ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

செயல்முறை தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியோ, தாய்நாட்டின் மீது ஏற்படும் காதல் உணர்வோ அல்ல. மாறாக, சக தேசத்தவர்களுக்குச் சேவை செய்வதற்கான வெறி. நான் இந்தியா முழுதும் நடந்தே சுற்றியிருக்கிறேன். மக்களின் அறியாமை, துயரம், வறுமை இவற்றை என்னிரு கண்களால் பார்த்திருக்கிறேன். என் ஆன்மா பற்றி எரிகிறது. இந்தக் கொடிய நிலையை மாற்றும் பேராசை என்னை எரிக்கிறது.

View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 3

இந்து மகத்துவக் கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

View More இந்து மகத்துவக் கும்மி

இந்து மதம் – கேள்வி பதில்: 1

இந்த பிரிவில் இந்து மதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தொகுக்கவிருக்கிறோம். முதல் பகுதி இது – ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன? – திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது? – சுவர்க்கம், நரகம் என்பது என்ன? – நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா? ….

View More இந்து மதம் – கேள்வி பதில்: 1

கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

“என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.”

View More கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?

பூஜ்யம் மற்றும் தசம எண் முறை (decimal number system) இவற்றின் தோற்றம் பற்றி, இவை பாரத நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று உலகளாவிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.

View More பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?

மாதா அமிர்தானந்தமயி அவர்கள் – அமெரிக்கா மற்றும் கனடாவில்

2008 மே 30 முதல், ஜூலை இறுதிவரை ‘அம்மா’ ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, ‘அரவணைக்கும் ஞானி’ (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.

View More மாதா அமிர்தானந்தமயி அவர்கள் – அமெரிக்கா மற்றும் கனடாவில்

கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.

View More கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு