திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்

திருமந்திரத்தைப் பற்றிய தமிழ் தி இந்து கட்டுரையில் ‘தக்பீர்’ முழக்க (அல்லாஹு அக்பர்) உதாரணம் ஏன் வருகிறது? கயிலாயத்தில் இருந்து வந்த யோகி, வேதாகமப் பொருளை, தமிழ் பேசும் மண்டிலத்தவருக்கு விளக்கிச் சொல்கிறார் திருமூலராக. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? இதுதான் ஆபிரஹாமிய மதங்களுக்கும் சைவத்துக்கும்தான் ஏதோ தொடர்பிருப்பது போல காட்டும் திருகு வேலை..

View More திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்

‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின…. எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்… இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை….

View More ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்… சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை…

View More தவ முனிவனின் தமிழாகமம்

அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்…

View More அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

அறியும் அறிவே அறிவு – 12

கற்றவன் என்ற கர்வம் வந்ததால் எண்ணம், பேச்சு என்று எதிலும் தனது தனித் தன்மையை நிலை நாட்டும் செயல்களில் ஈடுபடுவதால் வாதங்கள் புரிவதிலும், தனது பெயரையும், புகழையும், பற்றுகளையும் பெருக்கிக் கொள்வதில் காலத்தைச் செலவிடுமே தவிர, தான் பெற்ற அறிவால் தன்னைத் தெரிந்து கொள்ளும் வழியில் இருந்து தப்பிச் சென்றுவிடும். இதுதான் அடி முடி தேடிய புராணத்தில் பிரமன் சென்று தெளிந்த பாதை […]

View More அறியும் அறிவே அறிவு – 12

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2

எந்தப் பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம்தான். ஆனால்… வைஷ்ணவக் கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும் சமூகத்தில் எழுப்பப்பட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை அகற்றுவதில் இராமானுஜரின் வைஷ்ணவம்… சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை…

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2

அறியும் அறிவே அறிவு – 4

ரமணரின் “நான் ஆன்மாதான்” என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி “அருணாச்சல அஷ்டக”த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், “அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்” என்கிறார்.

View More அறியும் அறிவே அறிவு – 4

அறியும் அறிவே அறிவு – 3

அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது [..] இது பக்தி வழி என்றால், அது ஞான வழி என்றும், இரண்டும் ஒரே இடத்திற்கு சாதகனை இட்டுச் செல்கிறது என்றுதானே அர்த்தம்? [..] மெய்யான ஞானத்தை விட்டு விதவிதமாகத் தோன்றும் உலக ஞானம் தனித்து நில்லாது. (ஆனாலும்) உலகம் தோன்றும்போது ஆத்மா தோன்றாது. ஆத்மா தோன்றும்போது உலகம் தோன்றாது [..]

View More அறியும் அறிவே அறிவு – 3

பெரியாழ்வாரின் பட்டினம்

எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்து விட்டதால் விஷ்ணுசித்தருக்கு இப்பொழுது தைரியமும் தன்னம்பிக்கையும் வந்து விட்டது. இதற்குமுன் தன் ஐம்புலன்களையும், நோய்களையும். மரணத்தையும், யமதூதர்களையும் கண்டு அஞ்சிய விஷ்ணுசித்தர் இப்பொழுது அதே ஐம்புலன்களையும், நோய்களையும், யமதூதர்களையும் தாமே வலிய அழைத்து, தன் அச்சமின்மையையும் தான் பாதுகாப்பாக இருப்பதையும் கர்வத்தோடு எடுத்துச் சொல்கிறார்…

View More பெரியாழ்வாரின் பட்டினம்