரு எட்டப்பனின் கூட்டம்
    முயல்கிறது.

    செப்டம்பர் 24ல் தீர்ப்பு வருமா என்பது சந்தேகமே!

    மேலும் பிறகு உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யப்படும். ஆகவே
    இவ்வழக்கு கூடிய விரைவில் முடிய வாய்ப்பில்லை.

  8. https://timesofindia.indiatimes.com/india/Babri-Masjid-demolition-HC-refuses-to-defer-verdict/articleshow/6570859.cms

    Babri Masjid demolition: HC refuses to defer verdict

    PTI, Sep 17, 2010, 03.32pm IST

    Babri Masjid demolition

    Ayodhya waits for the verdict on the Bbari Masjid demolition case

    NEW DELHI: The Allahabad High Court has rejected plea for deferring the judgement in the Ramjanambhoomi-Babrimasjid title suit. A three-judge special bench of the court rejected the application of one Ramesh Chandra Tripathi, a defendant, for reaching an amicable settlement through reconciliation and deferment of the judgement slated for September 24.

    Meanwhile, with the date of the Ram Janmabhoomi- Babri Masjid judgement drawing near, religious leaders and scholars of both the communities have appealed for peace and communal harmony.

    Leading Muslim religious leaders, including Shia cleric Maulana Kalbe Jawwad, naib imam of Idgah and member of the All India Muslim Personal Law Board, Maulana Khalid Rasheed Firangimahli besides Islamic seminary Darul Uloom Deoband have asked Muslims to respect the verdict of the court and maintain communal harmony .

    “Peace is of prime importance and we have made the Muslims aware of it at every level in discourses and appeals that communal harmony should be maintained, so as to check vested interests from taking advantage of the situation,” Firangimahli told PTI.

    Kalbe Jawwad asked community members to be weary of political leaders who would try to take advantage of the situation to serve their ulterior motives.

    Darul Uloom Deoband had yesterday appealed to the people to respect the verdict of the court and maintain peace and communal harmony in the country .

    The main pujari of the Ram Janmbhoomi temple in Ayodhya, Acharya Satyendra Das Mahraj and Mahant of Janki Ghat in Ayodhya, Janmey Sharan have also asked the community to remain calm and accept the verdict of the court.

    Satyendra Das, appointed main pujari by the court, had also taken part in the roza iftar function recently to strengthen communal amity.

    “In case the verdict is against the aspirations of any individual or party in the case, he is free to approach the Supreme Court,”, Firangimahli said, adding there should not be any reaction to it in society or on streets.

  9. ஆசிரியர் குழுவிற்கு,

    CNN-Larry King Liveல் – US Supreme Court Judge-Stephen Breyer
    என்பவரின் பேட்டியை கண்டேன்.கடினமான வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்பைப்பற்றி அவர் கீழ்வருமாறு விளக்கினார்.

    ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கட்டிக்காக்க சில நேரங்களில்
    மக்களிடம் பிரபலமாகாத (Non-Popular) தீர்ப்புகளை தர வேண்டியிருக்கும்.
    இதை அதிபர் (இந்தியாவில் பிரதமர்) முடிவெடுப்பது நடக்காது. ஏனெனில்
    தன் ஆட்சிக்கு பாதிப்படையாமல்தான் அவர் முடிவு எடுப்பார்.

    சட்டமியற்றும் சபைகள் (நாடாளுமன்றம்) போன்றவை எடுக்காது.
    ஏனெனில் மக்களின் ஆதரவை பெறாத சட்டங்களையோ, திருத்தங்களையோ எடுக்க அவர்களால் முடியாது.

    இது போன்ற இக்கட்டான நேரங்களில் நீதிமன்றம்தான் கடின தீர்ப்புகளை
    தர வேண்டியிருக்கும். நீதிபதிகளுக்கு பணபலமோ, ஆயுத பலமோ அல்லது
    அதிகார பலமோ இருக்காது. ஆனால் மக்களின் விருப்பு வெறுப்புகளை
    கருத்தில் கொள்ளாமல் அரசியல் சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்த
    நீதிபதிகளால் மட்டுமே முடியும்.

    அயோத்தியா வழக்கில், அகழ்வாராய்ச்சியின் சான்றுகள் முகத்தில்
    அறைவது போன்று கொடுக்க பட்டுள்ளன.

    சர்ச்சைக்குரிய பகுதியில் மசூதி கட்டப்படுவதற்கு முன்னால் கோயில்
    இருந்தது என்று தைரியமாக நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளிக்க வேண்டும்.

    இந்து-முஸ்லீம் சண்டைகள் வரும் என்று ஜோசியம் கூறும் எட்டப்பன்களின்
    ஹேஷ்யங்களுக்கு செவி சாய்க்காமல் லக்னோ உயர்நீதிமன்ற பெஞ்ச்
    தீர்ப்பளிக்க வேண்டும்.

    60 வருடமாக ஏன் பல நூற்றாண்டுகளாக அக்கிரமங்களை சகித்து
    வந்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் விடிவு வருமா?

  10. Pingback: Indli.com
  11. திரு R. பாலாஜி அவர்களின் மறுமொழியில் உள்ள அனுமானம்:

    நீதிமன்றங்கள் மட்டுமே ஜனரஞ்சகமில்லாத ஆனால் நியாய, தர்ம, ஜனநாயக நெறிகளைக் காக்கவல்ல தீர்ப்புகளைத் தரமுடியும் என்பது சரியே.

    சமீபத்தில் பாகிஸ்தானில் உச்சநீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள், வழக்கறிஞர்களின் போராட்டம், தலைமை நீதிபதி மாற்றம், பதவி நீக்கம், மறுபதவிஏற்கத் தீர்ப்பு இவைஎல்லாம் இவ்வகைத்தே.

    பாரதத்திலும் கூட இந்திராகாந்தியின் தேர்தல் வழக்கில் இதே அலஹாபாத் உயர்நீதிமன்றம்தான் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட தீர்ப்பைத் தந்தது. இவ் வழக்கில் வாதி ராஜநாரயணன் தரப்பில் சாட்சி சொன்ன சத்யப்ரகாஷ் மாளவியாவின் கட்டுரையை இங்கே படியுங்கள். நீதிபதி சின்ஹா எந்த அளவுக்கு நேர்மையைக் கடைப்பிடித்தார், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு தருவதாகச் சொன்னதை ஏற்காமல் மிகக் கடினமான தீர்ப்பை வழங்கினார் என்பதை மாளவியா விளக்குகிறார்.

    https://www.dailypioneer.com/265384/Judgement-that-shook-Indira.html

    இதனால்தான் நாட்டில் முதன் முறையாக அவசர நிலைப் பிரகடனம், அடக்குமுறை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின.

    மிகவும் வியக்கத்தக்க வகையில் முன்னாள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியனரும், எல்லாராலும் பெரிதும் மதிக்கப்படுபவருமான உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் பன்னிரெண்டே நாட்களில் அலஹாபாத் தீர்ப்பை நிறுத்திவைத்துத் தீர்ப்புத் தந்ததுடன், ஐந்தே மாதத்தில் தீர்ப்பை மாற்றி இந்திரா தேர்தலைச் செல்லும் என்றும் அறிவித்தார். எப்பேர்ப் பட்ட நியாயவான் ஆகிய கிருஷ்ண ஐயர் கூட அவசர நிலையின் கடுமையில் இப்படித் தீர்ப்பு எழுதிவிட்டாரே என்றே அனைவரும் வியந்தனர்.

    ஆக, ஒரு கடுமையான அரசும் அரசுத்தலைமையும் “தீர்ப்பைப் பாதிக்கும் விதம் நடக்க முடியும்” என்பதும், “தீர்ப்பைப் பாதிக்கும் விதம் நடக்க முடியாது” என்பதும் இந்த ஒரே வழக்கில் நிகழ்ந்த வரலாறு!

    ஆனால் தீர்ப்பின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்தே உள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் தீர்ப்பின் தாக்கம் நமது தேசத்தையும் தாண்டிச் செல்லக் கூடும் என்பது கண்கூடு. அப்படியிருக்க, உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கூட தீர்ப்பின் போக்கை முன் கூட்டியே மத்திய மாநில அரசுகளுக்குத் தெரிவித்து விடுவார்கள் என்பதும் நிச்சயம். நாட்டின் அமைதி, நிர்வாகக் காரணங்கள் இவற்றில் அடங்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் நமது உள்துறை அமைச்சரின் சமீபத்திய காவிக் கருத்துக்கும், இதே வழக்கில் ஏழாவது வாதியின் பேச்சுவார்த்தை மனுவுக்கும் தொடர்பு இருப்பதுபோலத் தோன்றுகிறது. உள்துறை அமைச்சரின் பேச்சே இந்தத் தீர்ப்புக்கான முன்னோடி அல்லது தீர்ப்புடன் தொடர்புடையது போலவுமே தோன்றுகிறது.

    மத்திய அரசு மானில அரசுகளுக்கு ஏற்கனவே வாய்மொழியாகத் தயார் நிலையில் இருக்கும்படியாக அறிவுறுத்தியுள்ளதையும் இங்கே நோக்கவேண்டும்.

  12. திரு. ந. உமாசங்கர் அவர்களே!

    நானும் எமர்ஜென்ஸி காலத்திய நீதிபதிகளின் பல்டியை நினைவு படுத்தி
    கொண்டேன்.

    சுதந்திர இந்தியாவில் நீதிமன்றங்களின் பங்கு அப்படி ஒன்றும் பெருமை
    படுவதாக இல்லை. ஜனரஞ்சகமில்லாத முடிவுகளை பெரும்பாலான
    நேரங்களில் நீதிமன்றங்கள் எடுத்ததில்லை.

    உதாரணமாக இடஒதுக்கீட்டை நோக்கலாம்.
    (1)டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு
    சட்டத்தில் வெறும் 10 வருடங்களுக்கே இடஒதுக்கீடு கொடுக்கப்பட
    வேண்டும் என்ற ஷரத்து இருக்கிறது. பல வழக்குகளில் இந்த ஷரத்தின்
    இன்றைய தேவையைப்பற்றி நீதிமன்றங்கள் மௌனம்தான் சாதித்துள்ளன.
    (2)இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது
    என்ற உச்சநீதிமன்றத்தின் பழைய வழக்கின் தீர்ப்பு இருந்தாலும்
    தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைப்பற்றி நீதிமன்றங்கள்
    “நமக்கேன் வம்பு” என்றே விட்டேத்தியாக இருந்துள்ளன.
    (3)உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது
    நீதிமன்றங்கள் பொருளாதார நிலையில் மேம்பட்ட மாணவர்களுக்கு
    இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலையை எடுத்தது.

    பொருளாதார நிலையை அளக்க வருட வருமானம் என்ற அளவுகோலை
    ஏற்கச்செய்தது. கடைசியில் இது ஒரு நகைச்சுவையாக மாறினது
    நமக்கு தெரியும். வருட வருமானம் 4,00,000 ரூபாய்க்கு கீழே உள்ள
    குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் இடஒதுக்கீட்டை பெறலாம்
    என்று மத்திய அரசு கூறிய வாதத்தை ஏனென்று கேட்காமல்
    ஒப்புக்கொண்டது நகைச்சுவையின் உச்சம். (இந்த அளவுகோல் தமிழ்நாடு
    அரசிடமிருந்து புகுத்தப்பட்டது என்பது ஊரறிந்த விஷயம்).

    கிட்டத்தட்ட 35000 ரூபாய் மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு
    இடஒதுக்கீடு வழங்க வகை செய்த இந்த தீர்ப்பு இந்திய நீதித்துறை
    வரலாற்றில் ஒரு களங்கமாகவே இருக்கும்.

    இப்படிப்பட்ட வரலாறு கொண்ட இந்திய நீதித்துறை அயோத்தியா
    வழக்கில் தீர்ப்பை வழங்க இருக்கிறது. ஏதோ ஒரிருவர் உண்மையான
    நீதிபதிகளாக இன்றும் இருப்பர். செப்டம்பர் 24ம் தேதி தெரிந்துவிடும்.

  13. We need to really watch out for the jerks like Burkha Dutt, Prannoy Roy, Rajdeep Sardesais who will flare up communal sentiments and acts like proxies for islamic fundamentalists on this day. Sep 24th is the duck waiting to lay golden egg for them. To increase the TRP ratings these notorious white collar criminals may go to any extent.

  14. “தி ஹிந்து” என்ற பெயருடன் ஹிந்துக்களின் தன்மானத்தைத தரணி எங்கும், தயாநிதி மாறனின் உறவுடன் விற்றுத் திரியும் மஞ்சள் பத்திரிகை ஒன்றே போதும்,”பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்திருக்க முடியாது” என்று கொக்கரிப்பதற்கு.
    நீதி மன்றத் தீர்ப்பு 24 september அன்றோ வேறு என்றோ வரும்போது. எப்படி இருந்தாலும், “தி ஹிந்து” பத்திரிகையை வாங்குவதில்லை என்று ஹிந்துக்கள் அனைவரும் முடிவெடுத்தலே , ஹிந்து மதத்திற்கு நாம் செய்யும் தொண்டாகும்.

  15. டாக்டர் நாகசாமி ஒரு வரலாற்று நிபுணர். அவர் அங்கே கோவில் இருந்திருக்க வேண்டும், அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.

    இந்த முடிவுகளில் உண்மையான முக்கியத்துவம் முஸ்லிம் அமைப்புகள் மேல் இப்போது ஒரு தார்மீக ரீதியில் அழுத்தம் ஏற்படும் என்பதே என்று எனக்கு தோன்றுகிறது. பல முஸ்லிம் அமைப்புகளும் இந்த மசூதி ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது என்று ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. அப்படி கட்டப்படவில்லை என்பதை ஒரு தர்ம, நியாய ரீதியான அடிப்படையாக அவர்கள் பயன்படுத்தினர். இனி மேல் அது முடியாது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்றே நான் கருதுகிறேன்.

    ஆனால் இந்த முடிவின் சட்ட ரீதியான significance என்ன? நான் வக்கீல் இல்லைதான், ஆனால் இந்த உண்மைக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான significance-உம் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

    ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு, ஒரு ராஜா அந்த அரசின் சட்ட, நியாய, தர்மப்படி ஒரு கோவிலை இடித்து அங்கே ஒரு மசூதியைக் கட்டினான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று “ஹிந்துத்துவவாதிகள்” பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அகழ்வாராய்ச்சியும் அவர்கள் தரப்பை மேலும் வலுவாக்குகிறது. அது அந்த அரசு eminent domain என்ற கோட்பாட்டை அதன் சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு கடைப்பிடித்ததால் உருவான ஒரு நிலை. அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் இந்தியாவை விட்டு வெளியே போன கோஹினூர் வைரத்தை இனி மேல் ஆங்கிலேய அரசியிடமிருந்து திருப்பி வாங்கமுடியுமா? Statute of Limitations என்று ஒன்று இல்லையா? அந்த “அநீதியை” இன்றைய அரசு சரி செய்ய வேண்டும் என்று வாதிட்டால் சொத்து என்று ஒரு கோட்பாடு உருவாவதற்கு முன்னால் எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்; இப்போது இருக்கும் சொத்துரிமை அநீதி என்று எல்லாரும் அவர்கள் அவர்கள் பாங்க் கணக்கில் உள்ள பணத்தை அரசிடம் கொடுத்துவிடுவீர்களா? (நான் நிச்சயமாக மாட்டேன்.)

    தமிழ் ஹிந்து தளத்தில் சட்ட ரீதியாக இதைப் பற்றி யாராவது நிபுணர்கள் (சுப்ரமணிய சாமி மாதிரி யாரையாவது பிடிக்க முடியுமா?) எழுதினால் என் போன்ற layman-களுக்கு உதவியாக இருக்கும்.

    For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.

  16. பாபர் ஒரு இஸ்லாமிய படையெடுப்பாளன்.அவனுக்கு தர்மம் என்ற வார்த்தையே தெரியாது.
    சட்டம் ,தர்மப்படி கோயிலை இடிப்பார்களா?
    இது ஹாஸ்யத்தின் உச்ச கட்டம்!

    ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது
    இது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்
    அயோத்தி என்றாலே குழந்தைக்குக் கூட ஞாபகம் வருவது ராமன்
    அதுவும் ஹிந்துக்கள் கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகள் இல்லை
    லட்சக் கணக்கான மகான்கள் ,யோகிகள்,ரிஷிகள், முனிபுங்கவர்கள்,சித்தர்கள்,சாதுக்கள் பெரியோர்கள் இவர்கள் ராமன், ராமாயணம் , அயோத்தி கோசல நாடு ,சரயு நதி இவற்றைப் பற்றி எழுதி,பேசி,பாடி,கொண்டாடி நாட்டையும் மக்களையும் நல் வழிப் படுத்த தம் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர்.

    ஒன்றா ,இரண்டா கணக்கில் அடங்காத புராணங்கள்,கதைகள், பாடல்கள் இவை எல்லா பாரத மொழிகளிலும் ராமன் மற்றும் ராமாயணம் பற்றி உள்ளன.

    நாட்டுப் புறப் பாடல்களும், செவி வழிச் செய்திகளும் ஆயிரம் ஆயிரம்

    காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பிறக்கும் லட்சக் கணக்கான குழந்தைகள் அன்று தொட்டு இன்று வரை ராமனின் பெயர் தாங்குகின்றனர்
    அவன் பதாம் பட்ட இடங்கள் இன்றும் அவன் பெயரை சொல்கின்றன. மக்களால் பேசப் படுகின்றன
    நாம் மெக்காவிலோ, பெத்லஹெமிலோ ராமனின் ஆலயம் கேட்கவில்லை

    எல்லா விஷயத்திலும் சட்டப் படியே நடக்க முடியாது
    அதிலும் நம் நாட்டில் சட்டம் என்பது வேண்டாத ஹிந்துக்களை தண்டிக்கவே
    ஷா பனோ வழக்கில் விவாக ரத்து ஆன முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை முஸ்லிம் அடிப்படைவாதிகள் எதிர்த்த போது ராஜீவ் அரசு சட்டத்தையே மாற்றியது .

    காஷ்மீர் நம் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்தாலும் அதற்கு தனி அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது
    அங்கு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க முடியாது.நிரந்தரமாக் தங்க முடியாது
    முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஒரு கல்வி நிலையம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் சிவப்புக் கம்பளம் விரிக்கப் படுகிறது
    ஆனால் ஹிந்துக்களுக்கோ ஏராளமான தடைகள்
    ஹிந்துக்களின் கோயில்கள் அரசு, ஹிந்து விரோத மற்றும் அரசியல் கட்சிகளின் பிடியில் உள்ளன
    அவற்றின் சொத்துக்கள கொள்ளை அடிக்கப் படுகின்றன
    ஆனால் மற்றவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் மசூதி,சர்ச்களை அவர்களே நிர்வகிக் கின்றனர் .
    இன்னும் ஆயிரம் சொல்லலாம்
    இதற்கெல்லாம் சட்டம் என்ன செய்தது ?

  17. திரு RV அவர்களே

    1 ) இப்போது மட்டுமல்ல, 1940 வரையிலும் கூட இந்த இடத்திலிருந்த மசூதி ‘ஜன்மஸ்தான மசூதி’ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. (Sayyid Shahabuddin Abdur Rahman, Babri Masjid, 3rd print, Azamgarh: Darul Musannifin Shibli Academy, 1987, pp. 29-30.) https://en.wikipedia.org/wiki/Ayodhya_debate#cite_ref-Sayyid_Shahabuddin_Abdur_Rahman_1987.2C_pp._29-30_0-௦0

    எனவே இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் நீதிமன்ற வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமே ஆகும். இது ஆதாரமாகாது என்றால் இந்த அகழ்வாராய்ச்சியை ஏன் அரசு அனுமத்திருக்க வேண்டும்? இது போக, இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை? (immediate next logical step, aimed at the logical conclusion)

    2) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை? அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை?

    3 ) On the question of limitation: தொடர்ந்து வழக்குகளும், கேட்பும் மறு கேட்பும் (claims and counter claims) இருந்து வரும்போது எந்த நாளில் limitation துவங்குகிறது? துவக்கமே இல்லாதபோது ஏது limitation? பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து claim இல்லாவிட்டால்தானே லிமிடேஷன் வர முடியும்? இங்கேதான் தொடர் நிகழ்வுகள் உள்ளனவே? மாற்று அரசனின் காலம் முடிந்த பின்னர்தான் இதற்கு லிமிடேஷன் துவங்க வேண்டும் என்றால் அதற்கு என்ன பதில் இருக்க முடியும்? இந்த அயோத்திப் பிரச்சினை ஒரு முடிவில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் மட்டுமன்றி இன்று வரை தொடர்ந்திருக்கும்போது எங்கே வரும் லிமிடேஷன்? The Limitation Acts were passed in 1903 and 1963.

    4 ) இது போக சுற்றி உள்ள நிலத்தை எல்லாம் ராம பக்தர்கள் வாங்கி விட்டபோது அவர்களின் சொத்துரிமைக்கு உண்டா limitation?

