குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக பிப்-12 ஞாயிறு அன்று கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு.. 25,000 ஸ்வயம் சேவகர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அரு.இராமலிங்கம், ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத்.. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்… பல துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்… வரவேற்புக் குழுவில் சமூகப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்..

View More குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் – அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது… மேலும் பல செய்திகள்.

View More இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம்.. ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது… நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி அளவும் குறைந்து கொண்டு இருக்கிறது.. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை அணுச்சக்தியால் மட்டுமே தீர்க்க முடியும்…

View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன

View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்… ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு? இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு?… அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்… நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது?…

View More சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக் கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தன் குறிப்பிட்டார்… ஜோ டி குரூஸ் அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார்… கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் எஸ்.ராமச்சந்திரன்… அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது….

View More உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

உடையும் வீரமணி – பாகம் 2

தமிழ்ஹிந்து இணைய தளத்தை தி.க. அரங்கில் அறிமுகப்படுத்தி அதன் பெயரை விமர்சித்தார் வீரமணி… வன்முறை நேரடி நடவடிக்கையை சொல்லி ஒரு மாநில முதலமைச்சரையே மிரட்டியவர் தான் ஈவெரா. … ஈ.வெ. ராமசாமி வகையறாக்களை காமராஜர் எப்படி நடத்தினார், இந்துத்துவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கூறினால்…வீரமணியும் அவரது கும்பலும் தமிழ்நாட்டில் பரவலாக கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆர்ப்பாட்டங்களை எங்கெங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்?… வேர்ல்ட்விஷன் போன்ற பன்னாட்டு மதமாற்ற அமைப்புகளின் பணம் எவருடையது?…

View More உடையும் வீரமணி – பாகம் 2

உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.. ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர்… இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது… ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவும், ‘ஆரிய’ என்பது சமூக அந்தஸ்து சார்ந்த பதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது…

View More உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி

முந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்… அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது… போர்களில் இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும்? ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது வரி சுமத்தாமல் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது நல்லது என்கின்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறது…

View More கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி

முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது.

View More முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்