திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்

மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான்…. எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூரில் திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளை பின்னர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைப்பதில்லைவில்லை….. கூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம் செய்தான்…

View More திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்

குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி

கொட்டில்பாடு எஸ் துரைசாமி – வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார் ஜோ தமிழ்ச்செல்வன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர்… தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல்…. இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது….. நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள்…

View More குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி

திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

ஹைதர் அலிக்கும், திப்பு சுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணீமண்டபம் அமைக்கப் படும் என்று தமிழ்க முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.. மதவெறியர்களான, வன்முறையாளர்களான இந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமிழக அரசாலும் மக்களாலும் போற்றத் தகுந்தவர்களா? வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. ஜெர்மன் மிஷநரி எழுதுகிறார் – ”திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”…. நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள்… யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை ஆளப்பட்டு வந்தது. திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது. அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது…. திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்… .

View More திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4

ஒரு கட்டத்தில் நம்மை சுற்றிலும் வெறும் நீர் பிரபஞ்சம், வான் உள்ளிட்ட அனைத்தும் நீரால் நிறைந்து இருப்பதான தோற்றம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர் என்ற உருவகம் தான் வருணனை முழு முதற்கடவுளாக வழிபடும் மரபு தோன்றியிருக்க காரணமாக இருக்க கூடும் . கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழ்ந்த இடமாக இருக்கிறது.சிலிக்கா ஏரியின் பிரமாண்டம் அபூர்வமானது. நடுவில் ஆச்சரியப்படுத்தும் சில நீர்பறவைகள் இளைப்பாறும் சதுப்புகள், . மீன்பிடிக்கும் படகுகள், பாரம்பரிய பாய்மரங்களில் பயணிக்கும் மீனவர்கள். நடுவில் உள்ள தீவுக்கு சாமான்களை ஏற்றிச்செல்லும் படகுகள் என்று அங்கங்கே தென்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் படகுகளில் முழுக்க நிரம்பி வேடிக்கை பார்த்து கொண்டு சுற்றி வருகிறார்கள்

இந்த உலகில் எவ்வளவு சிறிய உயிரினமாகவும் சிறிய அலகாகவும் நாம் இருக்கிறோம். மேலும் எவ்வளவு தனிமை நிரம்பியதாக இருக்கிறது இந்த உலகம். மொத்த மக்கள் தொகையை விடவும் புல்லினங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை உணர்ந்த போது ஒரு சிறிய அச்சம் தோன்றி மறைந்தது. மனிதர்கள் பறவைகளை வேட்டையாடுவதற்கு பதில் பறவைகள் மனிதனை வேட்டையாடத்துவங்கினால் சில வாரங்களில் மனித இனம் மொத்தமாக இல்லாமலாகி விடும் என்றெல்லாம் எண்ணமிட்டுக்கொண்டு வந்தேன். பறவைகளே இவ்வளவு இனி மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள், சிறு உயிரிகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் மனிதன் தான் சிறுபான்மையினனாக இருந்து கொண்டு அனைத்து வளங்களையும் சுரண்டி அனுபவித்து கொண்டிருக்கிறான் . என்ற உண்மை புரிகிறது.

View More பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2

ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளது… இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது… இஸ்லாமிய படைத்தலைவர்கள் ஊர்களை எரியூட்டி அழித்தும், ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள். பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து விடுவார்கள்.மேற்கு வங்கத்தில் இருந்த கம்யூனிஸ் அரசோ அரசாணை வெளியிட்டு இஸ்லாமிய கொடுரர்கள் செய்த பேரழிவுகளை வரலாற்றில் மறைக்க சொல்லி ஆணையிடும்…

View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2

பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….

View More பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

அயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்

ராமர் விளையாடிய இடங்களில் நான் நடக்கிறேன் என்ற எண்ணம் அளிக்கும் உச்சபட்ச சிலிர்ப்பில், என் பாதங்களால் வணங்கியபடியே நடை பயில்கிறேன். சுற்றிலும் வெறும் துணி கட்டப்பட்ட நிலையில், எந்தப் பாதுகாப்பும் இன்றி ராமர் இருக்கிறார்…. ”ராம் லாலாவிற்கு கோயில் எழுப்பும் வரை காலில் செருப்பு அணிவதில்லை என்று சங்கல்பம் செய்து, அப்படியே தொடர்கிறோம், நூறாண்டுகளுக்கு மேலாக” என்கிறார்… 1990 கரசேவையின் போது துப்பாக்கிச் சூடு. செத்த உடல்களைக் கொண்டு இந்தப் படுகொலை பற்றி உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்ற கயமை நோக்கத்தோடு, சடலங்களை சாக்குகளில் கட்டி அப்படியே சரயூ நதியில் தூக்கி வீசி விட்டார்கள். அயோத்தி எங்கும் ரத்த ஆறு; சரயூ நதி அன்று செந்நிறமாக ஓடியது….

View More அயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்

அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

டிசம்பர்-6 அன்று கேப்டன் நியூஸ் தொலைக் காட்சியின் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் பால. கௌதமன் மற்றும் பேரா. ஜைனுலாபிதீன். அயோத்தி விவகாரம் சட்டப் பிரசினையா மதப்பிரசினையா? அயோத்தியில் இருந்த பழமையான ஆலயம் இடிக்கப் பட்டதா என்பது குறித்து வரலாறும் அகழ்வாராய்ச்சியும் என்ன கூறுகிறது? இந்தப் பிரசினையில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து பேசுகிறார்கள்.. பாவம் அந்த இஸ்லாமிய பெரியவர். அவரைப் பார்க்க பரிதாபமாகவும், பால.கௌதமனை பார்க்க பெருமையாகவும், இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் போலி மதச்சார்பின்மைகளை நினைத்தால் அருவருப்பாகவும் இருக்கிறது. விவாதத்தின் வீடியோ பதிவு கீழே….

View More அயோத்தி குறித்து ஒரு டிசம்பர்-6 தொலைக்காட்சி விவாதம்

காலந்தோறும் நரசிங்கம்

பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.

View More காலந்தோறும் நரசிங்கம்

ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்

”ஸ்டாலின் உண்மையில் ஒரு ராக்ஷஸன். எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும், அவரது கூட்டாளிகளின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லை. எந்நேரமும் அவர்கள் கைதுசெய்யப்படலாம், பொய் வழக்கில் மரண தண்டனை வழங்கப் படலாம்” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார் க்ருஷ்சேவ்…. சிறையிலிருந்து தப்பிய ஒரு பாட்டாளி, தன் பாட்டாளி நண்பனின் வீட்டில் தஞ்சம் புகலாம் என்று ஓடி வருகிறான். ஆனால் போலீஸ் அவனைத் துரத்துகிறது. பாட்டாளி நண்பனின் மனைவி கதவைத் திறக்கிறாள். தானும் பாட்டாளிகள் போராட்டத்துக்கு தன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்த அந்தப் பெண்….

View More ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்