    5 ) ராம பக்தர்களின் சொத்துக்களை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் மீது இந்த அகழ்வாராய்ச்சிகளின் தாக்கம் என்ன? இந்த அகழ்வாராய்ச்சி முடிவைக் கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப் படும் கையகப் படுத்தும் அரசின் நடவடிக்கை எப்படிச் செல்லும்? I draw your attention to the purpose as stated in the acquisition proceedings. If the purpose were to be disturbed or negated by the recent archeological findings, the acqusition should be declared as illegal and the ownership restored to the rightful owners prior to the acquisiton. They have all along stated that their intention is to build a Ram Mandir in their own lands and that cannot be prevented once the archelogical findings establish the presense of Janmasthan Mandir. The Government might enforce the protection of Monuments laws and prevent any construction within 300 metres of the monument. That perhaps will go to the next stage in the fight for Ram Mandir. What happened in Vellore Jalagandeswarar Temple in the 1983-84 will happen on a large scale so as to continue the worship of Lord Rama in the Janmasthan.

    6) Even in the British days the Mosque was referred to as Janmasthan Mosque, but the independent India refers to it as Babri Mosque. What an irony?

  18. திரு RV அவர்களே

    ///For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.///

    ஒரு கருத்தைக் கொள்வதும் அதில் உறுதியாக இருப்பதும் உங்கள் தனி உரிமை.

    நியாய தர்மப் படி, இந்த இடத்தில் கோவில் இருப்பது அகல்வாராய்ச்சியினால் உறுதிப் பட்ட பின்னர், அந்த இடம் ஜன்மஸ்தான் என்பதை 1940 வரை அங்கே வழிபட்ட இஸ்லாமியர் உள்பட அனைவரும் ஒப்புக்கொண்ட பட்சத்தில், இந்த இடத்தில் ராம ஜன்மச்தானக் கோவில் திரும்பவும் கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே உண்மை. நியாயமும் தர்மமும் இதைத்தான் சொல்லும். வேறு வழியில்லை. விட்டுக் கொடு என்பது வேறு. செய்வது தவறு என்பது வேறு. செய்வது தவறில்லை என்பதே நியாய, தர்மம். இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் (மாற்று மதத்தினர் உள்பட) உறுதியாகவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

    சட்டப்படியான விளக்கத்தை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.

    இடித்தது குற்றம்தான் என்றாலும், கும்பலான நடவடிக்கைகள் என்றுமே சட்டத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. உணர்வுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதிலும் கூட சொத்துரிமையை நிலை நாட்ட உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் அமைதியான நடவடிக்கைகளாக அமைவதில்லை, அத்துமீறல்கள் உண்டுதான். அவற்றை நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை மூலம் நேர் செய்யும்.

  19. எனது மேற்கூறிய கருத்துக்களை ஒட்டிய கருத்துக்கள் அடங்கிய இந்த yahoo கட்டுரையைப் பாருங்கள்:

    https://in.news.yahoo.com/48/20100921/1241/top-pick-wisely-among-ayodhya-s-choices.html

    Whatever the judicial pronouncement on the issue of “adverse possession”, if the archaeological and historical evidence are found to be weighed in favour of the Hindu claimants, it would make it extremely difficult to consider shifting the makeshift Ram temple from the “garbha griha” of the erstwhile Babri Masjid.

  20. ஒரு சமுதாயம் அல்லது நாடு பல காலம் அடிமைப்பட்டபின் அதிலிருந்து மீண்டு வரும்போது முன்பு ஆண்டவர்களின் அடிமைச் சின்னங்களை அப்புறப் படுத்துவது என்பது இயற்கையே
    இந்தியாவில் மட்டுமே முதல் கவர்னர் ஜெனரலாக மவுன்பட்டேன் நியமிக்கப் பட்டதிலிருந்து,ஆங்கிலேயர்கள் வைத்த சிலைகள்,தெருப்பெயர்கள்,ஊர்ப்பெயர்கள், அவர்களது நினைவுச் சின்னங்கள் இவற்றை அப்படியே வைத்திருக்கிறோம்.
    சிலோன், சிறிலங்காவாக மாறியது,பர்மா, மியன்மாராக மாறியது, ரொடீசியா ,ஜிம்பாப்வே ஆக மாறியது .ஆனால் இவ்வளவு புராதனப் பாரம்பரியம் உள்ள இந்திய தன் பெயரைக் கூட ‘பாரதம்’ என்றுமாற்ற வக்கில்லாமல் உள்ளது.

    அதே போல் மதுரா ,காசி கோயில்கள் இடித்து கட்டப் பட்ட மசூதிகள் , அப்சல் கானின் கல்லறை,அவுரங்கசீப்பு பேரில் சாலைகள்,ஜின்னாவின் வீடு இன்னும் எத்தனையோ அப்படியே விட்டு வைத்துள்ளோம்.
    இது ஹிந்துக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது
    ஆனால் இது வெறும் ஒரு வழிப் பாதையாக உள்ளது.
    மற்றவர்கள் இதை மதிப்பதில்லை .
    மாறாக ஹிந்துக்கள் மேலும் கொடுமையும் இழிவும் படுத்தப் படுகிறார்கள்.

  21. ///ஆனால் இவ்வளவு புராதனப் பாரம்பரியம் உள்ள இந்திய தன் பெயரைக் கூட ‘பாரதம்’ என்றுமாற்ற வக்கில்லாமல் உள்ளது. ///

    நமது அரசியலமைப்புச் சட்டம் முதல் பிரிவே இப்படிச் சொல்கிறது.
    1. Name and territory of the union
    (1) India, that is Bharat, shall be a Union of States.

    இந்தியா, அதாவது பாரதம் ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும்.

    இந்த தேசத்தை நாம்தான் பாரதம் என்று சொல்லிப் பழகவேண்டும். இதனால்தான் நான் பாரதம் பாரதம் என்றே எழுதி வருகிறேன். எனது ‘உலக சகோதரத்துவ தினமாக’ கட்டுரையில் மட்டும் இந்தியா என்ற சொல்லைக் குறிக்கக் காரணம் அது உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் அடிப்படைவாதியால் இது எழுதப்பட்டது என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதால்தான்.

    நாம் அனைவரும் ‘பாரதம்’ என்றே கூற ஆரம்பித்தால் காலப்போக்கில் இப்பெயர் நிலைக்கும். அப்படிக் கூறாதது நமது பிழையே. பாரதம், பாரதீயர் என்றே வழங்க ஆரம்பிக்கவேண்டும். இது நமது பாரம்பரியம் என்ற உணர்வை எழுச்சி பெறச்செய்யவேண்டும்.

  22. 1940 வரை ஜன்மஸ்தான் மசூதி என்றே அழைக்கப் பட்ட இடத்தை, பாப்ரி மசூதி என்று அழைக்கத் துவங்கி எந்த அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

  23. சப்தர்ஜங் முகமத் முக்கீம் என்பவர் பெர்சியாவில் 1722 ல் பிறந்து பாரதத்டுக்குப் புலம் பெயர்ந்தவர். முகலாய மன்னர் முகமத் ஷாவின் ஆளுகையில் ஔத் பிரதேசத்தின் மன்னரானவர். காஷ்மீரத்தின் கவர்னர் ஆகவும் பதவி வகித்தவர். 1755 இல் மறைந்த இவருக்கு தில்லியில் இருக்கும் கல்லறை பல நூறு ஏக்கரில் பிரம்மாண்டமாக இருக்கிறது.

    நசீருத்தீன் முகமத் ஹுமாயூன் பாபரின் மகன். 1508 இல் பிறந்து 1556 இல் இறந்தவர். தற்போதைய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், வடஇந்தியா உள்ளடக்கிய தேசத்தின் மன்னர். தில்லியில் இருக்கும் ஹுமாயூனின் கல்லறை பிரம்மாண்டமானது. ஆயிரம் ஏக்கர் இருக்கும்.

    ஹுமாயூனின் கல்லறை உலக பாரம்பரியச் சின்ன்னமாகப் (ஐ. நா. ஆதரவுடன்) பாதுகாக்கப்படுப் பராமரிக்கப் படுகிறது.

    ஆனால், நமது பாரதத்தின் பாரம்பரியத்துக்கு இந்த மரியாதை இல்லை. ராம ஜன்ம பூமியை இது ஜன்ம பூமி என்று நிரூபிக்கமுடியாமல் திணறுகிறோம். சுதந்திர பாரதத்துக்கு வெட்கக் கேடு.

    பாரதத்தின் பாரம்பரியம் அன்னியரின் கல்லறைகள் என்று என்னும் அளவுயக்கு, தூத்துக்குடி ஆஷ் துரையின் கல்லறை முதல், தரங்கம்பாடியின் டேனிஷ் மனிதர்களின் கல்லறை, பாண்டிச்சேரிப் பிரஞ்சுக்காரர்களின் கல்லறை, புலிக்காட்டுப் போர்ச்சுகீசியர்கள் கல்லறை, கோவாவின் போர்ச்சுகீசியர்களின் கல்லறை (சேவியர் கல்லறை உள்பட) என நீண்ட பட்டியலின் சிகரம்தான் ஹுமாயூன் கல்லறை. நமது தேசம் காலனீயக் கல்லறைகளின் தேசம் என்ற நிலை என்றுதான் மாறுமோ?

  24. உமாசங்கர்,
    // இப்போது மட்டுமல்ல, 1940 வரையிலும் கூட… // அங்கே கோவில் இருந்தது என்பதில் நாம் இருவரும் வேறுபடவில்லையே?

    // இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை? (immediate next logical step, aimed at the logical conclusion) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை? அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை? //
    தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் பற்றி விவரமாக பேசும் அளவுக்கு நான் வல்லுனன் இல்லை. ஆனால் தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டால் அங்கே ஏன் வழிபாடு பாதுகாக்கப்பட வேண்டும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் 60 வருஷமாகத்தான் அங்கே வழிபாடு நடக்கிறது? (1947-இல் சட்டத்தை மீறி அங்கே விக்ரகம் வைத்ததாக நினைவு) பாபர் மசூதி கட்டும் முன் வழிபாடு என்று சொல்வீர்களானால் சிந்து சமவெளி நாகரீகத் தளங்கள் (பேர் மறந்து விட்டது, லோதாலா?) கூட தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கே இடிபட்டுக் கிடக்கும் வழிபாட்டு தளங்களில் எல்லாம் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன? தொல்பொருள் துறையைப் பொறுத்தவரை ஆள் வராமல் இருந்தால்தான் ஒரு பழங்கால சின்னத்தை காப்பாற்ற முடியும். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் மனம் கவர்ந்த தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களை ஏன் எல்லாரும் பார்க்கும்படி வைக்கவில்லை?

    // தொடர்ந்து வழக்குகளும், கேட்பும் மறு கேட்பும் (claims and counter claims) இருந்து வரும்போது எந்த நாளில் limitation துவங்குகிறது? //
    பாபர் இறந்து ஒரு அறுநூறு வருஷம் இருக்குமா? அவர் கட்டிய மசூதியை இடிக்க வேண்டும் என்று மொகலாய அரசில் கேஸ் போட முடியாது. 1800களில் கேஸ் போட்டுவிட்டாயிற்று என்று வைத்துக்கொண்டாலும் முன்னூறு வருஷம் முன்னால் நடந்த “அநீதிக்கு” statue of limitation பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

    // சுற்றி உள்ள நிலத்தை எல்லாம் ராம பக்தர்கள் வாங்கி விட்டபோது அவர்களின் சொத்துரிமைக்கு உண்டா limitation? ராம பக்தர்களின் சொத்துக்களை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள்… //
    சுற்றி உள்ள நிலம் ஒரு பிரச்சினையா என்று எனக்கு தெரியாது. சட்டப்படி வாங்கி இருந்தால், அரசு eminent domain கோட்பாட்டை செலுத்தாத வரையில் அவர்களுக்கு என்ன பிரச்சினையும் இருக்கக் கூடாது என்றே என் குறைந்த சட்ட அறிவுக்கு படுகிறது. ஆனால் அரசுக்கு eminent domain கோட்பாட்டை அமல்படுத்த எல்லா உரிமையும் உண்டு.

    // இடித்தது குற்றம்தான் என்றாலும், கும்பலான நடவடிக்கைகள் என்றுமே சட்டத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. உணர்வுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதிலும் கூட சொத்துரிமையை நிலை நாட்ட உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் அமைதியான நடவடிக்கைகளாக அமைவதில்லை, அத்துமீறல்கள் உண்டுதான். அவற்றை நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை மூலம் நேர் செய்யும். //
    உணர்வுகளின் அடிப்படையில் இடித்தது சரி என்று சொன்னால், அந்த கோட்பாட்டை வைத்து எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். உங்களைப் போன்று சீர்தூக்கி ஆராயக் கூடிய ஒருவரே இந்த கோட்பாட்டை முன் வைப்பது வருத்தத்தை தருகிறது. 1984 டெல்லி கலவரமும் உணர்வுகளின் அடிப்படையில் நடந்ததுதான். 1993 பம்பாய் குண்டு வெடிப்பும் அப்படித்தான். கோத்ரா அப்படித்தான். அஹமதாபாதும் அப்படித்தான்.

    ஸ்ரீதரன்,
    // பாபர் ஒரு இஸ்லாமிய படையெடுப்பாளன்.அவனுக்கு தர்மம் என்ற வார்த்தையே தெரியாது. // சரி ஹலால் என்ற வார்த்தை தெரிந்திருக்கும் இல்லையா? 🙂 Jokes apart, உங்கள் பதில் இதயபூர்வமாக, உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. லாஜிக் கொஞ்சம் மிஸ்ஸிங். // ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது // என்றால் கோர்ட் கீர்ட் எல்லாவற்றையும் மூடிவிட்டு எல்லா பிரச்சினைக்கும் referendum வைக்கலாம். உங்கள் வாதத்தை நீட்டித்தால் பாகிஸ்தானில், பங்களாதேஷில், மலேஷியாவில், ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு கொடுமையும் நியாயப்படுத்தலாம். அப்புறம் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை என்று எழுதுகிறீர்கள். பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரும் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட பாரதீய ஜனதா இன்னும் இந்தியாவில் 51% சதவிகிதம் வாக்குகள் பெறவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.

    // ஒரு சமுதாயம் அல்லது நாடு பல காலம் அடிமைப்பட்டபின் அதிலிருந்து மீண்டு வரும்போது முன்பு ஆண்டவர்களின் அடிமைச் சின்னங்களை அப்புறப் படுத்துவது என்பது இயற்கையே… // ஆனால் நீங்கள் சொல்லும் மாற்றங்கள் அரசு மக்களின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு சட்டபூர்வமாக செய்தவை. என் பக்கத்து வீட்டுக்காரனின் முப்பாட்டன் செய்த “அநீதிக்கு” பழி வாங்க நான் இன்று சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் ungaL முப்பாட்டனும் என் முப்பாட்டனும் அவரவர் மனைவியை, பெண் குழந்தைகளை, சகோதரிகளை இன்றைய விழுமியங்களின்படி அடக்கி ஆண்டிருப்பார்கள். அதனால் தினமும் ஒரு பெண் உங்களை வந்து அடிப்பாள், நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒரு விதி போடமுடியுமா என்ன?

  25. அரசியல் நிர்ணயச் சட்டத்தில் India that is Bharat
    என்று இருந்தாலும் நமது அரசு அலுவலகங்களில், மற்றும் கோப்புகளில்,ஆவணங்களில் ஆங்கிலத்தில் எழுதும்போது
    Government of India
    தானே எழுதப்படுகிறது.

  26. அதேபோல்
    அகமதாபாத் -கர்ணாவதி
    ஹைதராபாத்- பாக்யநகர்
    அல்லாஹாபாத்- பிரயாகை
    டில்லி- இந்த்ரபிரஸ்தம்

  27. ஆர் வி

    நீங்கள் சொல்வதில் அர்த்தம் இல்லை. முற்போக்கு பேச்சு பேசுகிறீர்கள். உங்கள் வாதப் படியே அந்தக் காலத்தின் வழக்கப் படி அந்தக் காலத்தில் தலித்துக்களை தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தார்கள். ஆகவே இப்பொழுது அவர்களுக்கு உரிமை கொடு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்ப்பதும் உங்கள் லாஜிக் படி முறையற்றதுதானே. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று சொல்வீர்களா? ஒரு தவறு அதுவும் இமாலயத் தவறு நடந்து விட்டால் அதைத் திருத்துவதுதானே அரசாங்கத்தின் கடமை. மேலும் நீங்கள் சொல்வது போல அந்த இடத்தின் மீதான இந்துக்கள் உரிமை கோருவது காலவதியாகி விடவில்லை இடித்த நாளில் இருந்தே தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் அதற்கு ஏராளமான ஆவணங்கள் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே அநியாயமாக இடிக்கப் பட்ட ஒரு கோவிலுக்காக அன்றில் இருந்து இன்று வரை இடைவெளியே இல்லாமல் உரிமை கோரி வருகிறார்கள் ஆகவே காலவதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் காலத்தில் நடந்த தவறுக்காக ஏன் ஜப்பான் சீனாவிடம் மன்னிப்புக் கோருகிறது? ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்? இன்றும் கூட ஹோலோகாஸ்ட் குற்றவாளிகள் என்று யாரும் கண்டு பிடிக்கப் பட்டால் அவனுக்குத் தண்டனை உறுதிதான். ஆகவே ஒரு சில தவறுகளுக்குக் கால நியதி என்று எதுவும் கிடையாது அதில் இந்த ராமர் கோவிலும் உண்டு. நாகசாமி அவர்கள் மட்டும் அல்ல என் எஸ் ராஜாரம் அவர்களும் கூட இன்று முழுமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ் இந்துவில் விரைவில் மொழி பெயர்ப்பு வரும் அதையும் படியுங்கள். இல்லை என் எஸ் ராஜாராமை விட, நாகசாமியை விட நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு சரியானது என்று நீங்கள் கருதினால் அது தவறான நிலைப்பாடு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சோமநாதபுரத்திலும், மதுராவிலும் காசியிலும் கூட இந்துக் கோவில்கள் இடித்துத்தான் மசூதிகள் கட்டப் பட்டிருந்தன ஏன் வல்லபாய் படேல் அது காலாவதியான ஒன்று என்று விட்டு விட்டுப் போகாமல் புனர் நிர்மாணம் செய்து மீண்டும் கோவில்களை எழுப்பினார்? ஒரு சில தவறுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட சரி செய்யப் படத்தான் வேண்டும். இட ஒதுக்கீடுக்கு ஒரு சட்டம் இந்துக் கோவில்களுக்கு வேறு சட்டம் என்பது இரட்டை வேடமாகும். இட ஒதுக்கீட்டுக்கு இல்லாத காலவதியை இந்துக் கோவிலுக்கு மட்டும் அழைக்கிறீர்கள். அது இரட்டை வேடம். அதைத்தான் நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

    உங்கள் வாதப்படியே ஷா பானு வழக்கில் ஏன் தற்கால சட்டத்தை அஹமதாபாத் கோர்ட் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் ராஜீவ் காந்தி சட்டத்தையே மாற்றினார். ஆக முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு ஒரு சட்டமா? முதலில் அது ஒரு மசூதியே கிடையாது அது வெறும் கும்முட்டம் மட்டுமே அதில் வழிபாடும் நடத்தப் பட்டது கிடையாது. பாபர் அந்தக் காலத்தில் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்தது சரியென்றால் அந்தத் தவறைச் சரி செய்ய இன்று இடித்ததும் சரியே. முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. சட்டம் என்றால் எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் பொதுவாக இருக்க வேண்டும், முஸ்லீம்களுக்காக ஷா பானு வழக்கில் அரசியல் சட்டமே திருத்தப் படுகிறது ஆனால் இந்துக்களின் இடிபட்ட கோவிலை மீட்க வேண்டும் என்றால் உங்களுக்கு சட்டம் எல்லாம் வந்து விடுகிறது. முதலில் அந்தக் கும்முட்டத்தை மசூதி என்று சொல்வதே பெரிய அயோக்யத்தனம். அது ஒரு காட்டுமிராண்டி மன்னனின் காட்டுமிராண்டித் தளபதியால் இடிக்கப் பட்ட கோவில் இருந்த இடம். அந்த அவமானச் சின்னம் இடிக்கப் பட்டது சட்டப் படி, தர்மப் படி, நீதியின் படி, முற்றிலும் நியாயமான ஒரு செயலே. கும்முட்டம் இடிக்கப் பட்டது இந்துக்களின் உணர்வுபூர்வமான ஒரு செயல் அதில் எவ்விதத் தவறும் கிடையாது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இது போல இடித்து அதன் மேல் மசூதிகள் கட்டப் பட்டுள்ளன. அவற்றையும் இடித்து அந்தக் கோவில்கள் அனைத்தும் புனர் நிர்மாணம் செய்யப் பட வேண்டும். சட்டம் என்பது ஒரு வழிப் பாதையாக இருக்குமானால் அந்தச் சட்டம் நாசமாகப் போகக் கடவது.

