பாரதி: மரபும் திரிபும் – 9

சர் கர்ஸன் வில்லி மற்றும் டாக்டர் லால்காகா ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்ற மதன்லால் திங்காராவின் செயலை ஆதரித்து எழுதப்பட்ட கட்டுரையை எதிர்த்து மூன்று மாதங்கள் ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்… பாரதியின் வாழ்க்கை முழுவதுமே போராட்டங்களால் சூழப்பட்டிருப்பினும் அவர் பயங்கரவாதத்தை எப்போதுமே ஆதரித்ததில்லை… பாரதி நினைத்ததெல்லாம் இந்தியருக்கு சுய உணர்ச்சி வரவேண்டும். அப்போதுதான் அவன் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடுவான் என்பதுதான்… வியாச பாரதத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார் பாரதி. இந்தச் சபதம் பாரதியின் கற்பனையில் உருவான சபதம் இல்லை…

View More பாரதி: மரபும் திரிபும் – 9

மகாகவி பாரதியின் புனித நினைவில்…

அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை…

View More மகாகவி பாரதியின் புனித நினைவில்…

போகப் போகத் தெரியும் – 25

தேசியக்கல்விக்காக பணம் வசூலித்துவிட்டு மாணவர்களுக்குள் வேற்றுமைக்கு இடம் தந்தது ஐயரின் தவறுதான்..

View More போகப் போகத் தெரியும் – 25

ஓடிப் போனானா பாரதி? – 10

‘இந்தியா’ பத்திரிகையின் – சர்ச்சைக்குரியதாக வண்ணம் தீட்டப்படும் – அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்துக்குத் திரும்புவோம். இந்தத் தலையங்கத்தின் சில துண்டுகளை மட்டும் ஆய்ந்த ஆய்வாளர்கள், எழுதியவனின் இதயம் வெளிப்படும் முக்கியமான பகுதிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆய்வுகளில் மேற்கோள் காட்டும்போது ஒரு சில பகுதிகளைத்தான் காட்டமுடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும், தான் காட்டும் மேற்கோளின் தன்மை, அந்தப் பகுதியைத் தனியாகப் படித்தால் உண்டாகக் கூடிய – மையப்புள்ளியின்று விலகக் கூடிய – கருத்து உருவாக்கம் போன்றவற்றை மனத்தில் கொள்ளாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

View More ஓடிப் போனானா பாரதி? – 10

ஓடிப் போனானா பாரதி? – 09

எனவே, பாரதி சீனிவாசனை ‘சிக்க வைத்துவிட்டான்’ என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை’ என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ‘நம்பி இருக்கலாம்.’

View More ஓடிப் போனானா பாரதி? – 09

ஓடிப் போனானா பாரதி? – 08

முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள ‘இந்தியா கேஸ்’ என்ற தலைப்பிட்ட ‘இந்தியா’ பத்திரிகையின் தலையங்கத்தின் இரண்டு பகுதிகளும் அப்படித்தான் ஆகியிருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் – தலையங்கத்தின் மூன்றாவது பத்தியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தின் ஒரே ஒரு பகுதியும், கடைசிப் பத்தி முழுமையும் – உருவாக்கும் எண்ணம் என்வென்றால், ‘சீனிவாசன் ஒரு தேசபக்த விரோதி. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததன் மூலம் தேச பக்திக்கு விரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டார். நாம் அப்படிச் செய்யக் கூடாது. (அல்லது, ‘அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டோம்.’)…

View More ஓடிப் போனானா பாரதி? – 08

ஓடிப் போனானா பாரதி? – 07

இதுவரையில் இந்தத் தலைப்பில் ஆய்ந்தவர்கள் எல்லோரும் சீனிவாசனுடைய வாக்குமூலத்தை ஊன்றிப் படிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சீனி. விசுவநாதன் வெளியிட்டிருக்கும் ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ (தொகுதி 3) இந்த வாக்குமூலத்தின் முழு வடிவத்தைத் தந்திருக்கிறது. இந்த வாக்குமூலத்தில் ஒரு மிக முக்கியமான பகுதி எப்படி இத்தனை நாள், இவ்வளவு தேர்ந்த ஆய்வாளர்களின் கண்களில் படாமல் போனது என்ற வியப்பே மேலிடுகிறது. முரப்பாக்கம் சீனிவாசன் தன் வாக்குமூலத்தில் சொல்கிறார்…

View More ஓடிப் போனானா பாரதி? – 07

ஓடிப் போனானா பாரதி? – 06

சரி. பாரதிதான் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் அரசாங்கத்தை விமரிசித்தான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். இது உண்மையானால், ‘மிகவும் மிதமான போக்கை உடையவர்,’ என்று அறியப்பட்ட ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதுசெய்யப்படுவானேன், ‘வெதுவெதுப்பான வாக்கியங்களை’ எழுதிவிட்டு, highly defamatory என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்துவின் ஆசிரியரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைதாகலாம் என்று அஞ்சப்படுவானேன்?

View More ஓடிப் போனானா பாரதி? – 06

ஓடிப் போனானா பாரதி? – 05

இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாள் முன்னால் – ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று – ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகிறது. ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது.

View More ஓடிப் போனானா பாரதி? – 05

ஓடிப் போனானா பாரதி? – 03

‘இந்தியா பத்திரிகை சென்னையில் வெளி வர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்,’ என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார், ‘சித்திர பாரதி’க்கு எழுதிய முன்னுரையில் சொல்கிறார். சீனி. விசுவநாதனின் ஆய்வின்படி, இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்குப் பின்னால் ‘பால பாரத’ பத்திரிகை ‘இந்தியா’ பத்திரிகையின் நிறுவனர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா பத்திரிகையின் நிர்வாகிகளில் ஒருவர் சொல்கிறார், ‘பாரதியின் ஆங்கில எழுத்தை அவர் இந்தியாவில் எழுதத் தொடங்கும் முன்பிருந்தே அவர் ‘பாலபாரத’ பத்திரிகையில் எழுதி வந்ததன் மூலம் அறிவேன்,’ என்று!

View More ஓடிப் போனானா பாரதி? – 03