ஒரு பெரிய பிரசினை வேண்டும். மணி ரத்தினத்துக்கு அது ஒரு கோட்ஸ்டாண்ட். அதில் அவர் தன் காதல் கதையை, பாடல்களை, நடனங்களை, அழகான லொகேஷன்களை, அழகான புகைப்படக் காட்சிகளைத் தொங்க விடுவார்…. ஆனாலும் ரஸவாதம் செய்வதில் மணிரத்தினத்திடம் ஒரு கெட்டிக்காரத்தனம், இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஓடும் ரயில் வண்டியின் மேல் கும்மாங்குத்து ஆட வைத்த தைரியம் வேறு யாருக்கு வந்தது?… என்ன கற்பனை ஐயா, கலை உலக மேதைக்கு! கல்யாணம் எல்லாம் நல்லா நடந்திச்சாய்யா,? என்று கேட்டால் சாப்பாட்டிலே வடை போட்டாங்க, பிரமாதம்” என்று சொல்ல வேண்டி வந்தால் என்ன அர்த்தம்?… மகாதேவன் ரிபேர் வேலையில் ஒரே பாசமழை பொழிகிறது. சிவாஜி கணேசன் சாவித்ரி ஜோடியைத் தான் புக் செய்ய வேண்டியிருக்கும்…ஆனாலும் மகாதேவன் ஒரு விக்கிரக விநாசன். அந்த காரியத்தை மிக நன்றாகச் செய்கிறார். திரை உலகிலிருந்து இப்படி ஒருவர் வந்துள்ளது சந்தோஷம் தரும் ஒன்று. இங்கு விக்கிரஹங்கள் நிறைய மண்டிக் கிடக்கின்றன…
View More வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”Category: கலைகள்
இந்து கலாசாரத்தின் இணைபிரியாத அங்கங்களாக விளங்கும் பாரம்பரிய இசை, நடனம், சிற்பம், நாட்டுப்புறக் கலைகள்…
கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!
தணிக்கைத் துறையை விட மேலானவர்களான இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல்…. முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா? கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா? திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?….கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா? உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா? உண்மையிலேயே முகமது நபி இவ்வாறு தான் கூறினாரா?…
View More கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்
ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போது இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள்… இணையத்திற்கு வெளியே, கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களிடமிருந்து கவனிக்கத் தக்க வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது… வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துபவர் கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு கமல் மூன்று நாட்கள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் அளித்த பரிசு – ”விநாயகர் என்று ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார்”… தமிழக அரசின், காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு, தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக ஆவதற்குத் தான் வழிவகை செய்து கொண்டிருக்கிறது….
View More விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்என் பார்வையில் தமிழ் சினிமா
தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப் பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை. அது சந்தைக்கு தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை. ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக் கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்…. முற்றிலும் மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைப் பற்றி சொல்கிறேன். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். மொழி ஒடியா, படத்தின் பெயர்….
View More என் பார்வையில் தமிழ் சினிமாதுப்பாக்கி – திரை விமர்சனம்
ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ஸ்லீப்பர் செல் என்றால் இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ் தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும். அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக்குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம் குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதை கண்டறிவது மிகவும் கடினமான பணியாக மாறக்குடியது. சுருக்கமாக சொன்னால் இது ஒரு அவுட்சோர்ஸிங் டெக்னிக் (terriost outsourcing technique). தொடர் குற்றச்செயல்களை pert, cpm மாதிரியான மேலாண்மை திட்டங்கள் மூலம் சிறு, சிறு திட்டக்குழுவாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் தொடர்பில்லாத வேறு, வேறு வகை நிகழ்வுகளாக பிரிக்கப்பட்டு ,தொடர்பில்லாத பல பேரிடம் ஒப்படைக்கப்படும். அவரவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறு,சிறு வேலைகளை மட்டுமே செய்வர். யாருக்கும் திட்டத்தின் முழு வடிவம் என்ன என்று தெரியாது. திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதன் முழு வடிவமும் தெரியும். இது ஒரு அசெம்ப்ளி லைன் பணிகள் போன்ற ஒழுங்குடன் செய்து கச்சிதமாக முடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கதற கதற கொன்று ஒழிக்கப்படுவார்கள். இதில் உள்ள சிறிய உறுப்புகளாக இருப்பவர்களைத்தான் ஸ்லீப்பர் செல்கள் என்பார்கள்.