    அன்புடன்
    விஸ்வாமித்ரா
    [edited and published]

  28. //அதே போல் மதுரா ,காசி கோயில்கள் இடித்து கட்டப் பட்ட மசூதிகள் , அப்சல் கானின் கல்லறை,அவுரங்கசீப்பு பேரில் சாலைகள்,ஜின்னாவின் வீடு இன்னும் எத்தனையோ அப்படியே விட்டு வைத்துள்ளோம்.
    இது ஹிந்துக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது
    ஆனால் இது வெறும் ஒரு வழிப் பாதையாக உள்ளது.
    மற்றவர்கள் இதை மதிப்பதில்லை .//
    பெருந்தன்மை என்று நாம் தான் நினைத்து கொண்டிருக்கிறோம். அவர்கள் இதனை இளிச்சவாய்தனமாகத்தான் பார்க்கிறார்கள். அதனால் தான் மேலும் மேலும் நம் மேல் தாக்குதல் நடத்துகிறார்கள்.

  29. விஸ்வாமித்ரா,

    // இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது… // இட ஒதுக்கீடு அன்றைய அநீதிக்கு இன்றைக்கு பரிகாரம் இல்லை. இன்றைய சமூக ஏற்றத்தாழ்வுக்கு பரிகாரம். தமிழ் நாடு அரசு சென்னைக்கு அடிப்படை வசதிகள் இருக்கும் அளவுக்கு ராமநாதபுரத்துக்கு இல்லை, அதனால் இந்த பட்ஜெட்டில் ராமநாதபுரத்துக்கு சென்னையை விட நிறைய பணம் செலவழிக்கப் போகிறோம் என்று சொன்னால் அதுவும் இட ஒதுக்கீடுதான்.

    // இடித்த நாளில் இருந்தே தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் // யாரிடம்? பாபர், அக்பர், ஷாஜஹாநிடமா? அட என்னங்க!

    // அந்தக் காலத்தில் நடந்த தவறுக்காக ஏன் ஜப்பான் சீனாவிடம் மன்னிப்புக் கோருகிறது? ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்? // பாபர் இறந்தது 1530 வாக்கில். அதனால் மசூதி அதற்கு முன் இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜப்பானின் மன்சூரிய ஆக்கிரமிப்பு 1936 -இல். ஹோலோகாஸ்ட் 1940 -களில் என்பதை சவுகரியமாக மறந்துவிடுகிரீர்களே!

    // இல்லை என் எஸ் ராஜாராமை விட, நாகசாமியை விட நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு சரியானது… // என்.எஸ். ராஜாராம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது – ஏதோ சிந்து சமவெளி நாகரீகம், ஃ போட்டோஷாப் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். டாக்டர் நாகசாமி எந்த அரசியல், சட்ட நிலையையும் இங்கே எடுக்கவில்லையே? சரியாக படித்துப் பாருங்கள். அவரது முடிவுகளின் சட்ட, நியாய முக்கியத்துவம் என்ன என்பது பற்றித்தானே பேச்சு?அதனால் வேறு வேறு நிலைப்பாடு என்ற பிரச்சினையே எழவில்லையே? வரவர எதையும் முழமையாக படிக்காமல் அவசரக் கோலமாக எழுதுகிறீர்கள்.

    // சோமநாதபுரத்திலும், மதுராவிலும்… // இங்கே கேஸ் நடக்கிறது. ஆராய்ச்சி முடிவுகள் கேசை எப்படி பாதிக்கும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அயோத்தியில் 1992-இல் நடந்தது சட்டப்படி குற்றம் என்பதையாவது ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சோம்நாத்தில் படேல் சட்டத்தை மீறி கட்டடங்களை உடைத்தாரா என்ன?

    // உங்கள் வாதப்படியே ஷா பானு வழக்கில் ஏன் தற்கால சட்டத்தை அஹமதாபாத் கோர்ட் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் ராஜீவ் காந்தி சட்டத்தையே மாற்றினார். ஆக முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு ஒரு சட்டமா? // அது ராஜீவின் தவறு. ஆனால் “சட்டப்படிதான்” தவறு செய்திருக்கிறார். கல்யான் சிங்கும் ஒரு ordnance பாஸ் செய்திருக்கலாம். சட்டப்படியான தவறாக இருந்திருக்கும். இதை எல்லாம் நீட்டித்தால் பாஜக அரசு என் ஷா பானோ சட்டத்தை மாற்ற ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்றும் கேட்கலாம். கிள்ளிப்போட்டுவிட்டால் விஷயம் தீர்ந்துவிடும், அடுத்த முறை எதை சொல்லி ஓட்டு கேட்க முடியும் என்றா? கவனிக்கவும் மாற்ற முயற்சி செய்து தோற்கவில்லை, மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைத்தான் சொல்கிறேன்.

    // முதலில் அது ஒரு மசூதியே கிடையாது அது வெறும் கும்முட்டம் மட்டுமே அதில் வழிபாடும் நடத்தப் பட்டது கிடையாது. // வழிபாடு நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன? அங்கே அன்னதானம் செய்யப்பட்டிருந்தால் நல்ல காரியம் என்று விட்டுவிடுவீர்களா? சட்டப்படி எனக்கு சொந்தமான கட்டடத்தை நீங்கள் ஏறி உடைக்கலாம் என்றால் அப்புறம் சட்டம் எதற்கு? இந்த லாஜிக்கை நீட்டித்தால் நாளை கருனாநிதிச் சோழன் காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகம் மீது படையெடுத்தும் போகலாம். ஒரு சுதந்திர நாட்டில் dispute resolution mechanism என்று ஒன்று வேண்டும். அது நம் நாட்டில் கோர்ட். அதை விட்டுவிட்டு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றால் எப்படி?

    // முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. // விஸ்வாமித்ரா, தமிழக பிராமணர்களில் “அந்நிய, ஆரிய ரத்தம்” அதிகம், அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், முதலில் இருந்த நிலை திரும்பி வரவேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்படி சொல்ல உங்களுக்கு தயக்கம் இல்லை. Consistency என்று ஒன்று வேண்டாமா?

    // உணர்வுபூர்வமான ஒரு செயல் அதில் எவ்விதத் தவறும் கிடையாது // உங்கள் வாதமும் உணர்வுபூர்வமாகத்தான் இருக்கிறது. உணர்வுபூர்வமான செயலில் தவறாகாது என்றால் பம்பாயில் குண்டு வெடித்தவனும் இதையேதான் சொல்வான்.

  30. @RV
    சட்டம் என்று பார்த்தால் நம் ஜனநாயக நாட்டில் பெரும்பான்மைக்கு என்ன சட்டம் இருக்கிறது?

    மசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது

    நீங்கள் இங்கு எழுதியபடி போராட்டம் எதோ 60 ஆண்டுகளாக நடப்பதாக நினைத்தால் அது தவறு. நானும் சுதந்திரத்துக்குப் பின் இது அரசியல் ஆதாயத்துக்கு ஆரம்பிக்கப்பட்டது என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். சில வருடங்கள் முன் இந்தியா டுடே விலும் மேலும் சில பத்திரிக்கைகளிலும் கூட வந்ததாக நினைவு, அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. பின்னாளில் அதற்கு அரசியல் கட்சிகள் கை கொடுத்து பின் அது கொஞ்சம் அரசியல் சுய நலத்துக்காக வேறு அவதாரம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே உள்ள மக்களின் உண்மை உணர்வுகள் வெளியில் தெரியும் அரசியல் உணர்வுகளால் நாம் ‘அரசியல்’ என்று முத்திரை குத்தி விட்டோம்.

    ஒருவனின் பூர்வாங்க இடம் என்று கருதும் ஒன்றின் முக்கியத்துவம் அவனுக்கு புரியும் அளவு ஊடகங்களின் பார்வையில் பார்க்கும் நமக்குப் புரியாது.

    இங்கு கோவில் இருந்தது. ஆனால் சட்டம் இல்லை என்பதால் உனக்கு இல்லை என்று சொல்லுவதை விட இரு தரப்பையும் வைத்து இரு தரப்புக்கும் இசைவான ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதை அரசியல், சட்ட அளவுகோல் கொண்டு பார்ப்பதை விட அங்கு வாழும் மக்களின் ( இரு தரப்பு மக்களும் தான்) உணர்வுகள் கொண்டு பார்க்க வேண்டும்.

  31. //// முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. // விஸ்வாமித்ரா, தமிழக பிராமணர்களில் “அந்நிய, ஆரிய ரத்தம்” அதிகம், அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், முதலில் இருந்த நிலை திரும்பி வரவேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்படி சொல்ல உங்களுக்கு தயக்கம் இல்லை. Consistency என்று ஒன்று வேண்டாமா?//

    மிகவும் சரிதமிழ் நாட்டை விட்டு மட்டும் அல்ல , இந்தியாவை விட்டே வெளியேறவேண்டும், அதே போல் பூர்வ குடிகளும் பூர்வ மதமாகிய இந்து மதமும் மட்டுமே இங்கே இருக்கட்டும். புதிதாக படைஎடுப்புகளினாலும், பரப்பல்களினாலும் இங்கே வந்த வழக்கில் உள்ள மற்ற மதங்களும் , மத கொள்கைகளும் அடியோடு வெளியேறட்டும்.

  32. Anubulla நண்பர்களே முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எப்படியும் சட்டம் உங்களுக்கு சாதகம் இல்லை என்பது முன்பே தெரிந்து இப்போது லாஜிக் “ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது’ என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டிர்கள். எப்படியாவது தீர்ப்பை தள்ளி வைக்க முயற்சி செய்திர்கள். முடியவில்லை.
    அதுதான் இதை வைத்து ஒரு முறை ஆட்சி கட்டிலில் கூட ஏறி விட்டிர்கள். அத்துடன் மொத்தமாக இருந்த நீங்கள் அதிகார போதை வந்ததும் துண்டு துண்டாக பிரிந்து விட்டிர்கள்.
    ராமன் ஒரு மிக அமைதியான கடவுள் அவதாரம் என்றுதான் நான் நினதுகொண்டு இருக்கிறேன். இப்படி இன்னொரு சமுதாயத்தை அவமதிக்க sollavillai

  33. /// விஸ்வாமித்ரா, தமிழக பிராமணர்களில் “அந்நிய, ஆரிய ரத்தம்” அதிகம், அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், முதலில் இருந்த நிலை திரும்பி வரவேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்படி சொல்ல உங்களுக்கு தயக்கம் இல்லை. Consistency என்று ஒன்று வேண்டாமா?//

    @RV

    இதை சொல்லுவதற்கு முன் அதற்கும் ஆதாரம் தரணும். உங்களுடைய இந்த சம்பந்தம் இல்லாத கருத்து வேறு சிலருக்கு இந்த பதிவின் திசையை மாற்ற கிடைக்கும் சாதனமாக அமையுமே தவிர இந்த விவாதத்துக்குஉதவாது.

  34. கீழ்கண்ட சர்வேயில் கலந்து கொண்டு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

    https://spreadsheets.google.com/viewform?formkey=dF9yMFhJWTBnelBTUTFWaGF5aWM5VFE6MQ

    A quick survey on Shri Ram Janmbhumi – Babri Masjid Issue

    We, at Social Cause, are conducting a small survey to get people’s view on the Ram Janmbhumi issue. Social cause is an organization committed for social thought and action (https://www.socialcause.org)

    * Required

    Are you aware that Shri Ram Janmbhumi verdict is going to come on Sep 24th? *

    * Yes
    * No

    How sensitive are you about this issue? *

    * Very Sensitive
    * Kind of Sensitive
    * I don’t care

    Is Shri Ram Janmasthan at Ayodhya a sacred place for Hindus? *

    * Yes
    * No

    How do you see Shri Ram in your life? *

    * A National Hero
    * As a mythical character
    * Other:

    What would you like to see at the disputed site? *

    * Shri Ram Temple
    * Mosque
    * School, Orphanage etc
    * Other:

    What is the best way to settle this issue? *

    * Out of court settlement between Hindus and Muslims
    * Court and Judiciary
    * Legislation in favour of temple
    * Status quo to be maintained

    How do you see the Ram Janmbhumi movement? *

    * National Pride
    * Religious Issue
    * Political Issue

    Please provide your email address(we take care of your privacy!)

    Powered by Google Docs Report Abuse – Terms of Service – Additional Terms

  35. திரு virutcham மற்றும் RV அவர்களே,
    என் மேல் கோபம் வேண்டாம், உங்களுக்கு சங்கடபடுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். நான் உங்களை காயபடுத்துவதற்காக இவ்வாறு கூறவில்லை.
    நான் கூறியது வெறும் வாதத்திற்காக, இதனால் சிலர் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும். என் எண்ணமும் அது அல்ல.
    அதை போல் நீங்கள் குறிப்பிட்டது ஒரு சிலரை மனம் வருத்தியிருக்கும். அதனால் நான் குறிப்பிட்டது நியாயம் ஆகாது. அதுபோல்
    திரு விஸ்வாமித்ரா அவர்கள் கூறியதும் கூட சிலரை மனம் வருத்தியிருக்கும், அதற்காக நீங்கள் கூறியதும் சற்று முகம் சுளிக்க கூடியது தான்.
    வாடகை வீட்டை காலி பண்ணவே மனசு இல்லாத இந்த காலத்தில் மத உணர்வு சம்மந்த பட்ட விசயத்தை காலி செய்வது என்பது எளிதாக மனம் வரக்கூடிய விஷயம் அல்ல. அதையும் அவர்கள் தங்கள் வெற்றியின் அடையாளமாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் இந்த இடத்தில் ராமன் பிறக்கவே இல்லை ராமன் பிறந்ததது வேறு எங்கோ உள்ள அயோத்யா. இந்த அயோத்யாவின் வயதே வெறும் 2700 வருடங்கள் தான். இங்குதான் கோவில் இருந்து அதனை இடித்து மசூதி கட்டபட்டிருந்தால் எங்களுக்கு அதனை விடுவதற்கு எந்த கஷ்டமும் இல்லை என்று கூறி மெயில் அனுப்பியும் வருகிறார்கள்.
    நான் இந்த பதிவை திசை மாற்ற விரும்புகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்,என்னால் அப்படி நடக்க வேண்டாம் மீண்டும் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்.

    இங்கே பிரச்னையின் மையத்தை அலசுபவர்களின் அளவுக்கு எனக்கு இதில் விஷயம் தெரியாது, உங்கள் அனைவரிடம் இருந்து தான் நிறைய தெரிந்து கொள்கிறேன்.

  36. நினைத்தது நடந்து விட்டது.
    உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்து விட்டது.
    29ம் தேதி மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்க படும்-இது இப்படியே செல்லும்
    என எதிர்பார்க்கலாம். சில வாரங்கள் கழித்து மக்கள் மறந்து விடுவார்கள்
    இந்திய நீதிமன்றங்களுக்கு முதுகெலும்பு உடைந்து மாமாங்கம் ஆகிவிட்டது.

    இதை தடுத்த புண்ணியவான் ஒரு ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியாம்.
    இந்து-முஸ்லீம் சண்டை வந்து விடுமாம். எனக்கென்னமோ காங்கிரஸ்
    அரசே இவரை தூண்டி விட்டிருக்கும் என தோன்றுகிறது. நாம்தான்
    அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து கிடந்தோம்.

    அதற்குள்ளாக நீண்ட S.M.Sக்கு தடையாம். பள்ளிகளுக்கு விடுமுறையாம்.
    ஒரு செயற்கை பதற்றத்தை உருவாக்கி வேண்டியதை சாதித்து
    விட்டார்கள். ஹிந்துக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்று
    எட்டப்பன்களுக்கு தெரிந்திருக்கிறது.

  37. மேலும் ஒரு முரண்.
    நேற்றோ அதற்கு முன் தினமோ இதே போன்ற வழக்கில் (இந்து முஸ்லீம்
    சண்டை வந்துவிடும், ஆகவே தீர்ப்பை வழங்க கூடாது என்ற வழக்கில்),
    உச்சநீதிமன்றம் தான் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த வழக்கின்
    நடைமுறையில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.
    We have no jurisdiction என்றது.

    ஆனால் அதை போன்ற இன்னொரு வழக்கில் இன்று தலையிடுகிறது.
    Jurisdiction இன்று வந்து விட்டது போல.
    யாரேனும் வக்கீல் இருந்தால் இந்த கண்ராவியை விளக்கவும்.

  38. ஆர் வி
    //பாபர் இறந்து ஒரு அறுநூறு வருஷம் இருக்குமா? அவர் கட்டிய மசூதியை இடிக்க வேண்டும் என்று மொகலாய அரசில் கேஸ் போட முடியாது. 1800களில் கேஸ் போட்டுவிட்டாயிற்று என்று வைத்துக்கொண்டாலும் முன்னூறு வருஷம் முன்னால் நடந்த “அநீதிக்கு” statue of limitation பொருந்தும் என்றே நினைக்கிறேன்//
    பல ஆயிரம் வருடங்கள் முன்னால் பிராமனர்கள் வந்தேரிகளாக வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று கூறி அதற்காக இன்று சட்டப்படி அவர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் எதுவும் கிடைக்கப்படக் கூடாது என்று ஒரு அரசு சட்டமியற்றுவது சரி என்றால் பல நூறு வருடங்கள் முன்பு ஒரு ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதியை சட்டப்படி அகற்றுவதும் ஞாயமானதாகவே படுகிறது. சட்டப்படி அல்லாமல் அகற்றி விட்டனர். இனி அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை!

  39. சம்பந்தப்பட்ட வாதியும் பிரதிவாதியும் தீர்ப்புக்குத் தயாராக இருக்கிறார்கள். தீர்ப்பு தரப்போகும் உயர்நீதிமன்றமும் தயாராகிவிட்டது. இதில் மூக்கை நுழைக்க சம்பந்தமில்லாத மூன்றாம் நபருக்கோ, ஏன் உச்ச நீதிமன்றத்திற்கோ உரிமை இல்லை என்றே நினைக்கிறேன்.

    முந்தா நாள் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுவை ஏற்க மறுத்து சார்பதிவாளருக்கு திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் இன்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வு, மனுவை எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்க ஒரு வாரம் தடை வழங்கியுள்ளது. This is unprecedented!

    கீழ் கோர்ட்டின் தீர்ப்புக்கு (வழங்கிய பிறகு) மேல் கோர்ட் தடை வழங்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கே தடை விதிப்பது, அதுவும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளும் நீதிமன்றமும் தயாராக இருக்கும்போது, அதற்குத் தடை விதித்தோ அல்லது அதைத் தள்ளி வைத்தோ செய்வது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    இந்த ஆசாமி ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் முயற்ச்சி செய்தபோது, விஷமச் செயல் என்ற கண்டனத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். பிறகு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது முந்தா நாள் ஏற்பு மறுக்கப்பட்டு இன்று “எப்படியோ” நம்பர் வாங்கி நுழைந்துவிட்டார்.

    பாலாஜி சொல்வதுபோல் இது காங்கிரஸ் அரசின் சதிச் செயல் தான். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் லட்சணம் தான் வழக்கறிஞர்கள் சாந்தி/பிரஷாந்த் பூஷன்களால் சந்தி சிரிக்கிறதே. இது பச்சை அயோக்கிக்யத்தனம்.

