கம்பராமாயணம் – 3

கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி.
இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது.

மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள் அறுந்து போகுமாறு நதி ஓடுகிறது; யானையும் ஓடும்போது அதனை அலங்கரிக்கக் கட்டியுள்ள மணிகள் அறுந்துபோகுமாறு ஓடக்கூடியது. நதியின் கரையெங்கிலும் அதன் வெள்ளம் பெருகி…

View More கம்பராமாயணம் – 3

பாலராமாயணம் – 2

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.

அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….

View More பாலராமாயணம் – 2

அனுமன் வேதம் – கவிதை

தளர்வு தகர்க்கும் சோம்பல் துடைக்கும்
மயக்கம் அறுத்து மனம் தெளிவிக்கும்
மாண்பு பெருக்கும் மாருதி மந்திரம்

அச்சம் தவிர் அச்சம் தவிர் என
அறைந்து முழங்கும் அனுமன் வேதம்

View More அனுமன் வேதம் – கவிதை

அன்னை காளி – கவிதை

(மூலம்: சுவாமி விவேகானந்தர்)
நண்பா
துக்கத்தையும் துணிந்து காதலி
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்.

View More அன்னை காளி – கவிதை

அவர்-அவன்

பேர்சொல்லப் பிள்ளையும் பேரனும் பேத்தியும்
பெற்றதில் பெருமை கொண்டார்.அவன்
பாருக்குள் நற்றமிழ் நாட்டினை விட்டிட
‘போர்’என்று புலம்பி நின்றார்…

வாய்ப்புள்ள போதெல்லாம் பேசிக் கொள்வார்.அவர்
வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வார்
‘வாய்ப்’பினில், ‘சாட்’டினில் தம்மக்கள் பெருமையை
வாயாறப் பீற்றிக் கொள்வார்…

View More அவர்-அவன்

இந்து மகத்துவக் கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

View More இந்து மகத்துவக் கும்மி

கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

“என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.”

View More கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

நகரம் நானூறு – 5

“கல்லறைமேல் வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!”

வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.

View More நகரம் நானூறு – 5