சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள்…. எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், அதிமுக, திரிணாமூல், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.. லோக்சபாவிலும் சரி, ராஜ்ய சபாவிலும் சரி, எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது. இது கையாலாகாதவன் பீம புஷ்டி லேஹியம் சாப்பிட்டது போலத் தான் இருக்கிறது…

View More சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான். எதிரிக்கு அவகாசம் ஏதும் கொடுக்காமல் திடீரென்றும், இலை மறைவு காய் மறைவு ஏற்பாடுகளுடன் இரவோடு இரவாகவும் சரித்திரத்திலும், சமீப காலத்திலும் காணப்படும் சில போர்களில் இருந்து இது வித்தியாசமானவை.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

டிசம்பர்-6 அன்று கேப்டன் நியூஸ் தொலைக் காட்சியின் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் பால. கௌதமன் மற்றும் பேரா. ஜைனுலாபிதீன். அயோத்தி விவகாரம் சட்டப் பிரசினையா மதப்பிரசினையா? அயோத்தியில் இருந்த பழமையான ஆலயம் இடிக்கப் பட்டதா என்பது குறித்து வரலாறும் அகழ்வாராய்ச்சியும் என்ன கூறுகிறது? இந்தப் பிரசினையில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து பேசுகிறார்கள்.. பாவம் அந்த இஸ்லாமிய பெரியவர். அவரைப் பார்க்க பரிதாபமாகவும், பால.கௌதமனை பார்க்க பெருமையாகவும், இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் போலி மதச்சார்பின்மைகளை நினைத்தால் அருவருப்பாகவும் இருக்கிறது. விவாதத்தின் வீடியோ பதிவு கீழே….

View More அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…

View More தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

திருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா!

விவேகானந்தர் 150-வது பிறந்த ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, திருப்பூர் அறம் அறக்கட்டளை,…

View More திருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா!

தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு

இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச். இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான். இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை.

View More தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது…. கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்… .
கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக்…

View More திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்….. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு… தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை…

View More 2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

கருநாகமொத்த குழல்

கருணை, பொறுமை மற்றும் அன்பு இக்குணங்கள் அத்தனைக்கும் ஒருங்கே உறைவிடமான ராதா தேவியினது குழல் எப்படி கொடிய விஷமுடைய கருநாகத்துடன் ஒப்பிடப்பட்டது என விசனமுற்றார்… தேவியின் கால்கள் தரையில் கோலமிடுகின்றன. கோலமா? ராதையின் கால்களா? இல்லையில்லை. ஏதோ எழுதுகின்றன. என்ன தான் எழுதும் அவை? அனிச்சையாக தேவியின் திருப்பாதங்கள் ‘க்ருஷ்ண க்ருஷ்ண’ என எழுத்தின் மேல் எழுத்தாக எழுதுகின்றன… ஆஹா இது என்ன கொடுமை? இவ்வளவு ஆனந்தம் மிகும் இக்கணத்தில் ராதையும் கண்ணனும் சேரப் போகும் நேரத்தில் இதென்ன மாபெரும் ஆபத்து?….

View More கருநாகமொத்த குழல்