  40. ஆர் வி

    நான் சொல்வது உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதாகவே உங்களுக்குத் தோன்றும் ஆச்சரியமில்லை. இந்தியாவில் சட்டம் என்று எதுவும் கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டே வருகிறது. இந்தியாவில் இருப்பது மைனாரிட்டிகளின் ஓட்டைப் பொறுக்கும் ஒரே சட்டம் தான். ஷா பானு கேஸில் ராஜீவ்காந்தி தனக்கு பாராளும்னறத்தில் தன் அம்மா செத்ததின் காரணமாக கிடைத்த இழவு மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு இந்திய அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கினார். அவர் செய்தது சட்டபூர்வமாகச் சரியாக்த் தெரியலாம் உண்மையில் அது பாராளுமன்றத்தில் அன்று இருந்த மெஜாரிட்டிகளின் ரவுடித்தனம் மட்டுமே ஆகும். ஆக ராஜீவ் காந்தி தன் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு சட்டபூர்வமாக ஒரு அராஜகத்தை செய்தது சரியென்றால் இந்துக்கள் அன்று இருந்த மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு பாபர் கும்முட்டத்தை இடித்ததும் சரியே. ஷா பானு வழக்கிற்குப் பிறகுதான் பாபர் கும்முட்டம் விஷயத்தில் அரசிடமிருந்து சட்டபூர்வமாக நியாயம் கிடைக்காது என்று நான் உட்பட இந்துக்கள் நினைக்க ஆரம்பித்தனர். அதன் விளைவே அந்த உடைப்பு சட்டம் என்பது இல்லாமல் போனபின் அதை மதிக்க வேண்டும் என்று நினைப்பதும் முட்டாள்த்தனமே. இந்தியாவின் சுப்ரீம்கோர்ட்டில் இருந்த கடந்த 16 நீதிபதிகளில் 4 பேர்கள் மட்டுமே குற்றம் சொல்ல முடியாத நியாயமான நீதிபதிகள் என்று சாந்திபூஷன் சொல்லியிருக்கிறார். ஆக மூத்த வழக்கறிஞரின் குற்றசாட்டின் படி 12 கிரிமினல்கள் தான் நமக்கு இது வரை நீதி வழங்கி வந்திருக்கிறார்கள் அதை சட்டம் என்றும் அதை மதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம் நான் நினைக்கவில்லை. சட்டம் என்று எல்லோருக்கும் பொதுவாக அமுல் படுத்தப் படுகிறதோ அன்று அதை அனைவரும் மதிப்பார்கள்

    இட ஒதுக்கீட்டு முறையே கடந்த 2000 ஆண்டுகளாக நடந்து வந்த அநியாயத்திற்கு தீர்வு என்று சொல்லித்தான் சட்டமே இயற்றியிருக்கிறார்கள் இன்று நடைபெறும் அநியாயங்களுக்காக வன்கொடுமை போன்ற சட்டங்கள் மட்டுமே வந்துள்ளன இட ஒதுக்கீடு என்பது 2000 ஆண்டுக்கான தவறைத் திருத்தும் சட்டமே. நீங்கள் சொல்வது திரிப்பு தவறு. நன்றாகப் படித்து விட்டுச் சொல்லவும். கடந்த கால பிழைகளைத் திருத்தும் ஒரு முயற்சியே இட ஒதுக்கீடு. ஜப்பானும், ஜெர்மனும் கடந்த காலத் தவறுக்குத்தானே மன்னிப்புக் கேட்டன உங்கள் வாதப் படி ஏன் கேட்டிருக்க வேண்டும்? அது 300 வருடமாக இருந்தால் என்ன 30 வருடமாக இருந்தால் என்ன? தவறு அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருந்தாலும் கூட தெரிந்தபின் திருத்துவதே முறை.

    அடுத்து நாகசாமி அவர்களின் கருத்தை நீங்களே அவரிடம் நேரில் கேட்டு அறியலாம்., அவர் சொல்லாமல் சொல்லும் தீர்ப்பு ராமர் கோவில் திருப்பித் தரப் பட வேண்டும் என்பதே. அவர் இதை ஆனந்த விகடனில் சொல்லவில்லை ஆர் எஸ் எஸ் பத்திரிகையான விஜயபாரதத்தில் சொல்லியுள்ளார். புரியா விட்டால் அவரிடமே கேட்டு அறியவும்.

    காட்டுமிராண்டி பாபரினால் கட்டப் பட்ட அந்த கும்முட்டம் இடிக்கப் பட்டது சரியே. ஷா பானு சட்டத் திருத்தலுக்குப் பின்னால் சட்டம் என்பது இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதினால் அந்த அராஜக சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்று பலர் நினைத்தால் அதில் தவறு இருக்கவே முடியாது.

  41. ஆர் வி

    தமிழ் நாட்டு பிராமணர்கள் அந்நியர்கள் ஆரியர்கள் என்பதை பாபர் கும்முட்டத்தின் கீழே கோவில் இருந்தது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபித்தது போல முதலில் நிரூபியுங்கள் அதன் பின்னால் அவர்கள் வெளியேற வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பேசலாம். நான் சொல்வது அறிவியல் பூர்வமான ஒரு உண்மையின் அடிப்படையில் நீங்கள் சொல்வது நிரூபிக்க முடியாத ஒரு கேனத்தனமான வெறுப்பு வாதத்தின் அடிப்படையில். நான் ஆய்வுபூர்வமாக கண்டுபிடிக்கப் பட்ட ஒரு முடிவின் பேரில் பேசுகிறேன் நீங்கள் வெறுப்பின் மீது கட்டப் பட்ட ஒரு பொய்யின் மீது நின்று கொண்டு பேசுகிறீர்கள். தர்க்கரீதியாக தவறான ஒரு ஒப்பீடு கொஞ்சம் லாஜிக்க்லாக வேறு ஏதேனும் உதாரணம் யோசித்து வாருங்கள். நான் சொன்ன இட ஒதுக்கீட்டு உதாரணம் கடந்த கால தவறுகளை சரி செய்ய உருவாக்கப் பட்ட ஒரு சட்டமே அதே போல ஆராய்ச்சி செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்யப் பட்ட ஒரு உண்மையின் அடிப்படையில் பாபர் செய்த தவற்றை திருத்துமாறு கேட்க்கிறேன். இரண்டும் அடிப்படையில் ஒன்றே. அதில் ஒன்றை ஆதரிக்கும் நீங்கள் மற்றொன்றை எதிர்ப்பது வினோதமான முரணே

  42. விருட்சம், // சட்டம் என்று பார்த்தால் நம் ஜனநாயக நாட்டில் பெரும்பான்மைக்கு என்ன சட்டம் இருக்கிறது? // புரியவில்லை. // மசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது // எனக்கு “சொந்தமான சொத்தை” யார் வேண்டுமானாலும் உடைக்கலாம், சட்ட ரீதியாக எனக்கு பாதுகாப்பு கிடையாது என்ற உணர்வுகளையும் அலட்சியப்படுத்தவதர்கில்லை. // அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது // காலம் காலமாக என்றால் எப்போதிலிருந்து? பாபர் கோவிலை இடித்தார் என்றால் 1530 வாக்கில் என்பது தெளிவு. பலரும் காலம் காலமாக போராட்டம் என்று சொல்கிறார்கள், எப்போதிலிருந்து என்று சொல்வதில்லை… // இதை சொல்லுவதற்கு முன் அதற்கும் ஆதாரம் தரணும்… // எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. வந்தேறி என்று சொல்லப்படுவதற்கா? இல்லை விஸ்வாமித்ரா இப்படி சொன்னால் கோபப்படுவார் என்பதற்கா? வந்தேறி என்று சொல்வதை படிக்க வேண்டுமென்றால் ஏதாவது தமிழ் ஓவியா மாதிரி தளத்துக்கு போங்கள். விஸ்வாமித்ரா கோபப்படுவார் என்பதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், அவரது மறுமொழி வரும் வரை காத்திருங்கள். 🙂

    பாபு, // மிகவும் சரிதமிழ் நாட்டை விட்டு மட்டும் அல்ல , இந்தியாவை விட்டே வெளியேறவேண்டும்… // நான் கேட்டது ஒரு rhetorical question 🙂 ஆனால் உங்கள் பதிலும் அதே பாணியில்தான் என்பதை புரிந்து கொள்ள சிரமமாம்க இருந்தது.

    ராம், // பல ஆயிரம் வருடங்கள் முன்னால் பிராமனர்கள் வந்தேரிகளாக வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று கூறி அதற்காக இன்று சட்டப்படி அவர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் எதுவும் கிடைக்கப்படக் கூடாது என்று ஒரு அரசு சட்டமியற்றுவது சரி என்றால் பல நூறு வருடங்கள் முன்பு ஒரு ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதியை சட்டப்படி அகற்றுவதும் ஞாயமானதாகவே படுகிறது. சட்டப்படி அல்லாமல் அகற்றி விட்டனர். இனி அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை! // பிராமணர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றவருக்கு அனுகூலம் இருக்க வேண்டும் என்றுதான் சட்டம் இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது இன்றைய சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு. (அதில் இருக்கும் குறைகளைப் பற்றி பேச இது சரியான இடமில்லை) இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியா பூராவும் இட ஒதுக்கீடு இருக்கிறது, தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் வந்தேறி என்ற குரல் கேட்பதில்லை என்று நினைவுபடுத்துகிறேன்.

    அஞ்சனாசுதன், // கீழ் கோர்ட்டின் தீர்ப்புக்கு (வழங்கிய பிறகு) மேல் கோர்ட் தடை வழங்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கே தடை விதிப்பது, அதுவும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளும் நீதிமன்றமும் தயாராக இருக்கும்போது, அதற்குத் தடை விதித்தோ அல்லது அதைத் தள்ளி வைத்தோ செய்வது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. // சட்டம் தெரியாத எனக்கு இது வெறும் கேனத்தனமாகத்தான் தோன்றுகிறது.

    விஸ்வாமித்ரா, // தமிழ் நாட்டு பிராமணர்கள் அந்நியர்கள் ஆரியர்கள் என்பதை பாபர் கும்முட்டத்தின் கீழே கோவில் இருந்தது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபித்தது போல முதலில் நிரூபியுங்கள் அதன் பின்னால் அவர்கள் வெளியேற வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பேசலாம் // மன்னிக்க வேண்டும், வந்தேரினாலும், போயேறினாலும் அது ஒரு பொருட்டு அல்ல, தமிழ் நாட்டிலிருந்து பிராமணர்களை மட்டுமல்ல, நாயக்கர்கள், ரெட்டிகள், போயர்கள், ஒட்டர்கள், மார்வாடிகள், ஆங்கிலோ இந்தியர்கள், டீக்கடை நாயர்கள் யாரையும் வெளியேறச் சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது என்று என்னைப் போலவே நீங்களும் கருதுபவர் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். பிராமணர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் வெளியேற வேண்டியவர்களே என்று நீங்கள் நினைப்பவர் என்று புரிந்துகொள்ளவில்லை.

    சரி தமிழகத்தை விடுங்கள்; அமெரிக்காவில் செவ்விந்தியர்களைத் தவிர அனைவரும் – இங்கே குடியேறி உள்ள தமிழர்கள் உட்பட – வந்தேறிகள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் வாழும் தமிழர்கள் ஓலோனி செவ்விந்தியர்களிடம் சட்ட, நியாய, தர்மப்படி வீட்டு சாவியை கொடுத்துவிட்டு விமானம் ஏறிவிட வேண்டுமா?

  43. இங்கு சட்டத்தை பற்றி பேசும் நல்லவர்கள் இதையெல்லாம் சட்டப்படி முயன்று பார்க்கலாம்
    காஷ்மீரில் ஒரு செண்டு நிலம் வாங்கலாம்
    நமது அரசியல் நிர்ணய சட்டம் பரிந்துரை செய்த- ஆனால் இன்றளவும் அரசு அமல் படுத்தாத- பொது சிவில் சட்டம் இயற்ற பாடு படலாம்
    அதே அரசியல் நிர்ணய சட்டம் பரிந்துரை செய்த- ஆனால் அமல் படுத்தபடாத- பசுவதை தடை சட்டம் இயற்ற முயற்சிக்கலாம்
    காஷ்மீருக்கு ஒரு சில வருடங்களே தனி அந்தஸ்து என்று அரசியல் நிர்ணய சட்டம் கூறியது-ஆனால் முஸ்லிம்களை தாஜா செய்ய காங்கிரஸ் அதை அப்படியே வைத்துள்ளது. இதை விளக்க சட்டத்தின் துணை நாடலாம்
    பாகிஸ்தான், சவுதி அரேபியா,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் நாடுகளெல்லாம் மத சார்பற்ற நாடுகளாக மாற வேண்டும் என்று சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

  44. ஆர் வி

    நீங்கள் அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லாத ஒன்றை உதாரணமாகக் காட்டுகிறீர்கள் என்பதற்காக ஆதாரம் காட்டுங்கள் அதன் பின்னால் அதைப் பற்றி பேசலாம் என்று மட்டும்தான் சொன்னேன் என்ன பேசுவேன் என்பதை நான் சொல்லவேயில்லை நீங்களாகவே தப்புக் கணக்குப் போட்டால் நான் என்ன செய்வது.

    நான் சொல்லுவது கோவில் இருந்தது என்பதற்கு திட்டவட்டமாக இருக்கும் ஆதாரம். அதே போல பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் என்பதற்கு ஏதேனும் அதே போன்ற ஆதாரம் இருந்தால் அதை உதாரணமாகக் காட்டுங்கள் இல்லாவிட்டால் வேறு உதாரணத்திற்குப் போங்கள்

    செவ்விந்தியர்களுக்கு ஐரோப்பியர்கள் இழைத்த பாவத்தை குறைந்த பட்சம் இன்று ஒப்புக் கொண்டு மன்னிப்பாவது கேட்க்கிறார்கள். ராமர் கோவிலை மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களை இடித்து அதன் மேல் மசூதி கட்டியதற்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வந்து தங்கள் முன்னோர் செய்ததற்கு மன்னிப்பு கேட்டதுண்டா? அப்படிக் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காதே. ராமர் கோவிலை மட்டும் அல்ல வோர்ல்ட் ட்ரேட் செண்ட்டரையும் இடித்து விட்டு இடித்த இடத்தில் தான் மசூதி கட்டுவோம் என்று அன்று பாபர் முதல் இன்று அமெரிக்க மூஸ்லீம்கள் வரை மூர்க்கமான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார்கள்.

    தவறு நடந்ததற்கு சிறு மன்னிப்புக் கூடக் கேட்க்க மறுக்கும் ஒரு மதத்தினருக்காக நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள் அவர்களிடம் சட்டப் படி நடக்க வேண்டும் என்கிறீர்கள். சட்டம் பெரும்பான்மை இந்துக்களுக்கு மறுக்கப் படும் பொழுது அந்த சட்டம் மதிக்கப் பட வேண்டியதில்லை சட்டத்தை விட தனி மனித பாதுகாப்பும் இந்துக்களின் மானமும் உயிரும் உடமையும் முக்கியம் என்று நினைத்தால் அதில் தவறு இல்லை. அரசாங்கம் வந்து காக்காது இந்துக்களின் உயிரை, அமெரிக்கா வந்து காக்காது அவர்கள் மட்டுமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது தெரியாமல் போனதினால்தான் கொத்துக் கொத்தாக குண்டு வெடிப்புக்கு இன்று செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் கூட ஆயிரக்கணக்கான கோவில்களை அவர்கள் திரும்பிக் கேட்க்கவில்லை. ஒரே ஒரு கோவிலை அதையும் கூட அங்கு கோவில் இருந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து விட்ட பின்னாலேயே கேட்க்கிறார்கள் அதைக் கூடத் தர மனமில்லாத ஒரு மதத்தினரிடம் இனியும் இந்துக்கள் நாகரீகத்துடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது அபப்டி நடந்து கொண்டால் அவர்களது பேரழிவை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள். ராமர் கோவில் அங்கு இல்லவே இல்லை என்று உங்களைப் போன்றவர்கள் சாதித்தீர்கள். இப்பொழுது ஆதாரம் கொடுத்தவுடன் எங்கே அந்த ஆதாரம் வெளியில் தெரிந்து விடுமோ என்று தீர்ப்பைத் தள்ளிப் போடுகிறார்கள்.

    மீண்டும் சொல்கிறேன் இந்த ராமர் கோவில் இருந்த ஆதாரம் அறிவியல் பூர்வமாகக் கொடுத்த பின்னும் இந்த ஒரு கோவிலை மட்டுமாவது இந்துக்களின் உணர்வை மதித்து முஸ்லீம்களும் இந்திய அரசும் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் இந்தியா முழுவதும் இப்படி காட்டுமிராண்டிகளால் இடித்துக் கட்டப் பட்ட அத்தனை கோவில்களையும் மீட்க சட்டத்தை மீறி இந்துக்கள் போராட வேண்டிய நிலை வரும்.

  45. { அஞ்சனாசுதன், // கீழ் கோர்ட்டின் தீர்ப்புக்கு (வழங்கிய பிறகு) மேல் கோர்ட் தடை வழங்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கே தடை விதிப்பது, அதுவும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளும் நீதிமன்றமும் தயாராக இருக்கும்போது, அதற்குத் தடை விதித்தோ அல்லது அதைத் தள்ளி வைத்தோ செய்வது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. // சட்டம் தெரியாத எனக்கு இது வெறும் கேனத்தனமாகத்தான் தோன்றுகிறது.}

    உலக்கைக் கொழுந்துதான் போங்கள்!!!

  46. //இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை// நீங்கள் இந்த உலகத்தில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை!

  47. RV,
    நான் உருவ வழிபாடு செய்வதில்லை. அதனால் நான் எல்லா ஊருக்கும் படை எடுத்து சென்று அங்கு உள்ள சிலைகளையும், அவை இருக்கும் கோயில்களையும் களைந்து விட புறப்பட்டால் அதை நீங்கள் தருமம் என்றோ, ஞாயம் என்றோ ஒத்து கொள்கிறீர்கள. இது தான் பாபர் செய்தது. என்னை போன்ற ஒரு ஹிந்து கடவுளின் மூர்த்தி இல்லாத கோயிலுக்குள் வழிபடுவதை விரும்புவதில்லை. இதை நிறைய பேர் மசூதிகளில் செய்கிறார்கள். மூர்த்தி இல்லாத கோயில்களே நான் இடித்து விட்டு அதன் மேல் ஹிந்து கோயில்களை கட்டுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா.
    உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நீ செய்யாதே. நீ ஒரு வழியில் வாழ்ந்தால் இன்னொருத்தன் இன்னொரு வழியில் வாழ்கிறான். அது உன்னை எந்த வழியிலாக பாதித்தால் அவனிடம் பொய் பேசி சமாதான படுத்து. இந்தியாவில் ஆர்ய சமாஜிகள் கூட உருவ வழிபாட்டை ஏற்காதவர்கள் தான். ஓர் இறை கொள்கை உடையவர்கள் தான். அவர்கள் என்ன கோயில் கோயிலாக சென்று உடைக்கின்றனர். பாபர் என்ற வெளி நாட்டவர், பாரத முறைகளை ஏளன படுத்தி ஒரு கோயிலை இடித்ததற்கு இன்று ஹிந்துக்கள் தீர்வு காண வேண்டும்.

  48. RV,
    பாபர் கட்டியது மசூதி தான் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா. அதற்கு முஸ்லிம்களிடம் ஆதாரம் உள்ளதா. தாஜ் மஹால் ஒரு மசூதியா இல்லையா. நான் ஆதாரத்துடன் சொல்கிறேன், பாப்ரி கட்டிடம் ஒரு மசூதியே இல்லை என்று. பாப்ரி கட்டிடம் ஒரு காதலன் கட்டியது. ஆதாரம் இங்கே பாருங்கள்.
    Babri Masjid demolition – Symbol of Hindu-Muslim unity
    https://agniveer.com/1817/babri-masjid/

  49. விஸ்வாமித்ரா,

    // இந்தியாவில் சட்டம் என்று எதுவும் கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டே வருகிறது. //
    சட்டம் வளைக்கப்படுகிறது என்று சொல்ல பல காரணங்கள் இருந்தால் சட்டம் வேலை செய்கிறது என்று சொல்ல இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் சுப்ரமணிய சாமியை கேட்கலாம். உங்களுக்கு இன்னொருவருக்கும் ஒரு தகராறு வந்தால் அதை எப்படித்தான் தீர்ப்பது? உங்களுக்கு பிடித்த மாதிரி தீர்ப்பு வந்தால் சட்டம் வேண்டும், இல்லாவிட்டால் வேண்டாம் என்பது வேலைக்காகாது.

    // இந்துக்கள் அன்று இருந்த மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு பாபர் கும்முட்டத்தை இடித்ததும் சரியே… // என்னங்க இது? அப்புறம் அழகிரிக்கு அன்று இருந்த மெஜாரிட்டியை வைத்து தினகரன் ஆ ஃ பீசை எரித்ததும் சரிதான் என்று ஒருவன் சொல்லுவான்; தர்மபுரியில் அதிமுகவுக்கு இருந்த மெஜாரிட்டியை வைத்து மூன்று பெண்களை கொன்றதும் சரிதான் என்று ஒருவன் சொல்வான். ஒரு ஸ்டேட்மென்ட் விடுவதற்கு முன் கொஞ்சமாவது யோசியுங்கள். உணர்ச்சிபூர்வமாக வாதாட முயற்சிக்காமல் லாஜிக்கை பாருங்கள்.

    // இட ஒதுக்கீடு என்பது 2000 ஆண்டுக்கான தவறைத் திருத்தும் சட்டமே. // 2000 ஆண்டுக்கான தவறை திருத்தும் சட்டம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது குற்றம் என்று சொல்லும் சட்டம். ஏனெறால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதுதான் 2000 ஆண்டு தவறு. இட ஒதுக்கீடு இன்றைய ஏற்றத்தாழ்வை குறைக்க ஒரு முயற்சியே.

    // அடுத்து நாகசாமி அவர்களின் கருத்தை நீங்களே அவரிடம் நேரில் கேட்டு அறியலாம்., அவர் சொல்லாமல் சொல்லும் தீர்ப்பு … // சொல்லாமல் சொல்வது, உட்கருத்து என்றெல்லாம் இழுக்காதீர்கள். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று அவர்தான் சொல்ல வேண்டும், நீங்கள் சொல்லக்கூடாது. அப்படி ஆரம்பித்தால் இதற்கெல்லாம் ஒரு முடிவே இருக்காது. வெளியே சொல்லப்படுவதைப் பற்றி பேசுவோம்.

    // முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. // என்று எழுதினீர்கள். பிறகு தமிழக பிராமணர்கள் கைபர் கனவாய் வழியாக வந்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் வெளியேற வேண்டியதில்லை என்று பொருள்படும்படி எழுதுகிறீர்கள். முதலில் இருப்பது திரும்ப வருவது முறை என்றால் “கைபர் கனவாய் வந்தேறிகள்” ஏன் வெளியேறவேண்டாம்? கைபர் கனவாய் வந்தேறிகள் வெளியேறவேண்டாம் என்றால் முதலில் இருப்பது திரும்பி வரும் கோட்பாடு என்ன ஆயிற்று? (இந்த தளத்தில் புரிந்து கொள்ளாமல் குதிப்பவர்கள் அநேகம் – அவர்களுக்காக இந்த விளக்கம் தர வேண்டி இருக்கிறது. பிராமணர்கள் வந்தேறிகளா இல்லையா என்பது ஒரு பொருட்டே இல்லை. தமிழக மார்வாடிகளும் தமிழர்களே என்றே நான் கருதுகிறேன். வந்தேறி hypothesis நிரூபிக்கப்பட்டால் இந்த கோட்பாடு அங்கே செயல்படுத்தப்பட வேண்டும் என்று விஸ்வாமித்ரா சொல்வாரா இல்லையா என்பதைப் பற்றி.)

    அஞ்சனாசுதன், // உலக்கைக் கொழுந்துதான் போங்கள்!!! // மன்னிக்கவும், என் கேனத்தனம் கமென்ட் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். தீர்ப்பை வழங்கக்கூடாது என்று உத்தரவு எனக்கு கேனத்தனமாக படுகிறது. நான் எழுதிய விதத்தை வைத்து நீங்கள் எழுதிய கருத்து கேனத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம். ambiguity-க்கு மன்னிக்கவும்.

    // பாப்ரி கட்டிடம் ஒரு மசூதியே இல்லை // என்ன இழவாக இருந்தால் என்ன? அடுத்தவர் சட்ட ரீதியாக கையகப்படுத்தி இருக்கும் கட்டடத்தை – அது ஒரு கக்கூசாக இருந்தாலும் – இடிக்கக் கூடாது என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறேன்?

    //இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை// நீங்கள் இந்த உலகத்தில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை! // ராம், மீண்டும் சொன்னதை சொல்ல வேண்டி இருக்கிறது. வந்தேறி என்ற குரல் தமிழகத்தில் மட்டுமே கேட்கும் ஒன்று. இட ஒதுக்கீடு இந்தியா பூராவும் இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு வந்தேறி கோட்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? சொல்வதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.

    // அதனால் நான் எல்லா ஊருக்கும் படை எடுத்து சென்று அங்கு உள்ள சிலைகளையும், அவை இருக்கும் கோயில்களையும் களைந்து விட புறப்பட்டால் அதை நீங்கள் தருமம் என்றோ, ஞாயம் என்றோ ஒத்து கொள்கிறீர்கள. // இது போன்ற வாதங்கள்தான் இங்கே பேசுவது வெட்டி வேலை என்ற அலுப்பை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்களால் பயன்படுத்தப்படாத பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று இத்தனை தீவிரமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கோவிலை இடிக்கப் புறப்பட்டால் அது நியாயம், தர்மம் என்று சொல்கிறேன் என்று புரிந்து கொள்கிறீர்கள். மன்னிக்க வேண்டும் ராம், கொஞ்சமாவது மூளையை பயன்படுத்துங்கள்.

  50. இந்த மாதிரி விவாதங்களை தவிர்க்கலாம் என்பதே என் கருத்து. எல்லோரும் ஒத்துப் போகும் கருத்து என்று எல்லாவற்றிலும் இருக்காது. பொதுவாக யாரும் இப்போது இது சம்பந்தமாக எந்த ஒரு வன்முறையையும் ஆதரிக்கவில்லை தானே. அதையே பொதுக் கருத்தாக வலியுறுத்துவது நல்லது.
    வளர்ப்புத் தாயின் வாக்குக்காக ராஜ்யத்தையும், மக்களுக்காக கர்ப்பமான மனைவியையே அதுவும் இவ்வவளவு போராட்டத்தின் பின் மீட்டு வந்த மனைவியையும் வாரிசையும் இழக்கத் தயாரா இருந்த ராமன் அவன் பிறந்த இடத்துக்காக மக்களை இழக்க விரும்ப மாட்டான்.

  51. இந்துக்கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டியது தவறா இல்லையா?
    பாபர் மசூதியை இடித்து கோவில் கட்டியது தவறா இல்லையா?
    இப்போது கோவிலை இடித்து மசூதி கட்டுவது தவறா இல்லையா?

  52. ஆர் வி

    சட்டத்தை எது எதுக்கு மதிக்க வேண்டும் எது எதுக்கு மதிக்கக் கூடாது என்பதை அந்தந்த சம்பவம் தீர்மானிக்கிறது. முஸ்லீம்கள் சட்டத்தை மதிக்காவிட்டால் அதை அரசாங்கம் சரி என்று அவர்களுக்கு ஏற்ற மாதிரி சட்டத்தை மாற்றி அமைக்கிறது அதையே இந்துக்களுக்கும் ராமர் கோவில் விஷயத்தில் செய்யச் சொல்லிக் கேட்க்கிறோம். சட்டம் என்பது இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம் இல்லாவிட்டால் அந்த சட்டத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் அப்படியாகப் பட்ட விஷயத்தில் சட்டம் மதிக்கப் படாமல் போனாலும் அது சரிதான் என்கிறேன் நான். இல்லை முஸ்லீம்கள் சட்டத்தை மதிக்காவிட்டால் சரி ஆனால் இந்துக்கள் மட்டும் மதிக்கா விட்டால் தப்பு என்கிறீர்கள். அது உங்கள் ஊர் நியாயம் போல் இருக்கிறது

    இட ஒதுக்கீடு 2000 காலத் தவறை சரி செய்ய கொண்டு வரப்பட்டது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இன்னும் சந்தேகம் இருப்பின் அம்பேத்கார் சொன்னதைப் போய் படிக்கவும். அது போலவே இந்தத் தவறையும் சரி செய்ய ஒரு சட்டம் கேட்க்கிறோம் மறுத்தால் சட்டம் கையில் எடுக்கப் படும் அப்படி எடுக்கப் பட்டால் ஷா பானு வழக்கை முன் வைத்து சரியான ஒரு செயலாகவே இருக்கும். ஷா பானுவுக்கு ஒரு சட்டம் ராமருக்கு இன்னொரு சட்டம் என்று நீங்கள் சொன்னால் நான் சொல்கிறேன் அந்த சட்டம் நாசமாகப் போகக் கடவது என்று

    நாகசாமி போன்றவர்கள் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதாகத் தெரிகிறது. இலக்கியத்தில் சினிமாவில் புரிந்து கொள்ளும் உங்களால் இந்தக் கட்டுரையில் உள்ள பூடகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது மறுக்கிறீர்கள் என்றால் நான் என்ன செய்வது அவரிடம் நீங்கள் நேராகவே போய் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள் எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. இதுக்கு எல்லாம் கோனார் நோட்ஸ் போட முடியாது நேரடியாகப் போய் கேட்டுக் கொள்ளுங்கள்

    உங்களை மாதிரியான ஆசாமிகளுக்காக இந்த தளத்தில் மிக அருமையாக விளக்கியிருக்கிறார் முடிந்தால் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்

    https://www.sandeepweb.com/2010/09/24/on-the-eve-of-the-verdict/#more-1544

    The Rediscovery of India

    On the Eve of the Verdict…

    Friday, 24. September 2010 – 3:50 AM

    So the Ramajanmabhoomi-Babri Masjid verdict has been postponed and it’s time yet again for doing what we’ve been known to do best: push problems as much as you can until they explode as they must. Meanwhile, the attitudes in the secular camp that prevailed in the ’90s remain unchanged. In some cases, they’ve gotten more strident. In the 90s the field was clearly marked: the secularists who supported the case of Muslims and the Hindus. Today, we have another voice that seems to have a considerable spread in the Web world at least. This is the liberal voice that comes in various garbs: liberal Hindu (I’m a Hindu but I’m a liberal), the humanist Hindu, the atheist Hindu, and so on.

    Here’s one variant. Great Bong is a blog I immensely enjoy for its no-holds-barred-funny film reviews and some on-the-spot observations and commentary. But this one comes as a dampener.

    His chief “contention is one cannot roll back history without incurring heavy costs in the present.” And I agree broadly but he posits this in the context of the Ayodhya issue but how he goes about to arrive at the conclusion presents several problems. The first of which occurs in this line:

    So Babur knocked down a Hindu temple and built a mosque over it. It happened a long time ago. Get over it.

    This isn’t a new or terribly original line and I wouldn’t have bothered responding had it not been for the flippant manner the rest of the post continues.

    The Ayodhya issue is not a lover’s quarrel or separation to “get over it.” It concerns the history, civilization, and future of an entire subcontinent and a religion with a tradition that continues unbroken for 5000 years. If not resolved properly, the Ayodhya issue impacts the survival of that continuity. Indeed, the reason for the mess this has become is one of the indicators of such a potentially fatal impact.

    Which is why it’s important not to get over it. To get over something, you must understand it inside out. In this case, it means developing a keen, insightful sense of history. And that can’t be developed without studying history and how it has and/or continues to shape the present. I’m all for getting over it and moving on but not at the cost of ignoring the past. And I see this frivolous attitude about history in a large number of otherwise well-read and educated Indians. If we lost the sense of history, we wouldn’t know why Pakistan has named its missiles Ghauri and Ghaznavi. This is one of the answers to Great Bong who elsewhere asks us to

  53. …forget what happened in the 1520s because no one is alive now who feels any of the pain.

    The symbolism behind these missile names is an open expression of intent to revisit upon India what those historical figures did. And by the same logic, we must also advocate closing down the Holocaust museum because hardly anyone is alive today who has undergone and/or witnessed that pain firsthand. Great Bong’s prescription hovers close to asking us to ignore history but not in so many words. Ignoring something won’t go make it away. As Emerson said, it’s better to pay your debt now than later because later would be too costly.

    His other argument that it’s futile to try to right the wrongs of history also stands on weak ground. That makes us ask him why the US helped Japan’s rebuilding. This is not about righting historical wrongs but reconciliation as we shall see. And it’s all the more reason to sharpen the historical sense. Besides, Great Bong doesn’t care to tell us how the Ayodhya issue culminated in the majid destruction. The destruction happened because of wilful and fraudulent telling of history. The anti-Mandir camp spent years trying to “prove” that the Ram Mandir didn’t exist and that Babar was a peace-loving ruler. When they were proved wrong, they changed track and resorted to shrill personal attack and petty politics, which is what ultimately hastened religious polarisation. The secular historians who infiltrated the media and academia over the decades vocally asserted that the “goal” of history should be to ensure communal harmony but what they achieved was its exact opposite. Which meant suppressing unpleasant historical truths. Secular history writing dates back to when Nehru became the unquestioned champion. That is also history and that history is in a very large part responsible for the demolition of the Masjid. etc. The goal of history as in any human endeavour should be to tell the truth however unpalatable it is. To quote Dr. SL Bhyrappa, a robust and healthy society can’t be built on a foundation of untruth.

    No sir, you cannot move on without knowing the complete truth. Babar was an alien invader who destroyed non-Islamic places of worship because that’s what his religion ordained him to do in order to obtain religious merit. And it is this religious commandment that continues to motivate the destruction of temples going on in today’s India, news that the media blocks. It’s the same commandment that motivated the Taliban to blow up the Bamiyan Buddha idols despite the fact that there’s not a single Buddhist in Afghanistan. It’s also the same commandment that motivates Pakistan to allot well-chosen names to their missiles, and send their gun-toting boys across the border from time to time to amuse themselves. It’s still the same commandment that motivates incidents like chopping off the poor Kerala lecturer’s hand. And this commandment was laid down sometime in the 7th Century A.D. And how do we know this? Because history informs us. So you see when something that was laid down in the 7th Century has ramifications even today, it’s kind of hard to simply move on. The danger of future Babars arising in the world is clear and present.

    But let’s see how Great Bong frames history.

    Lest people misunderstand, I am not saying we forget or not care for giving justice to those who died as a result of the riots that happened post-Babri mosque demolition. Those things aren’t history. We saw it. Families who lost a loved one are still alive. They remember and they deserve justice. But whether a Ram temple stood there at the site of the Babri mosque when Babur came a-visiting—-that’s what I do not care about.

    So there. The here and now (give or take ten or twenty years) is what is important. Unfortunately, that’s a very skewed way of defining history. History is history whether it is five decades, or five centuries old. Even yesterday is history. I say this with utmost politeness, but it really doesn’t matter what you care. There is such a thing as shared cultural consciousness. Babar’s temple demolition is the open wound upon one of the most sacred symbols of this cultural consciousness. You may not care about it, but please refrain from speaking for the millions of those who do.

    It is surprising that Great Bong omits mention of the rebuilt Somanath temple. Had it not been built back then, it’d have most certainly been Ayodhya Part 2 because here’s an important part in the story of Somanath reconstruction.

    The ruins [of the mosque] were pulled down in October 1950 and the mosque was moved to a different location. In May 1951, Rajendra Prasad, the first President of the Republic of India, invited by K M Munshi, performed the installation ceremony for the temple…added “The Somnath temple signifies that the power of reconstruction is always greater than the power of destruction”

    In 1950, a mosque was pulled down–yes, demolished–and a replacement mosque was built on a different site. And it evoked not a whimper of protest or untoward incident. And in 1992, the Babri Masjid was forcibly demolished and large scale communal violence broke out in its wake and a similar threat looms what with the impending judgement. So what changed between 1951 and 1992? I leave the answer to your intelligence. Maybe Great Bong would like to answer why Patel et al were successful in demolishing that mosque, rebuilding the Somanath temple, and getting a replacement mosque while he, Great Bong, needs to write such a poorly-thought out post.

    Great Bong further confounds the post by drawing irrelevant parallels.

    And what about the wrongs taking place now, as we speak? Have we reached a stage that our present is so perfect that we need to look four hundred years back to correct something bad done then? Why worry whether Babur looted us in the middle ages when there are a gang of Commonwealth Master Gogos in Delhi, under the guise of organizing an international sporting event, pillaging the coffers of our country at this moment?

    It takes quite a leap of logic to spot a symmetry with Babar and the CWG pillagers. People’s outrage over the CWG banditry has to do with the violation of ethics, decency, etc while Ayodhya is an emotive issue for a very different reason. And no, Babar didn’t merely loot. Like I said earlier, he deliberately destroyed the Ram Mandir because his faith commanded him to do that as a means to earn religious merit. Does Great Bong seriously contend that Hindus want to rebuild the Ram Mandir for the same reason that they want the CWG robbers to be brought to book, the money recovered, etc? Is he saying that Hindus want to recover all the money Babar had looted back then?

    And further,

    I do not buy this need to address generational hurt argument because it is most frequently used to perpetrate historical wrongs

  54. Agree. But then doesn’t it ever occur to Great Bong that you know, maybe there’s something called “healing the wounds?” A little give and take will build the bridges and all that jazz. I’m consistently amazed that folks who always argue like Great Bong never fail to invoke only the negative side. The “generational hurt argument” helps actually because it enables us to trace the root of the problem and apply the balm that heals the hurt and try and apply our minds to ensure that it doesn’t open up avenues for abuse. Why insist on only looking at the potential for abuse?

    And then he brings in the Constitution angle.

    It’s the Constitution stupid. What is being deliberated is not the divinity of Ram or whether he existed, but whether a temple stood there or not.

    Yes. And the temple did exist. Now what? He doesn’t answer that but inexplicably jumps to:

    And in any case, the law in a secular state is obliged to care two hoots for your sensibilities. There are laws. And you have to obey them.

    As for the Constitution, it might interest him to know that our Constitution is ill-advised, and not well thought-out. It’s pretty much a cut-and-paste job and it’s an alien Constitution not suited to Indian realities. If the Constitution took into account the Indian people’s aspirations, Ayodhya wouldn’t have been an issue at all. And that’s where we need to start. Did Great Bong ever stop to think about why despite so many safeguards, etc in the Constitution, every single rule, precept, prescription, and article is flouted with impunity and nobody has been punished for such flagrant violation in these 60+ years? Or the fact that every Constitutional body is today an enabler of corruption?

    And that “secular state” remark is laughable to say the least. Is that wishful thinking on Great Bong’s part or does he actually mean the Indian state is secular? A truly secular state would’ve prevented such communal flashpoints, not created conditions that foment them.

    There are laws. And you have to obey them. If your sentiments are hurt and the legal framework does not give you remedy for your “hurt”, go suck your thumb.”

    This is an excellent argument if only our laws didn’t suck so badly. In other words, does he advocate obeying unjust laws? I’m reminded of the quote that says something like “in a country of crooks the only place for an honest man is the prison.” I’ll use an extreme example because I think it makes the case more effectively: does Great Bong advocate that we obey “laws” like say the one Indira Gandhi made, which put her above the law? Here again, I find the penchant for looking at only the negative side rather amusing and dangerous. Instead of making laws that prohibit the possibility of hurt sentiments, you want people to obey laws that have the potential to actually hurt sentiments. Most laws that lead to communal conflicts–not to mention the Indian state that encourages vote bank creation–are designed to lead to conflict. Good examples include state interference in Hindu temples while granting almost limitless freedom to minority institutions. There you have, the seed for communal conflict right within the law.

    And then to be fair, he does diss the Constitution but for a different reason.

    In this respect, our constitution is also to blame since it says free speech is fine as long as it does not hurt people’s sensibilities. But as I have seen before in this blogspace many times, “free speech” that actually needs to be protected by law is by definition hurtful of someone’s sentiments. This is why India really has no concept of protected speech, unlike say what US citizens have under the First Amendment. Which is why even in any case that can be determined on the basis of the law, “sentiments” will be considered, even though what may come out might well be a travesty of justice.

    This bolsters my case for properly defining, redefining and revamping some of the most fundamental and vital principles that are currently governing this land.

    I’ve seen Great Bong’s definition of free speech (underlined) in countless blogs, articles, etc. But the question here is not about free speech. The question, rather questions are: why didn’t the concept of free speech (as we know it today) exist in India until we adopted it from the West? And why does the West prize free speech so much? For that we need to go back to history again–the same history that Great Bong wants people to move on from. The West fought for centuries, at great cost, against the Church’s oppression of free expression and when they completely unshackled themselves, they realized that what they had earned had to be eternally, fiercely defended. In India however, since the Vedic times, we freely poked fun of our Gods and Goddesses and we continue to do so. This tradition of openness, tolerance and accepting differences with a smile continued to thrive even during an age when the Christian West was busy burning innocent people at the stake for blasphemy, a “crime” that’s as momentous as stepping on rat shit. It’s no coincidence that the West made rapid scientific and economic advancements only after its fight with the Church’s oppression gained momentum and mass. Similarly, during the same period, it’s also no coincidence that India continued to enjoy its status as the world’s most prosperous and sought-after trading destinations. Only a free country–in every sense of the word–makes this possible.

    A cursory reading of Indian history would’ve made all this very clear to Great Bong. But he chooses to lament about the lack of a US-style First Amendment that protects free speech. This state of affairs is pretty tragic because it shows a paucity of Indians who can’t draw solutions from their own past but look to borrow stuff from elsewhere. More appropriately, they can’t draw solutions from our own past because they exhibit no interest in doing so. I have nothing against the First Amendent but then it’s probably good for America because it solves the problems unique to the people of America. I’m all for adopting it here but not before first delving into how we had solved similar problems on our own. There’s a reason Constitutions of two democracies are not alike. It’s ill-advised to prescribe the same medicine for all ailments.

    Very briefly, India had solved the problem of guaranteeing free speech by raising it to a philosophical and spiritual level: when the same universal spirit lives in all of us–including animals and birds and insects–fighting over who or what is better is an insult to that spirit. This was ingrained in our cultural and/or national consciousness for millenia and is why we never needed Constitutional guarantees. You might argue that times have changed today but that makes the need for revamping he Constitution more urgent. As it stands today, the Indian Constitution does not represent the will of the Indian people.

    As for Great Bong’s closing prescription that a mall should be built on the “disputed” site, it is entirely in keeping with the same flippancy that I mentioned earlier.

    Here’s why I advocate that the Ram Mandir be built on the site: temples by themselves do not do anything. But they go a very long way in cultivating the spirit and fostering character. It was the historical temple culture in India that enabled it to withstand and repel sustained attacks from alien invaders without and barbarians within. Temples were centers where fine arts were further refined, where education thrived, and where the spirit of social harmony was nurtured. Oh yes, there was the dreaded caste system but which system could prevent a Kanaka and a host of such saints from entering a temple?

