மனித முயற்சிக்கும் அப்பாற்பட்ட காவியம் ஒன்றைப் படைப்பதற்கு எது நடந்தாலென்ன என்றதொரு துறவு மனமற்று, சுற்றுமுற்றும் பார்த்து உள்ளம் கனிந்து உருக வேண்டிய நிகழ்ச்சி ஒன்று தேவைப்பட்டது. அதுவும் வால்மீகி முனிவருக்குத் தானாகவே அமைந்தது… ராம ராஜ்யத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் அனைவருமே ராமரைப் போலவே நீதி, நேர்மையுடன் வாழ்வதால் அரசு என்றோ அரசாங்கம் என்றோ ஒரு அதிகாரத்துடன் கூடிய அமைப்பு கூடத் தேவை இல்லாத நிலை உருவாகும்… அரசு அலுவல்களின் ஒரு பகுதியாக தானம் செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு, வசிஷ்ட மகாமுனிவர் அவர்கள் எத்தகைய மனப்பான்மையுடன் தானம் அளிக்கவேண்டும் என்று கூறுகிறார்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2பாரதி: மரபும் திரிபும் – 2
இவர்கள், இவரின் தலைவர் ஆகியோரெல்லாம் காந்தியத்தின் மீது கடும்தாக்குதலை நடத்தினால்கூட பொறுத்துக் கொள்வார். ஆனால் பாரதி விமர்சிக்கலாமா காந்தியத்தை? வந்ததே கோபம் மதிமாறனுக்கு. உடனே பேனாவை எடுத்தார். பார்த்தீர்களா பாரதி, காந்தியை, காந்தியத்தை விமர்சித்துவிட்டு, பின் அவரையே பாராட்டுகிறார் என்று நமக்கு விளக்குகிறார்… காந்தியைப் புகழ்ந்து இப்படி எழுதும்போதே ஈவேராவுக்குக் கூச்சமாகவும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அரசியல் செய்ய வேண்டி இருக்கிறதே என்று அவரது மனம் அமைதிப்படுத்தியிருக்கும்…
View More பாரதி: மரபும் திரிபும் – 2எழுமின் விழிமின் – 8
தாழ்த்தப் பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனை அற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே !… மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது?” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. ‘குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்’ – ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ?…இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்…
View More எழுமின் விழிமின் – 8இந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012
பங்குனி உத்திரம் – திருக்கல்யாண உற்சவம். இளவேனில் காலத் தொடக்கத்தை இறைவனின் திருமண விழாவாகக் கொண்டாடும் தமிழ்மரபு தான் எத்துணை அழகானது!… காலகாலமாக முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப் படலாம் என்கிற வகையில் அரசு யோசித்து வருவதாக மத்திய அமைச்சர்… “மகாத்மாவை இருட்டடித்து மார்க்சைப் பற்றி சொல்லித் தர முடியாது” என்கிறது மேற்கு வங்க மாநில அரசு.. கர்நாடகாவில், இந்து தெய்வங்களை இழிவாகப் பேசி சமூக அமைதியைக் குலைத்ததற்காக 11 கிறிஸ்தவ மிஷநரிகளுக்கு சிறைத் தண்டனை… நெடுஞ்சாலையை அகலப் படுத்துவதற்காக, பனங்காட்டூர் புராதன சிவாலயம் இடிக்கப் படுமா?…
View More இந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்
ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன… அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன்… அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது…
View More ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்மலேகான் முதல் மகாடெல்லி வரை
குறைந்தது 9 இஸ்லாமியத் தீவிரவாதிகளாவது மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசே ஒப்புக்கொள்கிறது. பிறகு திடீரென்று சடசடவென மாற்றங்கள் ஏற்பட்டன. கைது செய்த பின் அவர்கள் மீது முறையான வழக்குகள் தொடுப்பதற்குப் பல ஆண்டுகள் கழிந்தன. குற்றவாளிகள் தப்புவதற்குத் தேவையான பல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, நடக்க வேண்டியவை நடக்காமல் போகின்றன. மலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் மாற்றப்படுகிறர்கள். மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பலரும் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தும், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு இல்லாத பூச்சாண்டிப் பயங்கரவாதத்தை அரசே உருவாக்கி மக்களை மிரட்டி வருகிறது.
View More மலேகான் முதல் மகாடெல்லி வரைபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?
இவ்விரு போராட்ட களங்களில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் போர்க்களத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்து அதில் கலந்து கொண்டு முன்னணியில் நிற்போர் யாரென்று பார்த்தால் பல கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எனும் போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. ..நாடு முழுவதும் 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2009-10ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 3218 நிறுவனங்களுக்கு இந்த அயல் நாட்டுப் பணம் பாய்கிறது என்பதையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது…வெளிநாட்டு நிதி என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும் இந்த நிதி குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.
View More புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?எழுமின் விழிமின் – 7
“…எது எளிது? ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வளர்ந்து உருப்பெற்ற நமது தேசீய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? அல்லது சில நூற்றாண்டுகளாக நீங்கள் ஒட்டவைக்கப் பார்க்கிற அந்நிய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? ஆங்கிலேயர்கள் தமது யுத்தரீதியான பழக்க வழக்கங்களை மறந்து, போரிடுவதையும் ரத்தம் சிந்துவதையும் கைவிட்டு விட்டு, சாந்தமாக, அமைதியாக உட்கார்ந்து சமயத்தையே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுவதில் தமது சக்தி முழுவதையும் ஏன் ஒருமுகப்படுத்தக்கூடாது?…”
View More எழுமின் விழிமின் – 7இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1
நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)
இந்தியாவில் தான் சிறுபான்மை அமைப்புகள் என்ற பெயரில் பெருமளவு பண மோசடி, மதமாற்றம், அமைதியைக் குலைத்தல் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபட முடிகிறது. இதை விசாரித்தால், உடனே இந்து மதம் என்ன வாழ்கிறது? சாதி கொடுமைகள் இந்து மதத்தில் தானே இருக்கின்றன என்பார்கள். இந்த சாதி என்ற ஒன்றை வைத்தே இந்துக்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தையும் மறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சாதியத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும் சட்டங்கள் இயற்றுவதும், உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்துவதுமாக மாற்றங்களை முன்னெடுப்பது இந்துக்களே. இதை இந்துக்களும் உணரவேண்டும்.
View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)