அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை வைபவம் நம் காலத்தில் நாம் கண்களால் காண நிகழ்ந்த ராம பட்டாபிஷேகம்… ராம் லாலா என்ற குழந்தை ராமர் வழிபாடு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப் படவில்லை, அதற்கு குறைந்தபட்சம் 500 ஆண்டு பாரம்பரியம் உண்டு… தமிழ்நாட்டில் ராமாயணத்தை எரித்த இந்து விரோத அரசியல் கயவர் கூட்டத்தின் அதர்ம கொள்கைகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவை தான் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள். இவற்றை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்?…

View More அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

Path to War: படம் நமக்களிக்கும் பாடம்

சில நாட்களுக்கு முன் ‘Path to War’ என்ற ஹாலிவுட் படத்தை ஏதோ ஒரு ஓடிடி தளத்தில் பார்த்தேன். வியட்நாம் போர் எப்படி அமெரிக்க முடிவுகளால் வடிவமைக்கப்பட்டது என்பதை காட்டும் படம்.. இறந்த ஒவ்வொரு அமெரிக்க வீரனுக்கும் சில நூறு அப்பாவி வியட்நாம் ஆசியர்கள் இறந்திருக்கிறார்கள். வியட்நாமியர்கள் இவை குறித்து பெரிதாக திரைப்படங்கள் எதுவும் எடுத்து சர்வதேச வெளியில் அமெரிக்கா போல ஒப்பாரி வைத்ததாக தெரியவில்லை. தம் வலிகளைத் தாண்டி தம் வலிமையால் பிரகாசிக்கிறார்கள். இறுதியில் தெரியக்கூடிய விடயம் ஒன்றே ஒன்றுதான். உன் மண்ணில் வேர் கொண்ட தலைவன் உன்னை தன் குடும்பமென்று நினைக்கக் கூடிய தலைவன் – அப்படி ஒருவனால் மட்டுமே நீ காப்பாற்றப்பட முடியும். அதனால் தான்…

View More Path to War: படம் நமக்களிக்கும் பாடம்

ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..

View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்

திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.

View More திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்

மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…

View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…

View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

தங்கலான்: திரைப்பார்வை

கானக மண்ணிலேயே இயல்பாக உருவான காந்தாரா படத்தின் தொன்மம் போல அல்லாமல், அயோத்திதாசரின் கட்டற்ற கற்பனையில் எழுந்த இனவாத கட்டுமானம் கொண்ட டுமீல் புராணங்களிலிருந்து பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளது தங்கலானின் தொன்மம்.. இந்தப் படத்தின் அரசியல் வெறுப்பு ரீதியானது, இது முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல் பொய்யானது. அதற்கு சான்றாக, மதுரைப்பிள்ளை, சுவாமி சகஜானந்தர், எம்.சி.ராஜா, ஜி.எஸ்.லட்சுமண ஐயர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இவர்களின் வரலாறுகளை எல்லாம் நாம் திரைப்படமாக்காத வரை…

View More தங்கலான்: திரைப்பார்வை

ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…

View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு

எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?

தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட – இத்தனை பேரின் – வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு – நிலம் பறிபோன பின்னும் – பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில் – நீ இருந்ததில்லை.. ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி – நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள் – அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?…

View More எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?

தங்கலான்

உள்ளடக்கம் சார்ந்துமே ரஞ்சித்தின் அரசியல் நெடி அடிக்கும் காட்சிகள் நீங்கலாக படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த அரசியல் என்பது மலினமானதாக இருப்பதாலும் அது படுசெயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் இந்தப் படம் சுமார் என்ற தளத்துக்கு இறங்கிவிடுகிறது. மேல்பூச்சான கலை இனிப்பு கரைந்த பின் கசப்பு அரசியல்தானே.

View More தங்கலான்