    The Ram Mandir is not just a place for Hindus to go and worship their God. There are cultural symbols and heritages and monuments that we need to preserve even if they don’t yield any material benefit. What’s the bet that if a barbarian destroyed Mount Vernon or Westminster Abbey, the US and British folks wouldn’t spare all their energies to rebuild it? And will Great Bong agree to replace say–if it was destroyed–the Jallianwallah Bagh with a shopping mall? I do pray at the Jallianwallah Bagh just as scores of other Indians do. And the Ram Mandir is as much a symbol as is the Jallianwallah Bagh. But then a mindset that dubs every such symbol along the lines of “religious nonsense” and “waste of resources” or whatever, won’t really understand this. Which is why, with utmost respect, I say that Great Bong’s prescription to build a mall is deplorable to say the least.

    As for Capitalism and malls as the Gods of today’s India, Great Bong needs to get on the streets and villages and ask the vast Indian masses what they really regard as God: the mall or Ram. Urban, mall-going India is not India. And even if malls were India’s Gods, we’ve seen how they’ve created a vast crowd of selfish, deracinated and barely-articulate zombies whose definition of worship is hopping into the next pair of Levis jeans. The Capitalist God may not discriminate against anybody but he fuels greater and greater hunger for material consumption, which is not advisable for the mental, spiritual and ethical health of the society. Capitalism is no guarantee against greed, which can be quenched in both ethical and unethical ways. The end result might be a society that may find it too late to realize the truth in Yayati’s realization that desire is never quenched by indulgence any more than fire is by pouring ghee in it but without his wisdom that he has to renounce it.

    And no, Great Bong, Rama doesn’t discriminate whether or not you regard him as God. Ramayana has a gem of a verse that says, you make your God according to the food you eat. If unbridled capitalism is the food we eat, malls become our Gods. As for me, thinking about Rama–as God or human–may not yield riches but it’ll certainly make my life more valuable. Valuable, derived from value.

  55. ஆர் வி

    நான் மேலே போட்டிருக்கும் பதிலும் உங்களுக்கு சமாதானமாகவில்லையென்றால் அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை

    அன்புடன்
    விஸ்வாமித்ரா

  56. ஆர் வி என் எஸ் ராஜாராம் என்ற அறிஞர் ஆதாரத்துடன் சொல்வதையும் படியுங்கள். படித்து விட்டு ராஜா ராம் என்ன அங்கு கோவில் கட்ட வேண்டும் என்றா சொல்கிறார்? அவர் என்ன மசூதி இடித்தது சரியென்று சொன்னாரா என்று கேட்க்காதீர்கள். அப்படித்தான் சொல்கிறார் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரிடம் தனி மடலிலோ அல்லது தொலைபேசியிலோ கேட்டு அவர் எதை ஆதரிக்கிறார் என்று கேட்டுக் கொள்ளவும். ஒரு சில விஷயங்களை துறைசார் அறிஞர்கள் பூடகமாகத்தான் சொல்வார்கள் நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் டிப்ளமாட்டிக் லேங்குவேஜ் அது. குறிப்பால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    HE EVIDENCE AT AYODHYA By Dr. N S Rajaram

    The Hari-Vishnu Inscription found at Ayodhya.

    The Hari-Vishnu Inscription found at Ayodhya.
    The ‘disputed’ structure
    For all the sound and fury in the media about Ayodhya, the historical question is surprisingly simple: was there or was there not a Hindu temple at the spot known as Ram Janmabhumi that was destroyed to build a mosque? The answer is also equally simple — ‘yes’. There are two parts to the question: (1) was there a Hindu temple, and (2) was it destroyed and a mosque known as Babri Masjid built in its place. Again the answer is — ‘yes’ to both questions. It is as simple as that.
    We should not allow ourselves to be diverted by the dispute whether Lord Ram was born at Ayodhya. It can neither be proved not disproved on the basis of existing evidence, just as we can neither prove nor disprove that Jesus was born in Bethlehem or Mohammed was born in Mecca. The point of this essay is the destruction of Ram Temple to build a mosque in Babar’s time.
    There are basically two sources for studying the history: literary sources and the archaeological record. Following the demolition on December 6, 1992, a great deal of archeological and historical information has come to light. Thus, much of the published material, as well as the controversy about previous temples at the site have been rendered moot by new discoveries following the demolition. What is presented here is a summary of the latest evidence — literary as well as archaeological.
    Literary evidence
    The latest (fifteenth) edition of the Encyclopedia Britannica, in its article on Ayodhya tells us: “Rama’s birthplace is marked by a mosque, erected by the Moghul emperor Babur in 1528 on the site of an earlier temple.” This is only one of hundreds of references to the destruction several languages. One recent author (Harsh Narain, below) cites more than a hundred and thirty references in English, French, Hindi, Sanskrit, Urdu, Persian and Arabic. And I have identified several not found in his work.
    The most comprehensive discussion of the primary material available is probably the book The Ayodhya Temple Mosque Dispute: Focus on the Muslim Sources by Harsh Narain. We next go on to examine several of these sources provided by Harsh Narain. When we survey this vast literature, we see that until recently, until the Secularists created the so-called ‘controversy’, no author — Hindu, Muslim, European or British official — had questioned that a temple existed on the spot which had been destroyed to erect the mosque. We may begin with a couple of references from European writers provided by Harsh Narain. These are from published sources that are widely available.
    A. Führer in his The Monumental Antiquities and Inscriptions in the North-Western Provinces and Oudh, Archaeological Survey of India Report, 1891, pp 296-297 records: ‘Mir Khan built a masjid in A.H. 930 during the reign of Babar, which still bears his name. This old temple must have been a fine one, for many of its columns have been utilized by the Musalmans in the construction of Babar’s Masjid.’ [This is supported by archaeology, as we shall soon see.]
    H.R. Neville in the Barabanki District Gazetteer, Lucknow, 1905, pp 168-169, writes that the Janmasthan temple ‘was destroyed by Babar and replaced by a mosque.’ Neville, in his Fyzabad District Gazetteer, Lucknow, 1905, pp 172-177 further tells us; ‘The Janmasthan was in Ramkot and marked the birthplace of Rama. In 1528 A.D. Babar came to Ayodhya and halted here for a week. He destroyed the ancient temple and on its site built a mosque, still known as Babar’s mosque. The materials of the old structure [i.e., the temple] were largely employed, and many of the columns were in good preservation.’ [Again supported by archaeological finds.]
    In 1855, Amir Ali Amethawi led a Jihad (Islamic religious war) for the recapture of Hanuman Garhi, situated a few hundred yards from the Babri Masjid which at that time was in the possession of Hindus. This Jihad took place during the reign of Nawab Wajid Ali Shah. It ended in failure. A Muslim writer, one Mirza Jan, was a participant in that failed Jihad. His book Hadiqah-i-Shuhada was published in 1856, i.e. the year following the attempted Jihad. Miza Jan tells us:
    …wherever they found magnificent temples of the Hindus ever since the establishment of Sayyid Salar Mas’ud Ghazi’s rule, the Muslim rulers in India built mosques, monasteries, and inns, appointed mu’azzins, teachers and store-stewards, spread Islam vigorously, and vanquished the Kafirs. Likewise they cleared up Faizabad and Avadh, too from the filth of reprobation (infidelity), because it was a great centre of worship and capital of Rama’s father. Where there stood a great temple (of Ramajanmasthan), there they built a big mosque, … Hence what a lofty mosque was built there by king Babar in 923 A.H. (1528 A.D.), under the patronage of Musa Ashiqqan! (Harsh Narain: p 105)
    In fact, as late as 1923, the book Asrar-i-Haqiqat written by the Hindu scholar Lachmi Narain Qunango assisted by Maulvi Hashmi confirms all of the above details. The book leaves one with the impression that many sources were still available to them, especially to the Maulvi who served as Pandit Lachmi Narain’s munshi. This brings us to a Persian text known as Sahifah-i-Chihal Nasa’ih Bahadurshahi written in 1707 by a granddaughter of the Moghul emperor Aurangazeb, and noted by Mirza Jan in his Urdu work Hadiqah-i Shuhada previously cited. Mirza Jan quotes several lines from it which tell us:
    …keeping the triumph of Islam in view, devout Muslim rulers should keep all idolaters in subjection to Islam, brook no laxity in realization of Jizyah, grant no exceptions to Hindu Rajahs from dancing attendance on ‘Id days and waiting on foot outside mosques till end of prayer … and ‘keep in constant use for Friday and congregational prayer the mosques built up after demolishing the temples of the idolatrous Hindus situated at Mathura, Banaras and Avadh … (Harsh Narain: pp 23-24; emphasis added.)
    Then there is the evidence of the three inscriptions at the site of the mosque itself, at least two of which mention its construction by Mir Baqi (or Mir Khan) on the orders of Babar. Babar’s Memoir mentions Mir Baqi as his governor of Ayodhya. Some parts of the inscription were damaged during a riot in 1934, but later pieced together with minor loss. In any event, it was well known long before that, recorded for instance in Mrs. Beveridge’s translation of Babur-Nama published in 1926.
    Overwhelming as all this evidence is, the archaeological evidence is still stronger.
    Discoveries at the site I: The Temple City of Ayodhya
    Let us next look at what archaeology has to say about the Ayodhya site. The first point to note is that Ayodhya lies in a region that is generously watered, and has therefore been densely populated since time immemorial. As a result, archaeological work at Ayodhya is more difficult, and has not been on the same scale as at Harappan sites lying a thousand miles to the west. Here is what a leading archaeologist, Dr. S.P. Gupta (former director of the Allahabad Museum), has to say about recent excavations at Ayodhya.
    From 1975 through 1980, the Archaeological Survey of India under the Directorship of Professor B.B. Lal, a former Director General of the Survey, undertook an extensive programme of excavation at Ayodhya, including the very mound of the Ramajanmabhumi on which the so-called “Janmasthan Masjid” or Babri Mosque once stood and was later demolished on 6th December 1992.
    At Ayodhya, Professor Lal took as many as 14 trenches at different places to ascertain the antiquity of the site. It was then found that the history of the township was at least three thousand years old, if not more… When seen in the light of 20 black stone pillars, 16 of which were found re-used and standing in position as corner stones of piers for the disputed domed structure of the ‘mosque’, Prof. Lal felt that the pillar bases may have belonged to a Hindu temple built on archaeological levels formed prior to 13th century AD…
    On further stratigraphic and other evidence, Lal concluded that the pillar bases must have belonged to a Hindu temple that stood between 12th and the 16th centuries. “He also found a door-jamb carved with Hindu icons and decorative motifs of yakshas, yakshis, kirtimukhas, purnaghattas, double lotus flowers etc.”
    What this means is that Lal had found evidence for possibly two temples, one that existed before the 13th century, and another between the 13th and the 16th centuries. This corresponds very well indeed with history and tradition. We know that this area was ravaged by Muslim invaders following Muhammad of Ghor’s defeat of Prithviraj Chauhan in the second battle of Tarain in 1192 AD. This was apparently rebuilt and remained in use until destroyed again in the 16th century by Babar.
    Temple Ruins found at the demolished site of Babri Structure.

  57. Temple Ruins found at the demolished site of Babri Structure.
    Excavation was resumed on July 2, 1992 by S.P. Gupta, Y.D. Sharma, K.M. Srivastava and other senior archaeologists. This was less than six months before the demolition (which of course no one then knew was going to take place). Their particular interest lay in the forty-odd Hindu artifacts that had been discovered in an adjacent pit that had been missed by Lal. These finds had been widely reported in the newspapers. Gupta, a former Director of the Allahabad Museum and an expert on medieval artifacts had a special interest in examining the finds. He tells us:
    The team found that the objects were datable to the period ranging from the 10th through the 12th century AD, i.e., the period of the late Pratiharas and early Gahadvals. The kings of these two dynasties hailing from Kannauj had ruled over Avadh and eastern Uttar Pradesh successively during that period.
    These objects included a number of amakalas, i.e., the cogged-wheel type architectural element which crown the bhumi shikharas or spires of subsidiary shrines, as well as the top of the spire or the main shikhara … This is a characteristic feature of all north Indian temples of the early medieval period and no one can miss it — it is there in the Orissa temples such as Konarak, in the temples of Madhya Pradesh such as Khajuraho and in the temples of Rajasthan such as Osian.
    There was other evidence — of cornices, pillar capitals, mouldings, door jambs with floral patterns and others — leaving little doubt regarding the existence of a 10th – 12th century temple complex at the site of Ayodhya. So B.B. Lal had been right in believing there was an earlier temple — prior to the one destroyed by Babar. More discoveries were made following the demolition of December 6. All these discoveries leave no doubt at all about the true picture.
    So archaeology also leaves little doubt about the existence of the prior temple. Then came the explosion of Decembr 6, 1992, which demolished not only the Babri Masjid but also the whole case of the Secularists and their allies. It revealed a major inscription that settled the question once and for all.
    Discoveries at the site II: the Hari-Vishnu inscription
    The demolition on December 6, 1992 changed the picture dramatically, providing further support to the traditional accounts — both Hindu and Muslim. Some of the kar-sevaks, no doubt influenced by all the publicity about history and archaeology, went on to pick up more than two hundred pieces of stone slabs with writing upon them. A few of these proved to belong to extremely important inscriptions, more than a thousand years old. In effect, the kar-sevaks had done what archaeologists should have done years ago; they had unearthed important inscriptions — in howsoever a crude form — something that should have been done years ago by professional historians and archaeologists. The inscriptions, even the few that have been read so far, shed a great deal of light on the history of not only Ayodhya and its environs, but all of North India in the early Medieval, and even the late ancient period. Here is what S.P. Gupta found upon examining the two-hundred and fifty or so stone pieces with writing upon them. The most important of these deciphered so far is the Hari-Vishnu inscription that clinches the whole issue of the temple. It is written in 12th century AD Devanagari script and belongs therefore to the period before the onslaught of the Ghorids (1192 AD and later). Gupta tells us:
    This inscription, running in as many as 20 lines, is found engraved on a 5 ft. long, 2 ft. broad and 2.5 inches thick slab of buff sandstone, apparently a very heavy tablet … Three-fourths of the tablet is found obliterated anciently. The last line is also not complete since it was anciently subjected to chipping off. A portion of the central part is found battered, maybe someone tried to deface it anciently. The patination [tarnishing including wearout] is, however, uniform all over the surface, even in areas where once there were inscriptions. (In The Ayodhya Reference: pp 117-18)
    Gupta is an archaeologist and not an epigraphist trained to read ancient inscriptions. It was later examined by Ajay Mitra Shastri, Chairman of the Epigraphical Society of India who gave the following summary. What the inscription tells us is of monumental significance to the history of Medieval India.
    The inscription is composed in high-flown Sanskrit verse, except for a very small portion in prose, and is engraved in chaste and classical Nagari script of the eleventh-twelfth century AD. It has yet to be fully deciphered, but the portions which have been fully deciphered and read are of great historical significance and value … [It has since been fully deciphered.] It was evidently put up on the wall of the temple, the construction of which is recorded in the text inscribed on it. Line 15 of this inscription, for example, clearly tells us that a beautiful temple of Vishnu-Hari, built with heaps of stones … , and beautified with a golden spire … unparalleled by any other temple built by earlier kings … This wonderful temple … was built in the temple-city of Ayodhya situated in Saketamandala. … Line 19 describes god Vishnu as destroying king Bali … and the ten headed personage (Dashanana, i.e., Ravana). (op. cit. 119; emphasis mine. Original Sanskrit quotes given by Shastri have been left out.)
    Need we say more — a temple for Hari-Vishnu who killed the ten-headed Ravana, in the temple city of Ayodhya? So Ayodhya was known as a temple city even then; Saketa was the ancient name of the district. The inscription confirms what archaeologists Lal and Gupta had earlier found about the existence of a temple complex. And yet the Secularists and their allies have been telling the world that there was no temple!
    Summary of findings
    We may now sum up the findings based on both literary and archaeological/epigraphic evidence:

    1. All the literary sources without exception, until the Secularists began their negationist masquerade, are unanimous that a Rama temple existed at the site known since time immemorial as Rama Janmabhumi.
    2. Archaeology confirms the existence of temples going back to Kushan times, or about 2000 years. This date may well be extended by future excavations assuming that such excavations will be permitted by politicians.
    3. Archaeology records at least two temple destructions: the first in the 12th-13th century; the second, later, in all probability in the 16th. This agrees well with history and tradition that were temple destructions following the Ghorid invasions (after 1192 AD) and restored, and was destroyed again in 1528 by Babar who replaced it with a mosque. This is the famous — or infamous — Babri Masjid that was demolished by kar-sevaks on December 6, 1992.
    4. A large inscription discovered at the site dating to 11th-12th century records the existence of numerous temples including a magnificent one in which Hari-Vishnu was honored as destroyer of the ten-headed Ravana. Ayodhya was always known as a temple city.

    These facts drawing upon several literary and archaeological sources leave no doubt at all that a temple located at a site sacred to the Hindus was destroyed to build a mosque under Babar’s express orders.
    Bibliography
    The Ayodhya Reference: Supreme Court Judgement and Commentaries. 1995. New
    Delhi:Voice of India. Ayodhya and the Future of India. 1993. Edited by Jitendra
    Bajaj. Madras: Centre for Policy Studies.
    Baburnama: Memoirs of Babur, Prince and Emperor. 1996. Edited, translated and
    annotated by Wheeler M. Thacktson. New York and London: Oxford University Press.
    Elst, Koenraad. 1990. Ram Janmabhoomi vs. Babri Masjid. New Delhi: Voice of India.
    Goel, Sita Ram. 1991. Hindu Temples: What Happened to Them. Volume I (A
    Preliminary Survey). New Delhi: Voice of India.
    Goel, Sita Ram. 1991. Hindu Temples: What Happened to Them. Volume II (The
    Islamic Evidence). New Delhi: Voice of India.
    Harsh Narain. 1993. The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources.
    Delhi: Penman Publishers.
    Rajaram, N.S. (1998). A Hindu View of the World: Essays in the Intellectual Kshatriya
    Tradition. New Delhi: Voice of India.
    Rajaram, N.S. (2000). Profiles in Deception: Ayodhya and the Dead Sea Scrolls. New
    Delhi: Voice of India

  58. RV,
    // பாப்ரி கட்டிடம் ஒரு மசூதியே இல்லை // என்ன இழவாக இருந்தால் என்ன? அடுத்தவர் சட்ட ரீதியாக கையகப்படுத்தி இருக்கும் கட்டடத்தை – அது ஒரு கக்கூசாக இருந்தாலும் – இடிக்கக் கூடாது என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறேன்?//
    உங்களுடைய வாதம் முழுவதும், பாப்ரி கட்டிடத்தை இடித்தது தவறு, சட்ட பூர்வமான அணுகுமுறையை தவிர இந்த விஷயத்துக்கு வேறொன்று தீர்வாக அமையாது – இதுதானா !
    இது சட்டம் மூலமாக தீர்த்து வைக்க படாததற்கு முக்கிய காரணம் – இந்த பாரத நாடு கடந்த 900 ஆண்டுகளாக இந்த மண்ணின் பாரம்பரியத்தை ஆதரித்தவர்கள் ஆட்சியில் இல்லை. பிரிட்டிஷ் காரனோ, அல்லது அதன் பிறகு வந்த அதன் சேவகர்களான திரு. நேரு போன்ற அவர்களோ தொன்று தொட்ட கலாசார மரபினை ஆதரித்தது கிடையாது. ராமர் ஆட்சி காலத்திலே இருந்து இது வரை அணைத்து ஆவணங்களும் சேகரிக்க பட்டு வைக்க பட்டிருந்தால் மட்டுமே சட்ட பூர்வமான தீர்வு காண முடியும். படை எடுத்து வந்தவர்கள், நூலகங்கள் முதலாக அனைத்தையும் அப்புரபடுத்தினர். இதனால் பாரத மரபினருக்கு உரிய ஆதாரங்கள் சிலவே எஞ்சி இருக்கின்றன. இந்த பிரச்சினையை நீங்கள் எந்த காலகட்டத்தில் இருந்து ஆராய வேண்டும் என்கிறீர்கள். என்னை கேட்டால், அந்த இடத்தில முதன் முதலாக யார் கோயில் கட்டினாரோ அதன் முதற்கொண்டு அணைத்து ஆவணங்களும், பத்திரங்களும் இருந்தால் மட்டுமே சரியான தீர்ப்பு வழங்க முடியும். இதை கடந்த 100 ஆண்டுகள் நடந்த நிகழ்வுகளை மட்டுமே பார்த்து தீர்ப்பு வழகுவது நிச்சயமாக சரியான தீர்ப்பு ஆகாது.