View More துப்பாக்கி – திரை விமர்சனம்சாட்டை – திரை விமர்சனம்
அனைத்தையும் எதிர்த்து தனிமனிதனாக ‘அரசாங்க வாத்தியாக’ கேள்வி கேட்கும், போராடும் தயாளன் எனும் இளம் இயற்பியல் ஆசிரியர். ஹீரோயிசம் இல்லாமல் வேறென்னவாக இருக்கப் போகிறது என்று கேட்கலாம் தான்… அவருடைய பெரிய வலிமை அவருடைய மதிப்பீடுகள் மட்டுமே என காட்டப்படுவதுதான் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய தார்மிக வலிமை. நம் தமிழ்ச் சூழலில் அது தான் வர்த்தக ரீதியான பலவீனமும்… இத்திரைப்படம் தமிழில் வந்தது தமிழ் சமுதாயத்துக்கு நிச்சயமாக பெருமையளிக்கும் விஷயம். பிரபு சாலமன் உட்பட ஒவ்வொருவரையும் பெருமைப்படுத்த வேண்டியது அனைத்து இந்து இயக்கங்களின்…
View More சாட்டை – திரை விமர்சனம்மாற்றான் – திரைப் பார்வை
விஞ்ஞானியான ராமச்சந்திரன், தனக்கு இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளைக்கூட மரபணு முறையிலேயே பெறத் துடிக்கும் மரபணு வெறியர்… நமது நாட்டில் மரபணு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நகரத்து மக்களிடம் இல்லை. அதை ஏதோ கிராமத்து மக்களின் வெற்றுக் கூச்சல் என்று நினைக்கிறார்கள். அது தவறு என்பதை இந்தப் படம்… இயக்குநரை பல இடதுசாரிகள் வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள். திருடனுக்குத் தேள் கொட்டினால் வியர்க்கத்தானே செய்யும்?
View More மாற்றான் – திரைப் பார்வைகாலந்தோறும் நரசிங்கம்
பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.
View More காலந்தோறும் நரசிங்கம்கோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை
மாமல்லபுரத்தில் எழுந்துள்ள சர்ச்சை! ஸ்தல சயனப் பெருமாள் கோவிலை மத்தியத்தொல்லியல் துறை எடுத்தாள்வது சரியா என்பதாகும். அரசியல்வாதிகள் கூக்குரலுக்கும், உள்ளூர் சுயநலவாதிகளின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல், கோவிலுக்கும், அந்த தலத்திற்கும் வரும் நன்மைகளை மனதில் கொண்டு, மக்கள் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதனை விளக்கவே இந்த கட்டுரை.. மத்திய தொல்லியல் துறையின் கீழ் வாழும் கோவில்களில் பூஜைகள் ஆகம விதிப்படி தொடர்ந்து நடக்கும் கோவில்கள் பலப்பல – வடக்கே பூரி ஜெகன்னாதர் கோவில், துவாரகா, தஞ்சை பிரகதீஸ்வரர் தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோவில்… (முனைவர் தியாக. சத்தியமூர்த்தி அவர்களின் கட்டுரை)
View More கோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வைஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்
வாஸ்கோட காமா கடல் வழி கண்டுபிடித்த கனவான் அல்ல; அவன் ஒரு கிறிஸ்தவ மதவெறி பிடித்த கடற்கொள்ளையன் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் துணிச்சலான ஒரு முயற்சியே… ஆக்கிரமிப்பாளனுக்கு உதவும் அரவாணி அமைச்சரின் துரோகச் செயல்கள் சுதந்திர இந்தியாவிலும் அரசியல் வாதிகளால் தொடர்வதை குறியீடாக காட்டி இருப்பது அற்புதம்… பல காட்சிகள், ஒளிப்பதிவு நுட்பத்துக்கான முன்மாதிரிகளை உருவாக்கி உள்ளன. உருமி ஒவ்வொரு முறை சுழலும்போதும் காமிராவும் அழகாகச் சுழல்கிறது….
View More உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்