  59. திரு ஆர்.வி. அவர்கள் இந்தப் பிரச்சினையை வெறும் ரியல் எஸ்டேட் என்கிற கோணத்தில் மட்டுமே பார்ப்பதால்தான் அவருக்கு இவ்வாறெல் லாம் வாதம் செய்யத் தோன்றுகிறது என நினைக்கிறேன். முதலில் அயோத்தி பாரமப்ரியமாக ஹிந்துக்கள் போற்றிவரும் ஏழு தலையாய புண்ணியத் தலங்களுள் ஒன்று என்பதை நினைவில் கொள்வது நலம். அங்கு மாற்று சமயத்தினரின் வழிபாட்டுத்தலம் ஏதும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு மாற்று சமய அந்நியனின் வெற்றிச் சின்னத்திற்கும் அங்கு இடமில்லை. ஆகவே அவ்வாறான ஒன்று அயோத்தியில் அதிக்கிரமமாக எழுப்பப்பட்டபோதே அதற்கு ஹிந்துக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்து அதன் விளைவாக அடக்கி ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. 1857-ல் ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ச்சி எழுந்தபோது ஹிந்து-முஸ்லிம் இரு தரப்பினரும் ஒற்றுமையாகக் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அயோத்தி நவாப் (ஒளத் சமஸ்தானம்) வாஜித் அலி ஷா கிளர்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றதும் அந்த நினைவு மண்டபத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைத்துவிடுவதாக வாக்களித்ததாகவும், ஆனால் கிளர்ச்சி வெற்றி பெறாததோடு அதன் பிறகு வாஜித் அலி ஷாவின் சமஸ்தானமே ஆங்கிலேயரால் பறித்துக்கொள்ளப்பட்டுவிட்டதால் அந்த வாக்குறுதி நிறைவேறாமல் போனதாகவும் கூறப்படுகிறது. ஹிந்துக்கள் ரியல் எஸ்டேட் கண்ணோட்டத்தில் ராமஜன்ம பூமியைப் பார்க்கவில்லை.
    அத்தகைய கண்ணோட்டத்துடன் நியாயஸ்தலத்தின் படியேறியவர்கள் முஸ்லிம்கள்தான். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ராமஜன்ம பூமி தங்களின் புனிதத்தலம் என்றும் அதனை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டுத்த்ரவேண்டும் என்றும் ஹிந்துக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனை நமது புனிதத்துவதை மதிக்காத ஆங்கிலேய நீதிபதிகள் ரியல் எஸ்டேட் கண்ணோட்டத்துடன் தள்ளுபடி செய்தனர். அதே கண்ணோட்டம் இப்போதும் தேவைதானா?

    சென்னையில் இருந்த கொடுங்கோலன் நீல் சிலை அகற்றப்பட்ட சம்பவத்துடன் பாபர் நினைவு மண்டப இடிப்பைப் பொருத்திப் பார்ப்பதே முறை அல்லவா? இரண்டுமே தேசிய அவமானச் சின்னங்கள் எனக் கருத்ப்பட வேண்டியவையே. ஏனெனில் பானிப்பட்டில் அந்நிய முஸ்லிமான பாபர் போரிட்டு வென்றது இந்திய முஸ்லிமான சுல்தான் இப்ராஹிம் லோடியைத்தான். ஆகவே நியாயப்படி இந்திய முஸ்லிம்களும் பாபரி கட்டிட இடிப்பை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

    குஜராத்தில் சோமநாதர் ஆலயம் இருந்த இடம் ஹிந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே முகமதியரின் இடுகாடாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1947 ஆகஸ்ட் 15-குப் பின் வல்லபாய் பட்டேல் மேற்கொண்ட முயற்சியினால் அந்த இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு மீண்டும் சோமநாதர் ஆலயம் எழுந்தது. இதே மாதிரியான நடவடிக்கைதான் பாப்ரி விஷயத்திலும் நடந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழாமல் போனதற்குக் காரணம் அது நேருவின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட அன்றைய ஐக்கிய மாகாணத்தில் இருந்துவிட்டதுதான். நான் கலாசாரப் பின்னணியில் ஒரு முஸ்லிம், கல்விமுறைப்படி ஐரோப்பியன், பிறப்பால் மட்டுமே ஹிந்து என்று பெருமைப்பட்டுக்கொண்டவர் ஆயிற்றே, நமது ஜவஹர்லால் நேரு! அவரது பெயரே இஸ்லாமியக் கலப்புள்ளதுதானே! ஜவாஹிருல்லா என்னும் பெயர் முஸ்லிம்களிடையேயும் உண்டே!

    முதலில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டதால் அதைப் பின்னர் மாற்றிக் கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோலாகிவிடுமே என்கிற ஈகோ எதையும் இந்த விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    — சத்தியபாமா

  60. விஸ்வாமித்ரா, // சட்டத்தை எது எதுக்கு மதிக்க வேண்டும் எது எதுக்கு மதிக்கக் கூடாது என்பதை அந்தந்த சம்பவம் தீர்மானிக்கிறது. // சட்டத்தை மதிப்பதும் மதிக்காமல் இருப்பதும் ஒரு சம்பவத்தைப் பற்றி அவரவர் என்ன நினைக்கிறார் என்பதே தீர்மானிக்கிறது என்றால் சட்டம் பொருளற்றது. இந்த விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கும் உங்களுக்கும் மசூதி இல்லை இல்லை கும்பட்டமோ என்னவோ ஒன்று இடிக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி வேறு வேறு நினைப்பு இருக்கிறது. நாளை தீர்ப்பு “ஹிந்துத்தவவாதிகளுக்கு” ஏற்ற மாதிரி வந்தால் அந்த தீர்ப்பை, தீர்ப்பின் பின்னால் இருக்கும் சட்டத்தை மதிக்காமல் இருக்கும் உரிமை எனக்கு உண்டா? Dispute Resolution Mechanism எதுவும் அடிப்படை விதிகளை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்பட முடியும். தர்மபுரியில் பஸ்ஸை எரித்த மூன்று பேருக்கு மரண தண்டனையாம், அவர்களுக்கு சட்டத்தை மதிக்காமல் இருக்கும் உரிமை இருந்தால் ஒரு பஸ் இல்லை, நூறு பஸ் எரியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு நிலை எடுத்தால் கருணாநிதி சோழனும் அழகிரி பாண்டியனும் சட்டத்தை மதிப்பதில்லை என்று குறைப்பட அப்புறம் நமக்கு என்ன உரிமை மிஞ்சும்?
    அநீதியான சட்டத்தை மீறுவது ஒரு exception. அதை காந்தி செய்தார். ஆனால் அவர் தான் சட்டத்தை மீறினேன் என்று எப்போதும் கோர்ட்டில் ஒத்துக்கொண்டவர். (அப்படி அத்வானியும் உமா பாரதியும் செய்திருந்தால் குறைந்த பட்சம் நேர்மையாளர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் என்றாவது ஒரு நம்பிக்கை இருந்திருக்கும்.) அது அன்னியர் ஆட்சி, சட்டத்தை மாற்ற நமக்கு உரிமை இல்லாத காலம். இன்று என்ன? அடுத்த புல்லட்டையும் பாருங்கள்.
    சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பது ஒரு fundamental tenet. இதைப் பற்றி இனி மேலும் பேச எனக்கு எதுவுமில்லை.

    // அதையே இந்துக்களுக்கும் ராமர் கோவில் விஷயத்தில் செய்யச் சொல்லிக் கேட்க்கிறோம். // தாரளமாக கேளுங்கள். ஆனால் என்னிடம் கேட்டு பயனில்லை. கல்யான் சிங் ஏன் அப்படி ஒரு ordinance கொண்டுவரவில்லை என்று கேளுங்கள். வாஜ்பேயி பதவி வந்ததும் ஏன் இதை மறந்துவிட்டார் என்று கேளுங்கள். நாளை பா.ஜ.க.வுக்கோ இல்லை ஒரு கீ.ஜ.க.வுக்கு பிரச்சாரம் செய்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து இந்த நிலத்தை eminent domain கோட்பாட்டின் படி கையகப்படுத்த சொல்லுங்கள். ஆனால் இது எதுவும் இடித்தது குற்றம் என்பதை மாற்றாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (இதைத்தான் நான் முதலிலும் எழுதி இருந்தேனே? வர வர படிக்காமலே மறுமொழி எழுதுகிறீர்கள்!)

    // இட ஒதுக்கீடு 2000 காலத் தவறை சரி செய்ய கொண்டு வரப்பட்டது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. // மன்னிக்கவும், என் கருத்தை தவரகா புரிந்துகொண்டிருக்கிறீர்கள். // 2000 ஆண்டுக்கான தவறை திருத்தும் சட்டம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது குற்றம் என்று சொல்லும் சட்டம். ஏனெறால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதுதான் 2000 ஆண்டு தவறு. இட ஒதுக்கீடு இன்றைய ஏற்றத்தாழ்வை குறைக்க ஒரு முயற்சியே. // என்றுதான் எழுதி இருக்கிறேன். இட ஒதுக்கீடு வேறு, ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு என்ற சட்டம் வேறு. அதுதான் சொல்கிறேனே, வர வர படிக்காமலே எழுதுகிறீர்கள்.

    // நகாசாமி… என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. // அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்கு தெளிவாக புரிகிறது. 🙂 நீங்கள் அதில் சொல்லாமல் சொல்வது என்ன என்று wishful thinking-இல் ஈடுபட நினைப்பது உங்கள் உரிமை, இஷ்டம்.

    சந்தீப் எழுதிய சுட்டியைப் படித்தேன். மன்னிக்கவும் விஸ்வாமித்ரா, இங்கே நீனகள் சொல்லாத எதை அவர் சொல்லிவிட்டார்? ஏன் இப்படி ஹோம்வொர்க் கொடுத்து என் உயிரை வாங்குகிறீர்கள்? 🙂 அரைத்த மாவை நீங்கள் மீண்டும் அரைக்க விரும்பினால் அது உங்கள் இஷ்டம், அதற்கு மாவு தள்ள என்னை ஏன் இழுக்கிறீர்கள்? 🙂

    // என் எஸ் ராஜாராம் என்ற அறிஞர்… // சிந்து சமவெளி, ஃபோட்டோஷாப் என்று இவரைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். மீண்டும் கேட்கிறேன், என்ன புதிதாக இதில் இருக்கிறது என்று நீள நீளமாக இதையெல்லாம் கட் பேஸ்ட் செய்து போடுகிறீர்கள்? இங்கே கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி ஏதாவது விவாதம் நடக்கிறதா என்ன?

    ராமகிருஷ்ணன், // கடந்த 100 ஆண்டுகள் நடந்த நிகழ்வுகளை மட்டுமே பார்த்து தீர்ப்பு வழகுவது நிச்சயமாக சரியான தீர்ப்பு ஆகாது…. // அதாவது statute of limitations செல்லாது என்கிறீர்கள். சரி, அமேரிக்கா செவ்விந்தியர்களிடம் இருந்து அநியாயமாக கைப்பற்றப்பட்ட நாடு; இதற்கு எல்லா ஆவணனகளும் இருக்கின்றன. அங்கே வாழும் இந்தியர்கள் செவ்விந்தியர்களிடம் தங்கள் அமெரிக்க சொத்துகளை ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (இந்த கேள்வியையும் நான் முன்னால் கேட்டிருக்கிறேன்)

    விருட்சம், // எல்லோரும் ஒத்துப் போகும் கருத்து என்று எல்லாவற்றிலும் இருக்காது. // உண்மை. ஆனால் என்ன அடிப்படையில் விவாதிக்கிறோம் என்பது தெளிவாகும். அந்த அடிப்படை consistent ஆக இருக்கிறதா என்று தெளிவாகும். உதாரணமாக விஸ்வாமித்ரா சட்டத்தை சவுகரியப்ப்படும்போது மதித்தால் போதும் என்கிறார். இந்த உரிமையை எதிர்கட்சிக்காரனும் எடுத்துக் கொண்டால் என்னாகும் என்று கேள்வி வருகிறது. Statute of limitations செல்லாது, எந்த அநீதியும் எவ்வளவு காலம் முன் நடந்திருந்தாலும் சரி செய்யப்பட வேண்டும் என்று விஸ்வாமித்ரா உட்பட்ட சிலர் சொல்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் குடி புகுந்த இந்தியர்களைப் பற்றியும், “வந்தேறி” என்று நிரூபிக்கப்பட்டால், தமிழக பிராமணர்கள் என்ன செய்ய வேண்டும் எனபது பற்றியும் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று கேள்வி வருகிறது. சட்டம் ஒரு கோல்ட் ஸ்டாண்டர்ட் என்று நான் கருதுகிறேன். அதில் எத்தனையோ ஓட்டை இருக்கிறதே, அப்படி இருக்கும்போது சட்டத்தை ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வியை விஸ்வாமித்ரா எழுப்புகிறார்.

  61. அயோத்தி நவாப் வாஜித் அலி ஷா மக்கள் நலம் பேணாத சிற்றின்பப் பிரியராக இருந்த போதிலும், ஹிந்து மத விரோதியாக இல்லை எனப்து குறிப்பிடத்தக்கது. ஹிந்துக்களின் மத உணர்வை மதிப்பவராகவும் அவர் இருந்தார். நிர்பந்தம் காரணமாகவே 1857 கிளர்ச்சிக்கு அவர் ஆதரவு அளித்தார். இந்த விஷயத்தில் அவர் தில்லி பாதுஷா பஹதூர் ஷா சபர் போலத்தான்! ப்ரேம் சந்த் எழுதிய, சத்தியஜித் ராய் எடுத்த ஷத்ரஞ்ச்கீ கிலாடி ஹிந்தி திரைப் படம் நினைவிருக்கிறதா?
    -சத்தியபாமா

  62. நாளை நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்து நாம் கோவில் கட்டினாலும் சரி பிரச்னை வேண்டாம் பொதுவான ஒரு பூங்கவோ நினைவு சின்னமோ அல்லது பொது நூலகமோ கட்டி இந்திய தாய் நாட்டுக்கு அர்பனித்தாலும் சரி,நிச்சயம் அடுத்த பத்து ஆண்டுகளில் ஜிகாத் செய்து அதனை மீண்டும் இடித்து கலவரம் உண்டாக்கி, அந்த பிரச்னைக்கு மீண்டும் நாம்தான் காரணம் என்று எல்லா ஊடகங்களிலும் முழங்க ஆரம்பித்து விடுவார்கள்.
    அதனை பொது இடமாக அறிவிக்க இந்துக்கள் மட்டுமே ஒரு சிலர் ஒத்து கொள்பவராக உள்ளனர் என்பதை நினைவில் கொள்க.
    பெரும்பாலான என்ன எல்லா முஸ்லிம்களும் அங்கே மீண்டும் மசூதி வருவதையே விரும்புகின்றனர்.

    அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அல்லாவின் தீர்ப்பாக கூறி கொண்டாட ஆரம்பிப்பார்கள்.அங்கே மசூதி நிச்சயம்.
    இந்து இயக்கங்கள் எல்லாம் தலையிட்டு இதனை அரசியல் ஆக்க பார்கின்றன என்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஒப்பு கொண்டாலும், முஸ்லிம் இயக்கங்கள் இதனை வைத்து அரசியல் செய்யவில்லையா? அரசியல் மத ரீதியாக மாற்ற அடித்தளம் போட்டதே இவர்கள் தான்.

    ஜிகாத்துக்கு எல்லாம் நாம் யாரும் போகமாட்டோம், போகவும் கூடாது.
    அரசியலிலும் நமக்கு ஆதரவு கிடையாது, எப்படியும் நாம் கோட்டை விடத்தான் போகிறோம். ஏன் வீணாக கிடந்து நமக்குள்ளேயே சண்டை போடவேண்டும்.
    தமிழ் நாட்டில் ராமன் நமக்கு எதிரி . அனால் பாபர் நமக்கு நெருங்கிய உறவினர் என்பது போன்ற ஒரு திராவிட மாயை வேறு பலரிடம் பரப்பப்பட்டு உள்ளது.
    சிக்கல் தான்.

  63. ஆர் வி

    இட ஒதுக்கீடு என்பது ஆயிரம் ஆண்டு கொடுமையைப் போக்கவே என்பதை சட்டத்தை உருவாக்கியவர்களே சொல்லி விட்டார்கள். ஆகவே அது பழைய தவறை நீக்கக் கொண்டு வரப் பட்ட சட்டமே. அதை வரவேற்கும் நீங்கள் இதை எதிர்ப்பது உங்கள் ரெட்டை வேடத்தை மட்டுமே காட்டுகிறது

    ஐயா நான் சட்டத்தை மதிக்க வேண்டாம் என்று சொல்வது இந்த ஒரு விஷயத்துக்கும் இதைப் போலவே இனிமேலும் முஸ்லீமுக்கு ஒரு சட்டமும் இந்துவுக்கு வேறு சட்டமும் கொண்டு வரப்பட்டால் அதையும் மட்டுமே. அந்த அடிப்படையில் கும்முட்டத்தை இடித்தது சரியான ஒரு செயலே.

    அத்வானியும் வாஜ்பாயும் இடிக்கவில்லை மேலும் அவர்கள் ஏறியவர்களை இறங்கவே சொன்னார்கள் அதற்கு எதுக்கு அவர்கள் போய் தண்ட்னை அனுபவிக்க வேண்டும்., உண்மையாகவே இடித்த எவருமே அதை மறுக்கவில்லை பெருமையாக ஒத்துக் கொண்டு தண்டனை அனுபவிக்க ரெடியாகவே இருக்கிறார்கள் போய் அவர்களைத் தூக்கில் போடுங்கள் மகிழ்ச்சியுடன் சாவர்கள் இங்கு இடித்த யாருமே தான் இடிக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆம் இடித்தோம் சரியான செயல்தான் என்ன வேண்டுமானாலும் செய் என்கிறார்கள். முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு வேறு சட்டம் என்றால் அந்த சட்டம் மீறப் படவே செய்யும். அது சரியான ஒரு செயலாகவே இருக்கும். ஷா பானு கேசில் சட்ட திருத்தம் நடந்திருக்காவிட்டால் இந்த கும்முட்டம் இடிக்கப் பட்டே இருக்காது.அப்படியே இடிக்கப் பட்டிருந்தாலும் நான் ஆதரித்திருக்க மாட்டேன், நான் இதை ஆதரிக்கும் காரணம் ஷா பானு சட்ட திருத்தமே. ஒரு தவறு மற்றொரு சரியை சரியாக்குகிறது. சட்டம் மத விஷயத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்திருக்குமானால் நானும் உங்களைப் போல இடித்தது தவறு என்றே சொல்லியிருந்திருப்பேன் ஆனால் இந்தியாவில் அப்ப்டி இல்லை ஆகவே இடித்ததைச் சரி என்கிறேன்.

    நாகசாமி அவர்களிடம் தனியாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியாகி விட்டது மேலும் மேலும் விஷ்ஃபுல் திங்கிங் என்று நீங்களாகவே விஷ்ஃபுல் திங்க் செய்தால் என்ன அர்த்தம். ஒரு சில விஷயங்களைப் பெரியவர்கள் பூடகமாவேதான் சொல்லுவார்கள். நான் கொடுத்திருப்பதை முழுதாகப் புரிந்து படித்திருந்தால் மீண்டும் மீண்டும் இதே கேள்வியைக் கேட்க்க மாட்டீர்கள். திம்மித்தனம் அளவில்லாமல் போனால் நம் அழிவுக்கு வித்திடும் என்று நினைக்கிறேன் ஆகவே இந்தியா மற்றொரு முஸ்லீம் நாடாக மாறுவதை தடுக்க இந்த கும்முட்டம் இடிக்கப் பட்டதை ஆதரிக்கிறேன். முஸ்லீம்களுக்காக ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்றால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும் மதிக்க ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்று நினைக்கிறேன். சட்டம் என்பது மாற்றப் படக் கூடியது அதை இந்துக்களுக்கு எதிராக மறுக்கும் பொழுது அதை மீறினால் தவறு இல்லை என்றும் நினைக்கிறேன். சம்பவத்தைப் பொருத்து என் நிலை மாறும். இங்கு இரண்டு ம்த உணர்வுகளில் ஒன்று மட்டும் ஏற்கப் படுகிறது மற்றொன்று நிராகரிக்கப் படுகிறது அதை எதிர்க்கிறேன். இதை அனுமதித்தால் இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன்

  64. ராஜன், // ஐயா நான் சட்டத்தை மதிக்க வேண்டாம் என்று சொல்வது இந்த ஒரு விஷயத்துக்கும் இதைப் போலவே இனிமேலும் முஸ்லீமுக்கு ஒரு சட்டமும் இந்துவுக்கு வேறு சட்டமும் கொண்டு வரப்பட்டால் அதையும் மட்டுமே. அந்த அடிப்படையில் கும்முட்டத்தை இடித்தது சரியான ஒரு செயலே. // உங்களுக்கு இந்த ஒரு விஷயம்; எனக்கு இன்னொரு விஷயம்; தகவல் துறை அமைச்சர் ராஜாவுக்கு மற்றுமொரு விஷயம்; கருணாநிதி சோழனுக்கு இன்னும் ஒரு விஷயம். இப்படி எல்லாரும் அவரவர் இஷ்டப்பட்ட ஒரு அல்லது சில விஷயங்களில் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என்று நீங்கள் புரிந்து கொள்ளாதது இல்லை இல்லை புரிந்து கொள்ள விரும்பாதது துரதிருஷ்டமே.

    // உண்மையாகவே இடித்த எவருமே அதை மறுக்கவில்லை பெருமையாக ஒத்துக் கொண்டு தண்டனை அனுபவிக்க ரெடியாகவே இருக்கிறார்கள் // ரொம்ப சரி, எல்லாரும் பெருமையோடு கோர்ட்டில் ஒத்துக்கொண்டுவிட்டார்கள், அதனால்தான் பதினெட்டு வருஷம் ஆகியும் இன்னும் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அத்வானி ஒன்னும் தெரியாத பாப்பா என்று அவரே கூட சொல்லமாட்டார். கொஞ்சம் விட்டால் ராஜீவுக்கு 1984 டெல்லி கலவரங்களில் பங்கே கிடையாது ஏனென்றால் அவர் தன் கைகளால் யாரையும் கொல்லவில்லை என்பீர்கள் போலிருக்கிறது.

    // இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன் // உங்கள் தீர்வு இந்தியாவை ஒரு ஹிந்து பாகிஸ்தானாக ஆக்குகிறது என்றே நான் அஞ்சுகிறேன். பாருங்கள் எனக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் இல்லாவிட்டால் சட்டத்தை மீறலாம், கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது பெரும் கூட்டத்தை கூட்டி அது என்னங்க குந்தட்டமா என்னவோ ஒன்றை இடிப்பது சரியே, “பெரும்பான்மை” மக்கள் இதையே விரும்புகிறார்கள் என்று நீங்கள் உள்ளிட்ட பலரும் வாதாடுகிறீர்கள். அதாவது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகராறு வந்தால் சட்டம் எப்போதும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வோம் என்று பேசுகிறீர்கள். பாகிஸ்தான் மைனாரிடிகளை நடத்தும் முறையே சரி, அந்த முறையையே இந்தியாவும் தன் mainaaritikal விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு தீர்வு வருமானால் அந்த தீர்வு பிரச்சினையை விட மோசமானது!

  65. //RV
    27 September 2010 at 11:21 am //
    நண்பரே உங்களின் இவ்வளவு விளக்கங்கள் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?
    அந்த இடம் அவர்களுக்கு விட்டு கொடுக்கப்பட வேண்டும் அவர்களே அங்கே மசூதி கட்டி கொள்ளட்டும் என்பதா?

    இது ஒரு குழப்பமான விஷயம், நமக்குள் பேசி முடிய போகும் விஷயம் அல்ல. நாம் (இந்து, முஸ்லிம் இருதரப்பும்) எந்த முடிவு வந்தாலும் எப்படி அதனை எடுத்து கொள்ள போகிறோம் என்பதே இன்றைய தேவையாக தெரிகிறது. பிரச்னை வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் இதுவே இன்றைய தேவை. அரசியல் பற்றிய அலசல் தனி.
    பத்து வருடம் முன்பு இந்துக்கள் இடித்தது தவறு என்றால் அதற்கு முன்பு முஸ்லிம்கள் இடித்ததும் தவறுதான். இந்துக்கள் பல சம்பவங்களில் விட்டு கொடுத்தோ அல்லது ஒன்றும் செய்ய முடியாமல் அடிபணிந்தோ போவது தான் இங்கே நடக்கும் நிதர்சன உண்மை.
    இந்துக்கள் இன்று இடித்ததை சுட்டிக்காட்டும் அது தவறு என்பதில் மிக உறுதியாக உள்ள நீங்கள்,இதற்கு முன் அவர்கள் இடித்ததை பற்றி நீங்கள் எந்த கருத்தும் கூறவில்லை.அதுவும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் கோவில் இருந்ததை உறுதி செய்த பிறகும்.

    மேலும் சட்டப்படி அவர்கள் வசம் இருந்தது என்று ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்கள் ஆட்சி காலத்தில் இடித்து கையகபடுத்தபட்ட ஒரு இடம் சட்டப்படி அவர்கள் பெயரில் மாற்றப்பட்டு இருந்தாலும், அது அதிகார துஷ் பிரயோகத்தால் செய்யப்பட்டது என்பதனை விட்டு விட்டு சட்டப்படி அவர்களுக்கு சொந்தமானது என்கிறீர்கள்.
    அகழ்வாராய்வு முடிவுகளையே நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் அது வேறு விஷயம்.
    இப்பவும் நம்மவர்கள் செய்தது சரி என்பதல்ல என் வாதம். ஆனால் உங்கள் வாதங்கள் அனைத்தும் அவர்களுக்கு சப்போர்ட் செய்வதாகவே தெரிகிறது.
    பேசாமல் இந்த தீர்ப்பு இன்னும் சொல்லபடாமலே சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் இறக்கும் வரை தள்ளி போவதே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போகும் என்று கூட என்ன தோன்றுகிறது.

    // இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன் //
    இதை மட்டும் எடுத்து பதில் கூறுகிறீர்கள் .

    முதல் வரியும் சேர்த்து படித்தால் தான் முழுமையான அவர் சொல்ல வரும் அர்த்தம் முழுமையாக புரியும் என்று நினைக்கிறன்.
    //இங்கு இரண்டு ம்த உணர்வுகளில் ஒன்று மட்டும் ஏற்கப் படுகிறது மற்றொன்று நிராகரிக்கப் படுகிறது அதை எதிர்க்கிறேன். இதை அனுமதித்தால் இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன்//

    என் புரிதலின் படி அவர்களுக்கு சாதகமான உங்கள் நிலைபாட்டை தான் நீங்கள் இங்கே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிகிறது.

    சண்டை வேண்டாம் விட்டு கொடுப்போம் என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்தால் நேரடியாக அப்படியே சொல்லுங்கள். ஓகே ஒரு நட்புறவினை வளர்க்கும் உணர்வாக எடுத்து கொள்ளலாம்.

    நடு நிலை என்பது இந்த விசயத்தில் எந்த பக்கமும் சலுகை இல்லாமல் அதனை பொது இடமாக அறிவிப்பது ஒன்றுதான்.இப்படிப்பட்ட தீர்ப்பினை நம்மவர்கள் பொருத்து கொண்டாலும் அவர்கள் இத்துடன் பிரச்னையை விட மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

    ரெண்டு பக்கமும் செண்டிமெண்ட் இருக்கும் இதில் விட்டு கொடுப்பதற்கு,அதிலும் நமக்கு ஆதாரம் கிடைத்து சாதகமான சுழல் இருக்கும் போது சாதக சூழல் உள்ளவர்கள் மனநிலை எப்படி இருக்கும்.

    //பெரும்பான்மை” மக்கள் இதையே விரும்புகிறார்கள் என்று நீங்கள் உள்ளிட்ட பலரும் வாதாடுகிறீர்கள். அதாவது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகராறு வந்தால் சட்டம் எப்போதும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வோம் என்று பேசுகிறீர்கள்.//
    கிழே பாருங்கள் அவரின் வரிகள் என்ன சொல்கின்றன? நீங்கள் என்ன புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று தெரியும்.ஹிந்துக்களுக்கு ஆதரவாக சட்டம் செயல் பட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. மிக தெளிவாக குறிபிட்டுள்ளார்.

    //முஸ்லீம்களுக்காக ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்றால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும் மதிக்க ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்று நினைக்கிறேன். சட்டம் என்பது மாற்றப் படக் கூடியது அதை இந்துக்களுக்கு எதிராக மறுக்கும் பொழுது அதை மீறினால் தவறு இல்லை என்றும் நினைக்கிறேன்//

    மேலும் பிராமணர் வந்தேறிகள் என்பது நிரூபணம் இல்லாத சர்ச்சைக்கு உரிய கருத்து.இதனை திரும்ப திரும்ப சொல்வதில் உங்களுக்கு ஆவல் உள்ளது போல் தோன்றுகிறது ( சத்த்யமாக நான் பிரமணன் அல்ல). ஆனால் இஸ்லாமியர் இங்கு படை எடுத்து வந்து கோவில்களை இடித்து மசூதி கட்டியது எந்த சந்தேகமும் இல்லாத வரலாறு. இந்த விசயத்தில் அவர்கள் மறுத்து வந்த போதிலும் இப்போது ஒரு ஆராய்ச்சி செய்து அங்கே கோவில் இருந்ததை நிரூபித்தும் விட்டார்கள். எப்படி ஒரு நிரூபிக்கப்பட்ட கருத்துக்கு, ஒரு சர்ச்சையில் உள்ள கருத்தினை ஒப்பிடுகிறீர்கள்?

    இவை எல்லாமே உங்கள் வாதத்தின் அடிப்படையிலான என் புரிதல், என் மேல் கோபப்பட வேண்டாம்.

    சகோதரி சத்யபாமாவின் கருத்தை நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
    //முதலில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டதால் அதைப் பின்னர் மாற்றிக் கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோலாகிவிடுமே என்கிற ஈகோ எதையும் இந்த விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    – சத்தியபாமா//

    என் தனிப்பட்ட கருத்து, நாம் போராட்டத்துடன் கோவில் கட்டி பயந்து பயந்து அல்லது அவர்களுடன் சண்டை போட்டுகொண்டு கோவிலை காப்பாற்றுவதற்கு பதில்.அதனை பொதுவான இடமாக அறிவித்து விட்டு நிம்மதியாக இருப்பதே மேல். அனால் நம்முடைய நியாயத்தை பெற்ற பின். கோவிலை விட உயிர்களும் நாட்டின் நிம்மதியும் விலை மதிப்பற்றது. ராமபிரானும் இதையே விரும்புவான் என்று நினைக்கிறேன்.

  66. இந்த வழக்கு நடந்து ஆராய்ச்சியில் அங்கே கோவில் இருந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அந்த கட்டிடம் இந்துக்களால் இடிக்கபடாமல் இருந்து இருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும்?

    அந்த கட்டிடத்தை இடித்த ஒரு தவறை சுட்டி காட்டி இன்று வரை பல தீவிரவாத செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு தீவிரவாத செயலுக்கும் இந்த ஒரு இடிபாட்டை காட்டி நியாயப்படுத்தி விட பார்க்கிறார்கள். அமெரிக்க ரெட்டை கோபுர தாக்குதலே இதனால் தான் எனும் அளவுக்கு கூறுகிறார்கள். இதனை நீங்களும் ஏற்றுகொள்கிறீர்களா?

  67. பாபு, நீங்கள் ஒரு மறுமொழியை மட்டும் படித்துவிட்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். // இதற்கு முன் அவர்கள் இடித்ததை பற்றி நீங்கள் எந்த கருத்தும் கூறவில்லை… // இதைப் பற்றி விலாவாரியாக முன்னால் நிறைய எழுதி இருக்கிறேன். மீண்டும் எழுத பொறுமை இல்லை. சுருக்கமாக – பாபர் தன் கால விழுமியங்கள், சட்டம், நியாயம், தர்மப்படி கோவிலை இடித்தார். அது இன்றைய விழுமியங்களின் படி தவறே. ஆனால் பாபர் கால விழுமியங்கள் வேறு. இதற்கு மேலும் விளக்கம் தேவை என்றால் முந்தைய மறுமொழிகளைப் படித்துக் கொள்ளுங்கள்.

    // ரெண்டு பக்கமும் செண்டிமெண்ட் இருக்கும்… // சட்டத்துக்கும் செண்டிமெண்டுக்கும் என்ன சம்பந்தம்? என் தாத்தா வாழ்ந்த வீட்டை யாரோ ஏமாற்றி கைநாட்டு வாங்கி கையகப்படுத்திக் கொண்டால் எனக்கு அந்த வீடு சென்டிமென்டலாக முக்கியமானது, அதை அவர் சந்ததியினர் எனக்கு கொடுத்து/விற்று விட வேண்டும் என்று நான் வற்புறுத்த முடியுமா?

    // முஸ்லீம்களுக்காக ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்றால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும் மதிக்க ஒரு சட்டம் மாற்றப் படலாம் // மீண்டும் சொல்கிறேன், முன்னால் எழுதியதை எல்லாம் படியுங்கள். சட்டம் மாற்றப்பட்டால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டம் மீறப்படுவதையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாளை ஒரு முஸ்லிம் கும்பல் தெருக்கோடியில் இருக்கும் மாரியம்மன் கோவில் முகமது நபியின் முன்னோர் வாழ்ந்த இடம், அங்கே எங்களுக்கு ஒரு மசூதி கட்ட வேண்டும் என்று அதை இடிக்கப் போனால் அதையும்தான் எதிர்ப்பேன்.

    // மேலும் பிராமணர் வந்தேறிகள்… // மன்னிக்க வேண்டும் உங்கள் புரிதல் தவறானது. பிராமணர்கள் வந்தேரினாலும் போயேறினாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை பல முறை explicit ஆக எழுதியும் இருக்கிறேன், நீங்கள் படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் முன்னால் இருக்கும் நிலை திரும்ப வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை சொல்லும் விஸ்வாமித்ரா போன்றவர்கள் பிராமணர்கள் வந்தேறிகள் என்ற hypothesis , சர்ச்சைக்குரிய கருத்து நாளை நிரூபிக்கப்பட்டால் என்ன நிலை எடுப்பார்கள் என்றுதான் கேள்வி. அந்த hypothesis நிறுவப்பட்டாலும் நிருவப்படாவிடாலும் எனக்கு அக்கறை இல்லை – ஏனென்றால் நான் முன்னால் இருக்கும் நிலை திரும்ப வேண்டும் என்ற நிலையை எடுப்பவன் இல்லை. அந்த கோட்பாட்டை தங்கள் வாதங்களுக்கு moral , ethical underpinning ஆக பயன்படுத்துபவர்கள் இந்த hypothesis நிறுவப்பட்டால் எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு சம்மதம்தானா? உங்களுக்கு இன்னும் குழப்பம் என்றால் அமேரிக்கா – செவ்விந்தியர்கள் – இங்கே வாழும் இந்தியர்கள் என்ற கேள்வியைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

    // இந்த வழக்கு நடந்து ஆராய்ச்சியில் அங்கே கோவில் இருந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அந்த கட்டிடம் இந்துக்களால் இடிக்கபடாமல் இருந்து இருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும்? // “ஹிந்துத்துவவாதிகள்” சரியான முறையில் போராடுகிறார்கள் என்று இருந்திருக்கும். அவர்களுக்கு சட்ட ரீதியாக வெற்றி கிடைக்குமா என்று சந்தேகம் போயிருக்காது.

    // அந்த கட்டிடத்தை இடித்த ஒரு தவறை சுட்டி காட்டி இன்று வரை பல தீவிரவாத செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்… // இது தவறு என்று ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒருவராவது உணர்கிறீர்களே! காரணம் எதுவாக இருந்தாலும் தீவிரவாதம் தண்டிக்கப்பட வேண்டியது என்று நான் சொல்லவும் வேண்டுமா?

  68. //தெருக்கோடியில் இருக்கும் மாரியம்மன் கோவில் முகமது நபியின் முன்னோர் வாழ்ந்த இடம், அங்கே எங்களுக்கு ஒரு மசூதி கட்ட வேண்டும் என்று அதை இடிக்கப் போனால் அதையும்தான் எதிர்ப்பேன்.//
    மாரியம்மன் கோவில் கண்டிப்பாக நபியின் முன்னோர் வாழ்ந்த இடத்தில் இருக்கவே இருக்காது. அதனால் கண்டிப்பாக எதிர்பீர்கள்.

    நான் உங்களுடன் விவாதத்திற்காக எதையும் எழுதவில்லை, புரிதலுக்கான கேள்வியே.

    //சட்டம் மாற்றப்பட்டால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டம் மீறப்படுவதையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். //

    ஓகே அப்போ சட்டம் மாற்றுவதற்கான போராட்டம் இந்து அமைப்புகள் நடத்தினால் உங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் அல்லது குறைந்த பட்சம் எதிர்கமாலாவது இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    ஆனால் அப்படி சட்டத்தை மாற்றி இந்துக்கள் அந்த இடத்தை பெற்றாலும் பிரச்னை தீர்ந்து விடாது என்பது என் கருத்து. மீண்டும் பிரச்னை தலை தூக்கும் ( இதை தான் நான் செண்டிமெண்டல் பிரச்னை என்று குறிப்பிட்டேன்)

    நான் சொல்ல வந்தது உங்கள் கருத்துக்கள் அவர்களின் செய்கையை நியாயபடுத்தி அவர்களுக்கு சொந்தமானதாக கூறுவதாகவே உள்ளது போல் எனக்கு தோனுகிறது.

    ஆனால் அது நம்மிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்ட இடம் அதனை நாம் உரிமையாக திரும்ப பெற்று மீண்டும் பிரச்னை வராத படிக்கு இரு தரப்புமே உபயோகிக்கும் பொது இடமாக மாற்ற பட்டாள் நாளைய இந்தியாவில் இதனால் பிரச்னை வராமல் இருக்குமோ என்ற நப்பாசை தான்.

    // இந்த வழக்கு நடந்து ஆராய்ச்சியில் அங்கே கோவில் இருந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அந்த கட்டிடம் இந்துக்களால் இடிக்கபடாமல் இருந்து இருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும்? // “ஹிந்துத்துவவாதிகள்” சரியான முறையில் போராடுகிறார்கள் என்று இருந்திருக்கும். அவர்களுக்கு சட்ட ரீதியாக வெற்றி கிடைக்குமா என்று சந்தேகம் போயிருக்காது//

    இப்படி நடக்காமல் போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.

    //முன்னால் இருக்கும் நிலை திரும்ப வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை சொல்லும் விஸ்வாமித்ரா போன்றவர்கள் பிராமணர்கள் வந்தேறிகள் என்ற hypothesis , சர்ச்சைக்குரிய கருத்து நாளை நிரூபிக்கப்பட்டால் என்ன நிலை எடுப்பார்கள் என்றுதான் கேள்வி. அந்த hypothesis நிறுவப்பட்டாலும் நிருவப்படாவிடாலும் எனக்கு அக்கறை இல்லை//

    மீண்டும் சொல்கிறேன் உங்கள் கருத்து ஏற்புடையாதாக இருந்தாலும் நம்மில் ஒருவராக உள்ளவர்களை அன்னியபடுத்தி பேசும் கோட்பாட்டை நாம் ஏன் கையில் எடுக்கவேண்டும். hypothesis என்று அல்ல உண்மையாகவே வெளியில் இருந்து வந்த அவர்களின் கருத்துக்களை பழக்க வழக்கங்களை வெளியேற்ற வேண்டும் (மனிதர்களை அல்ல) என்ற ஒரு கருத்தை சொன்னதே உங்களுக்கு ஒத்து கொள்ள முடியவில்லை.இவர்களும் நம்மில் ஒருவரே. என்னடா இவன் சுத்தி சுத்தி இங்கேயே வருகிறானே என்று நினைக்க வேண்டாம்.

    // அந்த கட்டிடத்தை இடித்த ஒரு தவறை சுட்டி காட்டி இன்று வரை பல தீவிரவாத செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்… // இது தவறு என்று ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒருவராவது உணர்கிறீர்களே!//
    உணர்ச்சி வசப்பட்டு நம் ஆட்கள் செய்த தவறுதான் அது. வெற்றி வாய்ப்பு நமக்கு நிறையவே இருக்கும் போது அந்த தவறை செய்யதிருந்திருந்தால், இன்று நீங்கள் மற்றும் உங்களை ஒத்த கருத்துடையோர் நம் பக்கம் இருப்பார்கள்.

  69. பாபு, // ஓகே அப்போ சட்டம் மாற்றுவதற்கான போராட்டம் இந்து அமைப்புகள் நடத்தினால் உங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் அல்லது குறைந்த பட்சம் எதிர்கமாலாவது இருப்பீர்கள் என்று நம்புகிறேன். // இதில் ஒரு clarification கொடுக்க வேண்டி இருக்கிறது. சட்டம் மாற்றப்பட்டால் process சரியாக இருக்கிறது, விளைவுகள் தவறு என்று நினைத்திருப்பேன். அதாவது சட்டத்தை மாற்ற அரசுக்கு உரிமை உண்டு, ஆனால் அந்த உரிமை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைத்துரிப்பேன். ஷா பானோ கேசிலும் அப்படித்தான் – சட்டத்தை மாற்றும் உரிமை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட்டது – என்று நினைக்கிறேன்.

    // உங்கள் கருத்து ஏற்புடையாதாக இருந்தாலும் நம்மில் ஒருவராக உள்ளவர்களை அன்னியபடுத்தி பேசும் கோட்பாட்டை நாம் ஏன் கையில் எடுக்கவேண்டும். // முதலில் இருந்த நிலை திரும்ப வேண்டும் என்ற கோட்பாடு இங்கே வாதங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு moral , ethical underpinning ஆக பயன்படுத்தப்படுகிறது. அது சரியான கோட்பாடு அல்ல என்று நிறுவவே.

  70. இந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டி மூடப் படுகிறது.

    அயோத்தி பற்றிய தங்கள் கருத்துக்களை அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை பதிவிலும் மற்றும் அதற்குப் பின்வரும் பதிவுகளிலும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Comments are closed.